search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Resort"

    • சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.
    • 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    சோழிங்கநல்லூர்:

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு உள்ள சென்னை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    குறிப்பாக மெரினா கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், ரிசாட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.

    இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிழக்கு கடற்ககரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் பண்ணை வீடுகள் புத்தாண்டு கொண்டா ட்டத்துக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

    இதையொட்டி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். புத்தாண்டையொட்டி வருகிற 31-ந்தேதி இரவு சென்னை நகரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், நீலாங்கரை, அக்கரை, உத்தண்டி கோவளம், மாமல்லபுரம், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன் னேற்பா டுகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிர படுத்தவும் கடற்கரை பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை முழுவதும் 500 இடங்களில் வாகன சோதனைகளிலும் ஈடுபடுகிறார்கள். மெரினா காமராசர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்காக 25 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் மணலிலும் கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. மெரினா, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. டிரோன் மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீ சார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    மாமல்லபுரம் பகுதிகளில் இருக்கும் கடற்கரை ரிசார்ட், ஓட்டல்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடு ளுக்கான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது டி.ஜே. என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்தக்கூடாது, விருந்தினர்களை கடலில் குளிக்க அனுமதிக்க கூடாது, தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் என்ற பெயரில் அடாவடி நபர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அப்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார்.

    • சுற்றுலாத்துறையும் தனியாருடன் இணைந்து பொதுமக்களை கவரும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.
    • டிசம்பர் 3-வது வாரத்தில் நகரம் முழுவதும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை வரவேற்று பதாகைகள் வைக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் பெருகி வருகிறது.

    புத்தாண்டு கொண்டாடுவதற்காகவே பல நாடுகளில் பல்வேறு நகரங்களை சுற்றுலா பயணிகள் தேர்வு செய்கின்றனர்.

    சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, துபாய், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நகரங்கள் உலகளவில் புத்தாண்டு கொண்டாடும் நகரமாக உள்ளது.

    இதேபோல இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அதிகளவில் கோவாவை மக்கள் தேர்வு செய்கின்றனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் நகரமாக சுற்றுலா பயணிகளை புதுவை கவர்ந்துள்ளது.

    டிசம்பர் மாத இறுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது பலமடங்கு அதிகரிக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரண மாக பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிகின்றனர்.

    இந்த காலகட்டத்தில் புதுவை குளிரான கோடை வாசஸ்தலம் போல உள்ளது. இதுவும் சுற்றுலா பயணிகள் வருகையை ஈர்க்கிறது.

    டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே புதுவையில் உள்ள நட்சத்திர விடுதிகள், ரிசார்ட், ஓட்டல் களில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு திட்டமிட தொடங்குகின்றனர். டிசம்பர் 3-வது வாரத்தில் நகரம் முழுவதும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை வரவேற்று பதாகைகள் வைக்கப்படுகிறது.

    ஆன்லைன் மூலம் இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்பதிவும் தொடங்குகிறது. விடுதி அறைகளுக்கும் முன்பதிவு தீவிரமாக உள்ளது.

    புதுவை அரசின் சுற்றுலாத்துறையும் தனியாருடன் இணைந்து பொதுமக்களை கவரும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.

    புதுவை கடற்கரை சாலையில் புத்தாண்டை வரவேற்கும் டிசம்பர் 31-ந் தேதி மாலை தொடங்கி முதல் இரவு 12 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இது மட்டுமின்றி அரசின் சீகல்ஸ், நோணாங்குப்பம் படகு குழாம், பழைய துறைமுக வளாகத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது. புதுவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடற்கரை களிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த தயாராகி வருகிறது.

    புதுவையை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் இருந்தும் புத்தாண்டு கொண்டாட் டத்துக்கு புதுவையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களின் நகரமாக புதுவை மாறியுள்ளது.

    • கைது செய்யப்பட்ட முர்ஷித் முகம்மதை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இதுபோன்று எத்தனை சிறுமிகளை சீரழத்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் முர்ஷித் முகம்மது(வயது24). தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் மீது மலப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    அவர்கள் தங்களது புகாரில், பஸ்சில் சென்ற தங்களின் மகளுடன் முர்ஷித் முகம்மது நட்பாக பழகி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை யாரிடமும் கூறக்கூடாது என்று மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். முர்ஷித் முகம்மது டிரைவராக வேலைபார்த்த பஸ்சில் மாணவி சென்று வந்திருக்கிறார். அப்போது அவரிடம் நட்பாக பழகியிருக்கிறார். அதனடிப்படையில் அந்த மாணவியும் அவருடன் பேசி வந்துள்ளாளர்.

    இதையடுத்து அந்த மாணவியை வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் அதனை வெளியில் கூறக்கூடாது என்று மாணவியை மிரட்டியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் முரஷித் முகம்மது மீது போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த அவரை ரகசியமாக தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், அவர் இருந்த ரிசார்ட்டுக்கு அதிரடியாக சென்று கைது செய்தனர்.

    அப்போது அவர் மற்றொரு மைனர் பெண்ணுடன் இருந்தார். அந்த பெண்ணும் பஸ்சில் பயணம் செய்தபோது ஏற்பட்ட பழக்கத்தில், டிரைவர் அழைத்தபடி ரிசார்ட்டுக்கு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அந்த மைனர் பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி, அவர்களது குடும்பத்தினருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட முர்ஷித் முகம்மதை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பல சிறுமிகளை அதேபோன்று சீரழித்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    தனது பஸ்சில் பயணிக்கக்கூடிய மைனர் சிறுமிகளிடம் நட்பாக பழகுவது போல் பேசி, ரிசார்ட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். தனது செயல் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாத வகையில் பழகி, சிறுமிகளை ரிசார்ட்டுக்கு காலையில் அழைத்துச் சென்று, பின்னர் மாலையில் மீண்டும் சிறுமிகளை திரும்பி விட்டுவிடுவாராம்.

    அவர் இதுபோன்று எத்தனை சிறுமிகளை சீரழித்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×