search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீ விபத்து
    X

    கோயில் தீ விபத்து

    சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீ விபத்து

    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • பட்டாசு வெடித்த போது தீப்பொறி சாரத்தின் மீதுபட்டு தீப்பிடித்தது.

    சிவகாசி:

    சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சாக்கு துணிகளால் ராஜகோபுரம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பேன்சி ரக பட்டாசு வெடித்தப் போது அதில் இருந்து வெளிவந்த தீப்பொறி கோயில் சாரத்தின் மீது சுற்றப்பட்டிருந்த சாக்கில் பட்டு தீப்பிடித்தது.

    இதில் கோயில் உச்சிபகுதி முழுவதும் சாரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களுடன் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து சிவகாசி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×