என் மலர்
நீங்கள் தேடியது "rath yatra"
பா.ஜனதா ரத யாத்திரைக்கு அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #BJP #RathYatra #SupremeCourt
புதுடெல்லி:
மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் டிசம்பர் 7 முதல் 14-ம் தேதி வரை பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பா.ஜனதா கட்சி முடிவு செய்தது.
இதற்கு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பா.ஜனதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பா.ஜனதா மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பா.ஜனதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரிய பா.ஜனதாவின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜனதாவின் ரத யாத்திரையால், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என, மாநில அரசு கவலை தெரிவித்துள்ளதை ஒதுக்க முடியாது. எனவே, சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில், நியாயமான முறையில், ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் டிசம்பர் 7 முதல் 14-ம் தேதி வரை பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பா.ஜனதா கட்சி முடிவு செய்தது.
இதற்கு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பா.ஜனதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பா.ஜனதா மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பா.ஜனதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரிய பா.ஜனதாவின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜனதாவின் ரத யாத்திரையால், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என, மாநில அரசு கவலை தெரிவித்துள்ளதை ஒதுக்க முடியாது. எனவே, சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில், நியாயமான முறையில், ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #BJP #BJPyatra #AmitShah
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் ரத யாத்திரைகளை நடத்துவதற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா திட்டமிட்டார். இதில் முதல் யாத்திரை கூச்பெகர் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்குவதாக இருந்தது.
ஆனால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி அளிக்க மாநில அரசு மறுத்து விட்டது. இந்த முடிவை எதிர்த்து அம்மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக, அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைகளை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டபடி எல்லா ரத யாத்திரைகளையும் நாங்கள் நடத்தியே தீருவோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளில் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மூன்று மாவட்டங்களில் நடத்தவுள்ள ரத யாத்திரைக்கு அம்மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்கி, யாத்திரைக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மனுவின் மீது சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்துமா? அல்லது, கொல்கத்தா ஐகோர்ட் முன்னர் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி, மனுவினை தள்ளுபடி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு பா.ஜ.க.வினரிடையே மேலோங்கியுள்ளது. #BJP #BJPyatra #AmitShah
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் ரத யாத்திரைகளை நடத்துவதற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா திட்டமிட்டார். இதில் முதல் யாத்திரை கூச்பெகர் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்குவதாக இருந்தது.
ஆனால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி அளிக்க மாநில அரசு மறுத்து விட்டது. இந்த முடிவை எதிர்த்து அம்மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இவ்வழக்கில் தீர்ப்பளித்த கொல்கத்தா ஐகோர்ட், பா.ஜ.க. ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இதுதொடர்பாக, அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைகளை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டபடி எல்லா ரத யாத்திரைகளையும் நாங்கள் நடத்தியே தீருவோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளில் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மூன்று மாவட்டங்களில் நடத்தவுள்ள ரத யாத்திரைக்கு அம்மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்கி, யாத்திரைக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மனுவின் மீது சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்துமா? அல்லது, கொல்கத்தா ஐகோர்ட் முன்னர் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி, மனுவினை தள்ளுபடி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு பா.ஜ.க.வினரிடையே மேலோங்கியுள்ளது. #BJP #BJPyatra #AmitShah
மேற்கு வங்காளத்தில் பாஜக நடத்தவுள்ள ரதயாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #Rathyatra #BJP #KolkattaHighCourt
கொல்கத்தா:
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்க உள்ளார். ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
இதையடுத்து ரதயாத்திரை நடத்த அனுமதி கோரி மாநில பாஜக சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மத ரீதியிலான மோதல்கள் ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தார். இதையடுத்து பாஜக சார்பில் ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பாஜக ரதயாத்திரைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், ரத யாத்திரைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்தார்.
இதுதொடர்பாக, நீதிபதி தபப்ரதா சக்கரவர்த்தி கூறுகையில், ‘12 மணி நேரம் மட்டுமே பேரணி நடத்த வேண்டும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் ரதயாத்திரையை நடத்த வேண்டும். யாத்திரையால் பாதிப்பு வந்தால் அதற்கான முழு பொறுப்பும் பாஜகவை சேரும்’ என்றார்.
கொல்கத்தா நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாநில பாஜகவினர் வரவேற்றுள்ளனர். #Rathyatra #BJP #KolkattaHighCourt
மேற்கு வங்காளத்தில் அமித்ஷா ரத யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. #AmitShah #RathYatra #Bengal
கொல்கத்தா:
பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் 3 ரத யாத்திரைகளை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளார். இதில் முதல் யாத்திரை கூச்பெகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதாக இருந்தது.
ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் 3 ரத யாத்திரைகளை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளார். இதில் முதல் யாத்திரை கூச்பெகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதாக இருந்தது.
ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
கேரளாவில் பாஜக சார்பில் 6 நாள் நடைபெற உள்ள சபரிமலை பாதுகாப்பு ரதயாத்திரையை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தொடங்கி வைத்தார். #SabarimalaRathYatra #SabarimalaProtests
காசர்கோடு:
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியபோது, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் துஷார் வேலப்பள்ளி ஆகியோர் தலைமையில் நடைபெறும் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரையானது, சபரிமலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட இடது சாரி அரசாங்கத்தின் கண்களை திறக்கச் செய்யும் என்றார். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு பினராயி விஜயன் அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரத யாத்திரை துவக்க விழாவில் மங்களூர் எம்பி நளின் காட்டீல், பாஜக தேசிய இணை ஒருங்கிணைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ரத யாத்திரை, வரும் 13ம்தேதி சபரிமலையை சென்றடைய உள்ளது. #SabarimalaRathYatra #SabarimalaProtests
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள பாஜக சார்பில் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை இன்று தொடங்கியது. காசர்கோடு மாவட்டம் மாத்தூர் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து இந்த யாத்திரையை கர்நாடக மாநில பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியபோது, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் துஷார் வேலப்பள்ளி ஆகியோர் தலைமையில் நடைபெறும் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரையானது, சபரிமலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட இடது சாரி அரசாங்கத்தின் கண்களை திறக்கச் செய்யும் என்றார். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு பினராயி விஜயன் அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரத யாத்திரை துவக்க விழாவில் மங்களூர் எம்பி நளின் காட்டீல், பாஜக தேசிய இணை ஒருங்கிணைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ரத யாத்திரை, வரும் 13ம்தேதி சபரிமலையை சென்றடைய உள்ளது. #SabarimalaRathYatra #SabarimalaProtests