search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi thiruvizha"

    • திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை.
    • மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணம், 7-ம் நாள் தேரோட்டம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவில் தினமும் ராக்கால பூஜைக்கு பின்பு பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் 5-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இதையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சாந்தி கும்பபூஜை, ஹோமம் நடைபெற்று. பின்னர் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

    • முத்துப்பல்லக்கு வீதிஉலா நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது.
    • முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெற்ற போது மழையும் பெய்து கொண்டே இருந்தது.

    தஞ்சை மாநகரில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் குருபூஜையையொட்டி முத்துப்பல்லக்கு விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். இந்த விழாவின்போது தஞ்சையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழா நேற்று நடந்தது

    தஞ்சை மேலஅலங்கத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் காலையில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி புஷ்ப அலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தஞ்சை சின்ன அரிசிகார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் முத்து பல்லக்குவிழா நடந்தது. விழாவையொட்டி பாலதண்டாயுதபாணியும், விநாயகரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருஞானசம்பந்தர் படமும் வைக்கப்பட்டு இருந்தது.

    தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவித்து பூஜை நடந்தது. இரவு விநாயகரும், திருஞானசம்பந்தரும் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர். மானம்புச்சாவடியில் உள்ள கமலரமண்ய விநாயகர் கோவிலில் இருந்து முத்துப்பல்லக்கில் கமலரண்ய விநாயகரும் எழுந்தருளினர்.

    இதேபோல் கீழவாசல் வெள்ளை பிள்ளையார்கோவிலில் இருந்து வெள்ளை பிள்ளையாரும், கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து சுப்பிரமணியசாமியும், தஞ்சை ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து பாலதாண்டாயுதபாணியும், திருஞானசம்பந்தரும் பல்லக்கில் எழுந்தருளினர்.

    இதேபோல் தஞ்சை மாநகரில் கீழவாசல் உஜ்ஜைனி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர் கோவில், வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள வடபத்திரகாளியம்மன் கோவில், ரெட்டிப்பாளையம் வெற்றி முருகன் உள்ளிட்ட 11 கோவில்களில் இருந்து முத்துப்பல்லக்கில் விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன. திரளான பக்தர்கள் தரிசனம் இந்த பல்லக்குகள் எல்லாம் தஞ்சை தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகியவற்றில் மேளதாளங்கள் முழங்க வலம் வந்தன. முத்துப்பல்லக்கு வீதிஉலா நேற்றுஇரவு தொடங்கி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெற்ற போது மழையும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீதி உலா தாமதமாக புறப்பட்டது. பல கோவில்களில் இருந்து மழை நின்ற பின்னரே முத்துப்பல்லக்கு புறப்பட்டு வந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார்.
    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையில் தந்த பல்லக்கு, மாலையில் தங்கமயில், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்தது. நேற்று வைகாசி விசாக திருவிழா கொடிஇறக்குதலுடன் நிறைவு பெற்றது.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தெய்வானை அம்மனின் திருஊடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்து தெய்வானை அம்மன் சப்பரத்தில் இருந்து இறங்கி தனிப்பல்லக்கில் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகு தேவர் தெய்வானை அம்மனிடம் தூது சென்று சமாதானப்படுத்தினார். வீரபாகு தேவராக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று திருஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளியும், தெய்வானையும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார்.

    அதன்பின் கோவில் நடை திறந்து முத்துக்குமாரசுவாமியுடன், தெய்வானை அம்மன் சேர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • கிருஷ்ண பெருமானுக்கு மிகவும் பிரியமான மாதம் வைகாசி மாதமே.
    • வைகாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களாவது நீராட வேண்டும்.

    கிருஷ்ண பெருமானுக்கு மிகவும் பிரியமான மாதம் வைகாசி மாதமே. இந்த மாதத்தில் பகவான் மனிதர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி கங்கை, யமுனை, காவேரி, சிந்து, கோதாவரி, ச ரஸ்வதி, துங்கபத்ரா, கிருஷ்ணா போன்ற எல்லாப் புனித நதிகளையும் அழைத்து வைகாசி மாதத்தில் சூரிய உதயம் முதல் ஆறு நாழிகை வரை எல்லா தீர்த்தங்களிலும் தங்கி இருக்கும்படி கூறினார்.

    அந்த சமயத்தில் புனித நதிகளில் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பேன் என்றும் விஷ்ணு கூறினார். உடனே அவரிடம் புண்ணிய தீர்த்தங்கள் ஒரு கேள்வி கேட்டன. பாவிகள் எங்களிடம் விட்ட பாவத்தை நாங்கள் எப்படிப் போக்கிக் கொள்வது? எனக் கேட்டன.

    வைகாசி மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும் ஏகாதசி, துவாதசி, பவுர்ணமி தினங்களிலாவது நீராட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வைகாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களாவது நீராட வேண்டும். அப்படி நீராடாதவர்களிடம் உங்களிடம் சேரும் பாவங்களை விட்டு விடுங்கள் என்றார். பகவான் கிருஷ்ணர் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருகிறார். அப்போது நீராடி இறைவனைப் பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    • பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
    • விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

    வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை தர்மராஜன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு வல்லபகணபதி கோவிலில் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வாடிப்பட்டி நகர் முழுவதும் முக்கியவீதிகளில் பல திருக்கண்களை அடைந்து தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டைபுதுார், போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ரெயில்நிலையம், சொக்கையாசுவாமிகள் மடம் வழியாக மறுநாள் மதியம் 12 மணிக்கு கோவிலை வந்து அடைந்தது. விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • தேவபுரீஸ்வரர், தேன்மொழியம்மைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 2-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.பின்னர் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று சாமி படி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேவ புஷ்கரணியில் சாமி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், மகா அபிஷேகமும் நடந்தது.

    இதை தொடர்ந்து தேவபுரீஸ்வரர், தேன்மொழியம்மைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து மூர்திகம் (மூஞ்சூர்) வாகனத்தில் விநாயகர், மயில் வானத்தில் முருகன், அன்னப்பட்சி வாகனத்தில் மதுரநாயகி அம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி சாமி வீதி உலா நடந்தது.

    வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பிராயச்சித்த அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர், உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது
    • இன்று கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறத்தல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    விழாவில் மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்கள், 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தலைமைப்பதியின் முன்பு இருந்து புறப்பட்ட தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வந்த போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக வைத்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இருந்து சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் நேற்று இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • இன்று மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது.
    • இன்று மாலை பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை சுந்தரராஜபெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் தோற்றத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.

    அப்போது வழிநெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன், பொருளாளர் கவுதம்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    மாலை வைகை ஆற்றில் வெளியூரை சேர்ந்த பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இன்று(திங்கட்கிழமை) மாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது. இன்று மாலை உள்ளூர் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    2 நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு புத்தாடை வழங்கப்படுகிறது. இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடந்து சுவாமி கோவில் வந்து சேரும். சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • 12-ந் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது.
    • 14-ந் தேதி விடையாற்றி விழா நடைபெறுகிறது.

    திருமருகலில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக திரளான பக்தர்கள் பூக்களை தட்டுகளில் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.

    பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களைகொட்டி பூச்சொரிதல் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 12-ந் தேதி தீமிதி உற்சவமும், 14-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை ப்பதியில் வைகாசி திரு விழா வருகிற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலை மைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் தை,ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட வைகாசி திருவிழா வருகிற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

    விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதி காலை 4 மணிக்கு முத்திரிப தமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கி ன்றனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இரண்டாம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும்,

    4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனி யும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருடவா கனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 8-ம் திருவிழா நடைபெறு கிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாச லில் அய்யாவின் தவக்கோல காட்சியும் தொடர்ந்து அன்னதா னமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 6-ந்தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது.

    அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.
    கரூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.
    சக்தியின் வடிவமாக திகழும் அம்மன் பக்தர்களின் குறைபோக்கும் அவதாரமாக போற்றப்படுகிறார். ஆடி மாதம் அம்மனுக்கு ஏற்றதாகினும் எப்போதும் பக்தர்களின் தீராத வினைகளை தீர்த்து வைக்கும் அம்சமாக திகழ்கிறாள்.

    அம்மனின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு அவதாரம் எடுத்துள்ள அம்மன்களில் தமிழகத்தில் மாரியம்மன் பெரிதும் வணங்கப்படுகிறாள்.

    அந்த வகையில் சக்தி தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. தொழில் நகரமாம் கரூரில் அவதரித்து வரும் இந்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா வெகு சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.

    கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கும். அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்ப மரத்தின் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைப்பார்கள்.

    பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைப்பார்கள். இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபடுவார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியின் போது, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபடுவார்கள்.

    அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்வார்கள். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காட்டப்படும். பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்வார்கள். பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நிற்பார்கள்.

    மாலை நேரத்தில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வருவார். அப்போது விண்ணதிர மேளதாளங்கள் முழங்கும். பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலமாக புறப்படும்.

    இரவு 7 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடையும். மாவடி ராமசாமியாக அரிவாளுடன் முன்னே அருளாளி செல்ல அதனை பின் தொடர்ந்து கம்பம் ஆற்று பகுதிக்குள் செல்லும். அப்போது ஓம் சக்தி... பராசக்தி... என பக்தர்கள் கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்குவார்கள்.

    பின்னர் அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்படும். இதையடுத்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடிப்பார்கள்.

    அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்படும். மேலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கம்பம் சென்ற இடத்தை கண்டு வழிபட்டு செல்வார்கள். சில பக்தர்கள் காலி பாட்டில்களில் அந்த நீரை பிடித்து எடுத்து செல்வார்கள். கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வாண வேடிக்கை நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்ட பக்தர்களும் கடல் அலை போல் திரண்டு வருவார்கள்.
    திருவாடானை சினேகவல்லி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் ராணி சேதுபதி பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் சினேக வல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் பாண்டியநாட்டு 14 ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாடானை சினேகவல்லி அம்மன் வைகாசி விசாக திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11-ந்தேதி சுவாமி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.12-ந்தேதி 10-ம் திருநாளையொட்டி தீர்த்தவாரி உற்சவமும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன் மற்றும் நாட்டார்கள், நகரத்தார்கள், தேவஸ்தான அலுவலர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
    ×