search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees at"

    • பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்திட தற்காலிக இரும்பு சீட் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இந்தாண்டு ஆடி முதல் நாள் மற்றும் ஆடி கடைசி நாள் என 2 நாட்களில் அமாவாசை வருகிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக கூடு துறை சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்தக் கோவிலில் பின்பகுதியில் இரட்டை விநாயக சன்னதி படித்துறை யில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார தலம், சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீர் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இதனால் பவானி கூடுதுறையில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. மேலும் அன்று ஆடி அமா வாசை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனால் பவானி கூடுதுறைக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கான வர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து சங்க மேஸ்வரர் கோவில் நிர்வாக த்தின் சார்பில் கோவில் பின் பகுதியில் பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்திட தற்காலிக இரும்பு சீட்டினால் ஆன செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதேபோல் கோவிலின் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி பவானி போலீ சார் மூலம் பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தாண்டு ஆடி முதல் நாள் மற்றும் ஆடி கடைசி நாள் என 2 நாட்களில் அமாவாசை வருகிறது.

    இதனால் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு 2 அமாவாசை தினங்களிலும் பரிகார பூஜைகள் செய்து வழிபட உகந்தது என புரோகிதர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் கூடுதுறை புனித நீராடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • குதிரை பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது.
    • பக்தர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் பலர் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு இன்று காலை அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை வழி பட்டனர்.

    இதனால் காலை வேளையில் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    அப்போது கோவிலுக்குள் ஒரு குதிரை திடீரென கோவிலுக்குள் புகுந்தது. கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் இருந்தனர். இதையடுத்து அந்த குதிரை பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இதையடுத்து கோவில் பணியாளர்கள் குதிரையை கோவில் இருந்து வெளியே விரட்டும் பணியில் ஈடு பட்டனர். ஆனால் அந்த குதிரை கோவில் வளாக த்திலேயே நின்று கொண்டு இருந்தது.

    இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஒரு வித அச்ச உணர்வோடு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து சிறுது நேரத்துக்கு பிறகு அந்த குதிரை கோவில் வளாகத்தில் இருந்து வெளி யே சென்றது.

    இதனால் இன்று காலை அந்தியூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அந்தியூர் பகுதியில் ஏராளமான குதிரைகள் சுற்றி திரிகிறது. மேலும் குதிரை ரோடுகளில் போக்குவரத்து இடையூறும் ஏற்படும் வகையில் உள்ளது. தற்போது கோவிலில் புகுந்து பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்தியூர் பகுதியில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புற ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமமாக உள்ளது. மேலும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் எனவும் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வந்து கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீரில் விடுதல், பிண்டம் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து செல்வது வழக்கம்.

    இதனால் விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்திருந்தனர். மேலும் இன்று பவுர்ணமி தினமாக உள்ளதால் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்தனர்.

    இதையொட்டி அதிகாலை முதல் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடுமுபத்துடன் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி திதி, தர்ப்பணம் மற்றும் பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து முன்னோரை வழிபட்டனர்

    மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    இதனால் கூடுதுறை பகுதியில் பல்வேறு இடங்க ளிலும் இன்று அதி காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு தங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கே அமர்ந்து சாப்பிட்டனர்.

    ×