search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allow"

    • வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.
    • கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.

    உடுமலை:

    உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், மாவடப்பு , காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக வறட்சியான காலங்களில், ஆழியார் அணைக்குள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை கொண்டு சென்று பட்டி அமைத்து அங்கேயே தங்கி மேய்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    நடப்பாண்டு 3 மாதத்திற்கு முன் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆழியார் அணைக்கரையில் மாட்டுப்பட்டி அமைத்து அங்கேயே தங்கி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் மாடுகளை மேய்த்து வருகின்றனர். மழை அதிகம் பெய்து அணைக்கு நீர் வந்தால், குடியிருப்பு பகுதியில் தீவனப்புல் வளர்ந்து விட்டால் மாடுகளை திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.இந்நிலையில் வனத்துறையைச் சேர்ந்தவர்கள், மாடுகளை மேய்க்கக்கூடாது என கூறி வருகின்றனர்.

    இதற்கு முன் இதே போல் பிரச்சினை ஏற்பட்ட போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு, வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.எனவே மலைவாழ் மக்கள் ஆழியார் அணையில் மாடுகளை மேய்க்க அனுமதியை பெற்றுக்கொடுத்தார். அதற்கு பின் கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.

    அணையில் மாடுகளை மேய்க்க வரும் போது, தாடக நாச்சியம்மன் சுவாமிக்கு நேர்ந்து சாமி கிடா விட்டு வளர்ப்பது வழக்கம். திரும்ப செல்லும்போது கிடா வெட்டி சாமி கும்பிட்டு விட்டுச்செல்வார்கள்.அதற்கும் தடை விதிக்கின்றனர். எனவே, கோட்டாட்சியர் தலையிட்டு, பாரம்பரியமாக மாடுகளை மேய்க்கும் மலைவாழ் மக்கள் உரிமையை பாதுகாத்து, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மலைக்கோவிலுக்கு மேலே செல்லும் சுற்றுப்பாதை முழுமையாக புதிதாக செப்பனிடுதல் பணிகள் இருந்தாதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    • அடிவாரத்தின் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்திலும், மலைமீது அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடங்களிலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பிரசத்தி பெற்றது. இந்த மலைக்கோவிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் முதல் மலைக்கோவிலுக்கு மேலே செல்லும் சுற்றுப்பாதை முழுமையாக புதிதாக செப்பணிடப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வந்ததால் மலைப்பாதையில் எந்த வாகனங்களையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    பக்தர்கள் அனைவரும் படியிலேயே ஏறிச்சென்றனர். வயதானவர்கள் பலரும் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவரோடு போடும் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு திருக்கோவில் அடிவாரத்தில் பக்தர்கள் அதிகம் பேர் வந்ததால் மலைப்பாதை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

    இதனால் அடிவாரத்தின் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்திலும், மலைமீது அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடங்களிலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். #NewYear2019
    சென்னை:

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஓட்டல்களில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை நியமிக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    2018-ம் ஆண்டு விடைபெறுகிறது. 2019 புத்தாண்டு வருகிற செவ்வாய்க்கிழமை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை நகரில் கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும், ஆட்டம்-பாட்டத்தோடு இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் பாதுகாப்பான முறையில், புத்தாண்டு கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்யவேண்டும்? என்பது குறித்து போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    அதன் விவரம் வருமாறு:-

    * புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணி வரை கொண்டாடலாம்.

    * 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது.

    * ஆனால் மது பார்கள் அந்தந்த ஓட்டல்கள் லைசென்சு பெறும்போது, என்னென்ன நேரம் ஒதுக்கப்பட்டதோ, அந்த குறிப்பிட்ட நேரம் வரை திறந்து வைத்திருக்கலாம்.

    * சில ஓட்டல்களில் 24 மணி நேரமும் மது பார்களை திறந்து வைத்திருக்க அனுமதி பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த ஓட்டல்களில் மட்டும் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணி வரையோடு மது பார்களை மூடிவிட வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    * பெண் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கவனிப்பதற்காக பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.

    * புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களிடம் அத்துமீறி நடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களை அனுமதிக்கக்கூடாது.

