search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikasi visakam"

    • திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை.
    • மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணம், 7-ம் நாள் தேரோட்டம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் 5-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இதையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சாந்தி கும்பபூஜை, ஹோமம் நடைபெற்று. பின்னர் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

    • பிரம்மோற்சவ விழாவை பல விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள்.
    • தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

    கோவில்களில் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழாவை பல விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்,

    திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதி கோவில்,

    ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வாருக்குப் பிரம்மோற் சவம்),

    மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமர்,

    மகாபலிபுரம் ஸ்ரீஸ்தல சயன பெருமாள்,

    திருநாராயணபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,

    காஞ்சி ஸ்ரீவைகுண்ட பெருமாள்,

    சென்னை அமைந்தகரை ஸ்ரீபிரசன்ன வரதராஜர்,

    மதுரை ஸ்ரீகூடலழகர்,

    மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள்,

    திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண் யேஸ்வரர்,

    பட்டீஸ்வரம் ஸ்ரீதேணு புரீஸ்வரர்,

    திருக்கண்ணங்குடி ஸ்ரீகாள ஹஸ் தீஸ்வரர்,

    திருப்பனையூர் ஸ்ரீசௌந்த ரேஸ்வரர்,

    கஞ்சனூர் ஸ்ரீஅக்னி புரீஸ்வரர்,

    கும்பகோணம் ஸ்ரீகும் பேஸ்வரர்,

    திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி,

    மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர்,

    திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர்,

    பொள்ளாச்சி ஸ்ரீசுப்ரமணியர்,

    சென்னை வடபழநி ஸ்ரீதண்டா யுதபாணி,

    சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் ஆகிய ஆலயங்களில் வைகாசி மாதத்தில் உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.

    • மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது.
    • பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்களாக தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் விசாக விழா விசேஷமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் நிறைவாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது. இதனையொட்டி முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்கக்குதிரையில் அமர்ந்து கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு என்ஜினீயர் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.

    இதனை தொடர்ந்து மொட்டையரசு திடலை சேர்ந்து உள்ள 70 மண்டபங்களிலும் முருகப்பெருமான் எழுந்தருளினார். ஒவ்வொரு மண்டபத்திலும் சுவாமிக்கும், அம்பாளுக்குமாக சிறப்பு பூஜையும், தீப, தூப, ஆராதனையும் நடந்தது. காலையில் இருந்து இரவு வரை மொட்டையரசு திடலிலே சுவாமி தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அங்கு ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மதிய வேளையில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக வெள்ளரி, பானக்கரம், நீர்மோர் மற்றும் பாகற்காய் குழம்பு படைத்து நெய்வேத்தியம் நடைபெற்றது. இதனையடுத்து மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது. மேலும் பவுர்ணமியையொட்டி நிலா சோறு வைபவம் நடந்தது.

    இதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மொட்டையரசு திடலில் இருந்து கோவில் இருப்பிடம் வரை பூப்பல்லக்கில் சுவாமி வலம் வந்தார். சுவாமி புறப்பாட்டில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுரைமாநகர் உதவி கமிஷனர் அலுவலகம் என்று பல இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த திருக்கண்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.
    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று மாலை கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ர பதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுப்படி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர் சார்பாக கொடிமர கயிறு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி தொடங்கியது. கொடிப்பட்டம் வெள்ளி பல்லக்கில் வைத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோவிலின் உள் பிரகாரத்தை மூன்றுமுறை வலம் வரச் செய்து பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு பஞ்ச வாத்தியங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது.

    மாத்தூர் தந்திரி சங்கரநாராயணரு கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம், அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது. விழாவில் 11-ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல் 12-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா,11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா வருகின்ற 13- தேதி வரை நடக்கிறது
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா வருகின்ற 13- தேதி வரை நடக்கிறது அதில் நேற்று முதல் 11-ந்தேதி வரை 9 நாட்கள் வசந்த உற்சவமாகவும், 12-ந்தேதி, விசாக விழாவும் நடக்கிறது திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலையில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கும், சண்முகர் சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத சண்முக பெருமானுக்கும் காப்பு கட்டுதல் நடைபெற்றது.

