என் மலர்
நீங்கள் தேடியது "Jagannath temple"
- லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்தனர்.
- பூரி நகர் வீதிகளில் தேர்கள் அசைந்து சென்ற காட்சியை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500 பேர் காயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.
வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், தேரின் வடங்களைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
- மரபுகளை கேலி செய்வதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர்.
- ராமர் மற்றும் லட்சுமணனுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பூரி:
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகண நிகழ்வின் போது ஓடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் பிரியாணி விருந்துக்கு இந்து மத எதிர்ப்பாளர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த குழுவை தாக்கியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்து கடவுள்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி, பூரி ஜெகநாதர் கோவில் பணியாளர்கள் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது நூற்றாண்டு பழமையான மரபுகளை கேலி செய்வதன் மூலம் பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் என்று அந்தக் கடிதத்தில், 36 வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கிய சேவகர்கள் அமைப்பான சத்திஷா நிஜோக் குற்றம் சாட்டி உள்ளது.

இந்து மத எதிர்ப்பாளர்கள் குழு கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு எதிராக தொலைக்காட்சி சேனல்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், ஜெகநாதருக்கு கோழி உணவை பிரசாதமாக வழங்கலாம் என்று கூட அவர்கள் கூறி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்களில் ஈடுபடும் இந்துமத எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினையால் ஒடிசா மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டால் அதற்கு மாநில அரசுதான் பொறுப்பு என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- கோயிலில் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் சிக்கினர்.
- மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி.
ஹரியானாவில் உள்ள கோயிலின் சுவர் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சிக்கியுள்ளதாகவ தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஜெகநாதர் கோயில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது.
இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் சிக்கினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், முதற்கட்டமாக ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 4 பேரையும் மீட்பு குழுவினர் மீட்டனர். இந்த 5 பேரில், 4 பேர் நலமுடன் உள்ளதாகவும், ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- பூரி பட்டத்து அரசர் கஜபதி மகாராஜாவின் பிரதிநிதி உள்ளிட்ட 11 பேர் உடனிருந்தனர்.
- பொக்கிஷ அறையில் உள்ள நகைகள் குறித்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலயத்தின் ஆபரணங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பொக்கிஷ அறை 40 ஆண்டுகளுக்குப் பின் இன்று திறக்கப்பட்டது.
12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிற அறையில் (ரத்ன பந்தர்) பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரிய ஆபரணங்கள், மன்னர்கள் நன்கொடையாக அளித்த அரிய நகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறை கடைசியாக 1978-ம் ஆண்டு திறக்கப்பட்டு நகைகள் கணக்கெடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னர் 1985-ல் பொக்கிஷ அறையை திறந்தனர். ஆனால் அறையின் நிலை மிகவும் மோசமாக இருந்ததாலும், பாம்புகள் போன்ற ஆபத்தான பூச்சிகள் சூழ்ந்திருந்ததாலும் பெட்டிகளைதிறந்து நகைகளை கணக்கெடுக்க முடியாமல் போனது.
இந்நிலையில், பொக்கிஷ அறையின் நகைகளை கணக்கிடுவதற்காக ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பொக்கிஷ அறையை திறக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி குழுவின் உறுப்பினர்கள் இன்று மதியம் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஊழியர்களின் உதவியுடன் பொக்கிஷ அறையை திறந்தனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பொக்கிஷ அறை திறக்கப்பட்டபோது முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத், ஜெகநாதர் கோவில் தலைமை நிர்வாகி அரபிந்த பதி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி.பி. கடநாயக் மற்றும் பூரி பட்டத்து அரசர் கஜபதி மகாராஜாவின் பிரதிநிதி உள்ளிட்ட 11 பேர் உடனிருந்தனர்.
பொக்கிஷ அறையில் உள்ள இரண்டு பகுதிகளில் உள்ள பெட்டிகளில் உள்ள நகைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பொக்கிஷ அறையில் உள்ள நகைகள் குறித்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் பொக்கிஷ அறையின் நிலை மோசமாக இருப்பதால், முதலில் புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்றும், அதன்பின்னர் பெட்டிகளை திறந்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்றும் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி.பி.கடநாயக் கூறி உள்ளார். பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பு நிறைந்த வேறு ஒரு அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) மாற்றப்படும். அங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
- சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் அரசின் உயர்மட்டக்குழுவினர் ரத்ன பண்டாரை திறந்தனர்.
- கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
புரி:
ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறையில் (ரத்ன பண்டார்) கோவிலுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறை கடைசியாக கடந்த 1978-ம் ஆண்டு திறக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜனதா அரசு ரத்ன பண்டாரை திறக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14-ந் தேதி ரத்ன பண்டார் திறக்கப்பட்டது.
சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் அரசின் உயர்மட்டக்குழுவினர் ரத்ன பண்டாரை திறந்தனர். அன்றைய தினம், ரத்ன பண்டாரின் வெளிப்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைத்து தற்காலிக ரகசிய அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில் ரத்ன பண்டார் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அரசின் உயர்மட்டக்குழுவினர் காலை 9.51 மணிக்கு ரத்ன பண்டாரை திறந்தனர்.
அதன் பின்னர் ரத்ன பண்டாரின் உட்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக ரகசிய அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
ஒடிசா அரசால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக்குழுவின் தலைவரும், ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான பிஸ்வநாத் ராத் வைத்த கோரிக்கையின் பேரில் புரி மன்னர் கஜபதி மகாராஜா திவ்ய சிங் தேப், ரத்ன பண்டாரில் இருந்து தற்காலிக ரகசிய அறைக்கு ஆபரணங்கள் மாற்றப்பட்டதை நேரில் ஆய்வு செய்தார்.
இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும் ரத்ன பண்டாரில் பாம்புகள் இருக்கலாம் என நம்பப்படுவதால் பாம்பு பிடிப்பவர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
ரத்ன பண்டாரின் உள்அறையில் இருந்து ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை மாற்றும் போது, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பாரம்பரிய உடையுடன் ரத்ன பண்டாருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக பூரி கலெக்டர் சித்தார்த் ஷங்கர் ஸ்வைன் தெரிவித்தார்.






