search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "have darshan of"

    • பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமமாக உள்ளது. மேலும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் எனவும் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வந்து கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீரில் விடுதல், பிண்டம் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து செல்வது வழக்கம்.

    இதனால் விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்திருந்தனர். மேலும் இன்று பவுர்ணமி தினமாக உள்ளதால் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்தனர்.

    இதையொட்டி அதிகாலை முதல் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடுமுபத்துடன் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி திதி, தர்ப்பணம் மற்றும் பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து முன்னோரை வழிபட்டனர்

    மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    இதனால் கூடுதுறை பகுதியில் பல்வேறு இடங்க ளிலும் இன்று அதி காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு தங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கே அமர்ந்து சாப்பிட்டனர்.

    ×