    மேலும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதேபோல தினமும் இரவு 7 மணியளவில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 12-ந் தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது.விழாவையொட்டி மதுரை மாநகர் மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராம பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக பால்குடம், பன்னீர் குடம், பறவைக் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி என்று பல்வேறு வித விதமான காவடிகள் எடுத்துவந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். அப்போது குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். வருகின்ற 13-ந்தேதி மொட்டையரசு திடலுக்கு சுவாமி புறப்பாடுநடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    திருத்தளிநாதர் கோவிலில் கலச பூஜை நடைபெற்று கொடிமரத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும் புனித கலச நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.
    திருப்பத்தூர் குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக 10-வது நாள் திருவிழா தொடக்க நாளான நேற்று காலை 6 மணிக்கு கலச பூஜை நடைபெற்று கொடிமரத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும் புனித கலச நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்று 6.30 மணிக்குகொடியேற்றப்பட்டது. பாஸ்கர குருக்கள் ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகவேள்வி பூஜையில் ஈடுபட்டனர். இன்று நாயுடு மகாஜனம் சங்கம் சார்பாக சந்திர சூரிய பிறை வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

    தினமும் பல்வேறு மண்டகபடி சார்பாக இரவு சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 9-ம் நாள் திருவிழாவாக தேரோட்டமும், 10-வது நாள் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
    வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விவசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருச்சியை அடுத்த குமாரவயலூரில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகப்பெருமான் அருணகிரிநாதரின் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட அருளியச் செய்த தலமான இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் இரவு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமியின் வீதி உலா நடக்கிறது.

    9-ம் திருநாளான வருகிற 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் ரதாரோகணம் எனப்படும் தேரோட்டம் மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடக்கிறது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், 14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்திரவதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா அறக்கட்டளை சார்பில் கொடிப்பட்டம் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 11-ந்தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல், 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    திருச்சியை அடுத்த வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3-ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமான் அருணகிரிநாதரின் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட அருளியச் செய்த தலமான வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூன் 3-ம் தேதி தொடங்கும் வைகாசி விசாகப் பெருவிழா 14-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவின் தொடக்கமாக வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்கு கொடியேற்றம், நாள்தோறும் இரவு 8 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமியின் வீதி உலா, ஒன்பதாம் திருநாளான ஜூன்.11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்கள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணிய சுவாமியின் ரதாரோகணம் மாலை 4 மணிக்கு மேல் தேரோட்ட விழா, ஜூன் 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    ஜூன் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், ஜூன்.14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுறும்.

    ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்10 நாட்கள் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற 2-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.

    அதைத் தொடர்ந்து 1-ம்திரு விழாவான 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசையும் 9 மணிக்கு கிளி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    3-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 9மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    4-ம்திருவிழாவான 6-ந் தேதி காலை 6 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சியும் 9 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 7-ந்தேதி காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    6-ம் திருவிழாவான8-ந்தேதி காலை 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு இந்திர வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 9-ந்தேதி அதிகாலை5-30 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் பிற்பகல்3-30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    8ம் திருவிழாவான 10-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் 8-30 மணிக்கு அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 11-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ்மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 12-ந்தேதி  காலை 9 மணிக்கு  மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தனபஜனையும் நடக்கிறது.

    9- மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்ம னுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது.
    காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலில் வைகாசி விசாக பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகப்பெருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி தேவேந்திர மயில் வாகனம், கோபுர சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.

    9-ந்தேதி திருத்தேர், 11-ந்தேதி மாவடி சேவை நடக்கிறது. 12-ந்தேதி திருத்தேர், விசாகம், தீர்த்த வாரி நடைபெற உள்ளது.

    வருகிற 13-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம், சூரன் மயில் வாகன சேவையும், 14-ந்தேதி கேடயம், மங்கள கிரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கால் நாட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக 2-ந் தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு 'மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான' நிகழ்ச்சியாக நடக்கும் கொடி மரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    இதுதவிர விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள்,அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு சமய சொற்பொழிவு, பாட்டுக்கச்சேரி, நாதஸ்வரகச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9-ம் திருவிழாவான 11-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்றுகாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    10-ம் திருவிழாவான 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆராட்டு நிகழ்ச்சி முடிந்ததும் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.

    தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் வறண்ட குளத்தின் கரையில் அம்மனை வைத்து பூஜைகள் நடத்துகிறார்கள். தெப்ப திருவிழா முடிந்த பிறகு நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி இன்று காலை 8-30 மணிக்கு நடந்தது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும் கன்னியம்பலம் மண்டபத்திலும் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
    ×