    * வாடிக்கையாளர்களின் கார்களை சோதிக்க வேண்டும்.

    * வாடிக்கையாளர்களின் உடைமைகளையும் சோதிக்க வேண்டும்.

    * ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    * போதையில் இருக்கும் வாடிக்கையாளர்களை வாகனம் ஓட்டிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. உரிய டிரைவர்களை ஏற்பாடு செய்து போதையில் இருப்பவர்களை கார்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

    * தேவைப்பட்டால் டிராவல்ஸ் நிறுவனங்களின் கார்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

    * புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களை மூடிவிட வேண்டும். நீச்சல்குளத்தின் மேல் பகுதியிலோ அல்லது அருகிலோ புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான மேடை எதையும் அமைக்கக்கூடாது.

    * நீச்சல் குளங்களை மூட வசதியில்லாதபட்சத்தில், அருகில் காவலாளிகளை காவலுக்கு நிறுத்த வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களின் வாசல்கள், வாகன நிறுத்தும் இடங்கள், இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும், கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

    மொத்தத்தில் விபத்து இல்லாமல், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற இடம் கொடுக்காமல், மகிழ்ச்சியாக புத்தாண்டு விழாவை கொண்டாட ஓட்டல் நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் அறிவுரைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். #NewYear2019
    மேற்கு வங்காளத்தில் பாஜக நடத்தவுள்ள ரதயாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #Rathyatra #BJP #KolkattaHighCourt
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்க உள்ளார். ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
     
    இதையடுத்து ரதயாத்திரை நடத்த அனுமதி கோரி மாநில பாஜக சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மத ரீதியிலான மோதல்கள் ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தார். இதையடுத்து பாஜக சார்பில் ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 



    மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பாஜக ரதயாத்திரைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், ரத யாத்திரைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்தார்.

    இதுதொடர்பாக, நீதிபதி தபப்ரதா சக்கரவர்த்தி கூறுகையில், ‘12 மணி நேரம் மட்டுமே பேரணி நடத்த வேண்டும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் ரதயாத்திரையை நடத்த வேண்டும். யாத்திரையால் பாதிப்பு வந்தால் அதற்கான முழு பொறுப்பும் பாஜகவை சேரும்’ என்றார்.

    கொல்கத்தா நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாநில பாஜகவினர் வரவேற்றுள்ளனர். #Rathyatra #BJP #KolkattaHighCourt
    அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து திமுக தரப்பில் ஐகோர்ட்டில் இன்று முறையிடப்பட்டது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தி.மு.க. முடிவு செய்தது. கமி‌ஷன், கரப்சன்,கலெக்சன் என்ற தலைப்பில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்திருந்தது.

    இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காதது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடர உள்ளோம். அந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை தாக்கல் செய்யுங்கள், திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார். #DMK #MadrasHC
    நிலக்கோட்டையில் 15 நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்த கடந்த 15 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்கப்பட்டது. முதலில் இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது கடந்த 4 நாட்களுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் மாவட்ட செயலாளர் பசும்பொன் முத்தையா மதுரை ஐகோர்ட்டு கிளையில் இது குறித்து மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் 15 நிபந்தனைகளுடன் கூட்டம் நடத்த போலீசாருக்கு உத்தர விட்டார்.

    இதனையடுத்து இன்று கூட்டம் நடைபெற அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் இந்துமக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்துக்கு காலை முதலே போலீசார் அதிக அளவு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க விவசாய விளைபொருட்களை தமிழக அரசு பஸ்களில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க விவசாய விளைபொருட்களை தமிழக அரசு பஸ்களில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.



    சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரம்புக்குள் டீசலை கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். இதற்கு பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

    தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு சரக்கு ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருக்கின்றன. சென்னையில் மாதவரம், மஞ்சம்பாக்கம், மதுரவாயல் பைபாஸ், எண்ணூர் உள்பட பல இடங்களில் லாரிகளை சாலை ஓரமாக டிரைவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள லாரி டிரைவர்கள், கிளனர்கள் ஆங்காங்கே லாரிகளை சாலையோரங்களில் நிறுத்தி, லாரிகளிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். பலர் உணவு, தங்குமிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் வேலைநிறுத்தத்தை கைவிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு எப்போது அழைப்பார்கள்? என்ற எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

    இதுகுறித்து தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறியதாவது:-

    நாடு முழுவதும் சுமார் 95 லட்சம் வாகனங்கள் இந்த வேலைநிறுத்தத்தால் ஓடாமல் ஆங்காங்கே நிற்கின்றன. தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மட்டும் 26 லட்சம் வாகனங்கள் இயங்கவில்லை.

