search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavani Kuduthurai is in full swing"

    • பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்திட தற்காலிக இரும்பு சீட் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இந்தாண்டு ஆடி முதல் நாள் மற்றும் ஆடி கடைசி நாள் என 2 நாட்களில் அமாவாசை வருகிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக கூடு துறை சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்தக் கோவிலில் பின்பகுதியில் இரட்டை விநாயக சன்னதி படித்துறை யில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார தலம், சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீர் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இதனால் பவானி கூடுதுறையில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. மேலும் அன்று ஆடி அமா வாசை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனால் பவானி கூடுதுறைக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கான வர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து சங்க மேஸ்வரர் கோவில் நிர்வாக த்தின் சார்பில் கோவில் பின் பகுதியில் பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்திட தற்காலிக இரும்பு சீட்டினால் ஆன செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதேபோல் கோவிலின் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி பவானி போலீ சார் மூலம் பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தாண்டு ஆடி முதல் நாள் மற்றும் ஆடி கடைசி நாள் என 2 நாட்களில் அமாவாசை வருகிறது.

    இதனால் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு 2 அமாவாசை தினங்களிலும் பரிகார பூஜைகள் செய்து வழிபட உகந்தது என புரோகிதர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் கூடுதுறை புனித நீராடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ×