search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "star hotel"

    • சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.
    • 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    சோழிங்கநல்லூர்:

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு உள்ள சென்னை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    குறிப்பாக மெரினா கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், ரிசாட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.

    இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிழக்கு கடற்ககரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் பண்ணை வீடுகள் புத்தாண்டு கொண்டா ட்டத்துக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

    இதையொட்டி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். புத்தாண்டையொட்டி வருகிற 31-ந்தேதி இரவு சென்னை நகரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், நீலாங்கரை, அக்கரை, உத்தண்டி கோவளம், மாமல்லபுரம், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன் னேற்பா டுகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிர படுத்தவும் கடற்கரை பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை முழுவதும் 500 இடங்களில் வாகன சோதனைகளிலும் ஈடுபடுகிறார்கள். மெரினா காமராசர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்காக 25 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் மணலிலும் கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. மெரினா, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. டிரோன் மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீ சார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    மாமல்லபுரம் பகுதிகளில் இருக்கும் கடற்கரை ரிசார்ட், ஓட்டல்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடு ளுக்கான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது டி.ஜே. என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்தக்கூடாது, விருந்தினர்களை கடலில் குளிக்க அனுமதிக்க கூடாது, தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் என்ற பெயரில் அடாவடி நபர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அப்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார்.

    • 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "கால்டன் சமுத்திரா" நட்சத்திர ஹோட்டலில் 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கேக் தயாரிப்பதற்காக திராட்சை, ஜெரி, பப்பாளி, ஸ்டாபரி, பைனாப்பிள் உள்ளிட்ட பலவகை டிரை புரூட்ஸ் 120கிலோவும், விஸ்கி, பிராந்தி, உட்கா, ஜின், ரம், பக்காடி உள்ளிட்ட மதுபானங்கள் 60லிட்டரும் சேர்க்கப்பட்டது.

    சின்னத்திரை பிரபலங்கள், பிரபல சமையல் கலைஞர்கள், சுற்றுலா விருந்தினர்கள், ஹோட்டல் பணியார்கள் என 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர். பின் அவைகளை 3 பேரல்களில் மூடி வைக்கப்பட்டது. 40நாட்கள் கழித்து ஊரவைக்கப்பட்ட டிரை புரூட்ஸ், மதுபான கலவையை எடுத்து அதில் 240கிலோ கேக் செய்யப்பட உள்ளது.

    • புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
    • மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வானூர்:

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .

    அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பணம் செலுத்தாதற்கு ஓட்டலின் ஊழியர்கள் சிலர் உதவி புரிந்ததாக தெரியவந்தது.
    • கட்டண ஏய்ப்பு குறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள 'ரோசேட் ஹவுஸ்' என்கிற ஐந்து நட்சத்திர ஓட்டலில், அக்குஷ் தத்தா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி அறை ஒன்றை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து தங்கினார். மறுநாள் காலிசெய்து சென்றிருக்க வேண்டிய அவர், மாதக்கணக்கில் அங்கேயே தங்கியும் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை என்று தெரிகிறது.

    இப்படி 2021-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி வரை தொடர்ந்து 20 மாதங்களுக்கு மேல் தங்கிய அவர், சுமார் ரூ.58 லட்சம் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் பைசா கட்டணம்கூட அவர் செலுத்தவில்லை.

    இந்த விவரங்கள் ஓட்டலின் கணக்குத் தணிக்கையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் பணம் செலுத்தாதற்கு ஓட்டலின் ஊழியர்கள் சிலர் உதவி புரிந்ததாகவும் தெரியவந்தது.

    இந்த கட்டண ஏய்ப்பு குறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாடகை பாக்கி வைத்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    • இளம்பெண்கள் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது.
    • இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னை:

    எங்கே செல்லும் இந்த பாதை... யாரோ யாரோ அறிவாரோ... என்கிற பாடலை நினைவுபடுத்தும் வகையில் சென்னையில் இளம்பெண்கள் நடுரோட்டில் போதையில் தள்ளாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    கோயம்பேடு பகுதியில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் சாலையில் சென்னை மாநகராட்சி சிக்னல் சந்திப்பில் ஒரு கருப்பு நிற காரில் 4 இளைஞர்களும், 3 இளம்பெண்களும் வந்து இறங்கினர். அனைவரும் புத்தாண்டு மது விருந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததை அவர்கள் அணிந்திருந்த ஆடை உணர்த்தியது.

    3 பெண்களும் கவர்ச்சியாக அரை குறை ஆடையை அணிந்திருந்தனர். 3 பேருமே போதையில் தள்ளாடிய நிலையில், ஒருவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இரவில் நடனம் ஆடிய கவர்ச்சி உடையிலே அந்த 3 பெண்களும் வந்திருந்தனர். 'வாந்தி' வருகிறது என ஒரு பெண் கூறியதாலேயே வாலிபர்கள் காரை ஓரமாக நிறுத்தி உள்ளனர். இதையடுத்து போதை பெண் கீழே இறங்கினார்.

    அவர் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது. பின்னர் 4 இளைஞர்களும், 3 பெண்களையும் காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    மது குடிப்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிற நிலைமை மாறி இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். 'ஆணுக்கு பெண் சமம்' என்பது இது தானோ...

    • விலை உயர்ந்த சொகுசு கார்களில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது.
    • பாதுகாவலர்களை மாறிமாறி தாக்கினர்.

    கோவை :

    கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று இரவில் சிறப்பு நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. எனவே இதில் தம்பதிகள் பலர் பங்கேற்று மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினார்கள்.