    இதில், 4 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளும் அடங்கும். விசாகப்பட்டினம், தூத்துக்குடி, சென்னை, நெல்லூர் துறைமுகங்களில் இருந்து சரக்குகளை ஏற்றுவதற்கு லாரிகள் செல்லவில்லை.

    நாளை (திங்கட்கிழமை) முதல் பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் லாரிகளின் உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற இருக்கின்றனர். அதன்பிறகு வேலைநிறுத்தத்தின் வீரியம் அதிகரிக்கும்.

    நாளொன்றுக்கு பொருட் கள் மதிப்பு மீதான ரூ.24 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி வரை வரி இழப்பும், ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரையிலான நேரடி வரி இழப்பும் மத்திய அரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    இதுவரை மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. உடனடியாக நிலையை புரிந்து கொண்டு எங்களை அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்வுகாண வேண்டும். அதுவரை எங்களுடைய வேலைநிறுத்தம் கடுமையாக இருக்கும்.

    ஏற்கனவே பலமுறை நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்களை ஏமாற்றிவிட்டது. இந்த முறை எங்களுடைய கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக செய்து தருவதாக மத்திய அரசு உறுதியளித்து, அதை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டியம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. இவை அனைத்தும் பெரும் பாலும் லாரிகள் மூலமாகவே வந்து சேர்கின்றன.

    நேற்று 2-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்றபோதிலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கம் போல் காய்கறிகள் வந்தன. விற்பனையும் வழக்கம் போல் நடைபெற்றதுடன், விலையிலும் பெருமளவு மாற்றம் ஏதும் இல்லை.

    இது குறித்து காய்கறி சில்லரை வியாபாரி சுப்பிரமணி என்பவர் கூறும்போது, “லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தாலும், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று (நேற்று) வழக்கம் போல் காய்கறிகள் வந்துவிட்டன. நாங்கள் விற்பனை செய்வதற்காக கொள்முதல் செய்யும் காய்கறிகளின் அளவும் குறையவில்லை. விற்பனையும் குறையவில்லை. அதே நேரம் விலையும் ஏறவில்லை” என்றார்.

    எனினும், லாரிகள் வேலை நிறுத்தத்தின் பாதிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை (திங்கட்கிழமை) பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக விவசாய விளைபொருட்களை தமிழக அரசு பஸ்களில் இலவசமாக ஏற்றிச்செல்ல அரசு அனுமதி அளித்து உள்ளது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், லாரிகள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் எவ்வித கட்டணமும் இன்றி, இலவசமாக ஏற்றிச்செல்ல அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. 
    நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை கடந்த 2 நாட்களாக வலுவடைந்தது. இதையொட்டி அருவி மற்றும் நீரோடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    களக்காடு தடுப்பணையே தெரியாதவாறு, தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. ஆற்றுக்கு இறங்கி செல்லும் முதல்படி வரை வெள்ளம் கரை புரண்டது. இதுபோல திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. சப்பாத்தில் உள்ள பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் கடந்த 9-ந் தேதி திருமலை நம்பி கோயிலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீ அணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை, போலீசார் கயிறு கட்டி மீட்டனர்.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி களக்காடு புலிகள் காப்பகத்தை மூட, களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன் ஆலோசனையின் பேரில், களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டார்.

    எனவே 10-ந் தேதி புலிகள் காப்பகம் மூடப்பட்டது. இதையடுத்து தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயில் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, அங்கு வனசரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது. இதனால் நம்பிகோவிலுக்கு பக்தர்கள் செல்லத்தொடங்கினர்.

    இந்நிலையில் களக்காடு தலையணையில் வெள்ளபெருக்கு குறையாததால் அங்கு செல்ல விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது.

    ×