    இந்த நிலையில் இரவு விலை உயர்ந்த சொகுசு கார்களில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி, தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதி உண்டு, இல்லை என்றால் உள்ளே செல்லக்கூடாது என்று கூறினார்கள்.

    அதற்கு அந்த வாலிபர்கள் தங்களிடம் இருந்த பணத்தை எடுத்து எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம். எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர்களை பாதுகாவலர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அங்கிருந்த பாதுகாவலர்களை மாறிமாறி தாக்கினர்.

    இதை கண்டு ஓட்டலில் இருந்த மற்ற பாதுகாவலர்கள் அனைவரும் அங்கு வந்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மோதலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் தங்களிடம் உள்ள செல்போன் மூலம் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள்அந்த வாலிபர்கள் மற்றும் ஓட்டலில் உள்ள பாதுகாவலர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து ஓட்டல் கணக்காளர் திருப்பூரை சேர்ந்த விஷ்வபாரதி (24) எனபவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர்கள் லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்படும் புதிய எம்.பி.க்கள் டெல்லியில் இனி ஓட்டல்களில் தங்கவைக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஏழு கட்டமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் புதிய எம்.பி.க்கள், வழக்கமாக டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைப்படுவார்கள். இதனால் அரசுக்கு செலவு ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்படும் புதிய எம்.பி.க்கள் டெல்லியில் இனி ஓட்டல்களில் தங்கவைக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மக்களவை செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், புதிய எம்.பி.க்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வெஸ்டர்ன் கோர்ட் கட்டிடம், புதிதாக கட்டப்பட்ட அதன் இணைப்பு கட்டிடம், பல்வேறு மாநில பவன்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    மக்களவை சபாநாயகரான சுமித்ரா மகாஜன், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் போதே இவ்விவகாரத்தில் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். புதிய எம்.பி.க்களை நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கக்கூடாது, அவர்களை அரசு கட்டிடங்களில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்களவை செயலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். #NewYear2019
    சென்னை:

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஓட்டல்களில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை நியமிக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    2018-ம் ஆண்டு விடைபெறுகிறது. 2019 புத்தாண்டு வருகிற செவ்வாய்க்கிழமை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை நகரில் கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும், ஆட்டம்-பாட்டத்தோடு இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் பாதுகாப்பான முறையில், புத்தாண்டு கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்யவேண்டும்? என்பது குறித்து போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    அதன் விவரம் வருமாறு:-

    * புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணி வரை கொண்டாடலாம்.

    * 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது.

    * ஆனால் மது பார்கள் அந்தந்த ஓட்டல்கள் லைசென்சு பெறும்போது, என்னென்ன நேரம் ஒதுக்கப்பட்டதோ, அந்த குறிப்பிட்ட நேரம் வரை திறந்து வைத்திருக்கலாம்.

    * சில ஓட்டல்களில் 24 மணி நேரமும் மது பார்களை திறந்து வைத்திருக்க அனுமதி பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த ஓட்டல்களில் மட்டும் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணி வரையோடு மது பார்களை மூடிவிட வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    * பெண் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கவனிப்பதற்காக பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.

    * புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களிடம் அத்துமீறி நடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களை அனுமதிக்கக்கூடாது.

    * வாடிக்கையாளர்களின் கார்களை சோதிக்க வேண்டும்.

    * வாடிக்கையாளர்களின் உடைமைகளையும் சோதிக்க வேண்டும்.

    * ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    * போதையில் இருக்கும் வாடிக்கையாளர்களை வாகனம் ஓட்டிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. உரிய டிரைவர்களை ஏற்பாடு செய்து போதையில் இருப்பவர்களை கார்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

    * தேவைப்பட்டால் டிராவல்ஸ் நிறுவனங்களின் கார்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

    * புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களை மூடிவிட வேண்டும். நீச்சல்குளத்தின் மேல் பகுதியிலோ அல்லது அருகிலோ புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான மேடை எதையும் அமைக்கக்கூடாது.

    * நீச்சல் குளங்களை மூட வசதியில்லாதபட்சத்தில், அருகில் காவலாளிகளை காவலுக்கு நிறுத்த வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களின் வாசல்கள், வாகன நிறுத்தும் இடங்கள், இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும், கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

    மொத்தத்தில் விபத்து இல்லாமல், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற இடம் கொடுக்காமல், மகிழ்ச்சியாக புத்தாண்டு விழாவை கொண்டாட ஓட்டல் நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் அறிவுரைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். #NewYear2019
    விமானத்தில் வந்து சென்னை நட்சத்திர ஓட்டலில் விபசார தொழில் செய்த வெளிநாட்டு அழகிகள் 2 பேரை போலீசார் மீட்டனர். அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து வந்து விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஓட்டலில் உள்ள சொகுசு அறை ஒன்றில் 2 அழகிகள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

    அவர்களை போலீசார் மீட்டனர். அவர்கள் உக்ரைன், உஸ்பெகிஸ்தான் நாடுகளில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை உல்லாசம் அனுபவிக்க அழைத்து வந்துள்ளனர். இதுதொடர்பாக தரகர்கள் மதியழகன், பாண்டியன், ஓட்டல் ஊழியர்கள் முரளி, முகமது அசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள தரகர் ஒருவர் இதில் முக்கிய குற்றவாளி ஆவார். அவர் பெங்களூருவில் தங்கி இருந்துகொண்டு, வெளிநாடுகளில் இருந்து அழகிகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.

    மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அழகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேரள விபசார தரகரை போலீசார் தேடி வருகிறார்கள். மீட்கப்பட்ட வெளிநாட்டு விபசார அழகிகள் இருவரும் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். #tamilnews
    ×