என் மலர்
நீங்கள் தேடியது "சுபமுகூர்த்த நாட்கள்"
- குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உகந்த நாளாகும்.
- 18-ந்தேதி வரை 6 நாட்கள் சபரிமலை ஆலயம் திறந்து இருக்கும்.
மே மாதம் நிறைவடைந்து ஜூன் மாதம் பிறந்துள்ளது. இம்மாதம் முழுவதும் நடைபெறக்கூடிய ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்கள் இதோ உங்களுக்காக...
சுபமுகூர்த்த நாட்கள்
ஜூன் 5-ந்தேதி வியாழக்கிழமை, தசமி திதி, உத்திரம் நட்சத்திரம், லக்னம் ரிஷபம். நல்ல நேரம்- காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
ஜூன் 6-ந்தேதி வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி, அஸ்தம் நட்சத்திரம், லக்னம்-ரிஷபம். காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
ஜூன் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை, திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரம், லக்னம்-ரிஷபம். காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை.
ஜூன் 16-ந்தேதி திங்கட்கிழமை, பஞ்சமி திதி, அவிட்டம் நட்சத்திரம், லக்னம்-மிதுனம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
ஜூன் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை, துவிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம், லக்னம்-மிதுனம், காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை.
தர்ப்பண தினங்கள்
ஜூன் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)
ஜூன் 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)- போதன அமாவாசை
ஜூன் 25- (புதன்கிழமை)- அமாவாசை
பவுர்ணமி கிரிவலம்
ஜூன் மாதம் 10-ந்தேதி பவுர்ணமி தினமாகும். செவ்வாய்க்கிழமையான அன்று மதியம் 12.27 மணிக்கு பவுர்ணமி தொடங்குகிறது. மறுநாள் (11-ந்தேதி புதன்கிழமை) மதியம் 1.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது நன்மை தரும்.
மகாபெரியவா அனுஷ தினம்
காஞ்சி மகா பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷ தினம் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வழிபாடு தினமாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் 10-ந்தேதி (செய்வாய்க்கிழமை) அனுஷ நட்சத்திர தினமாகும்.
சபரிமலை கோவில் நடை திறக்கும் நாட்கள்
சபரிமலை அய்யப்பன் கோவில் ஜூன் மாதம் 4-ந்தேதியும் 5-ந்தேதியும், பிரதிஷ்டை தின பூஜைக்காக 2 நாட்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படும். ஜூன் 14-ந்தேதி வழக்கமான மாத பூஜைக்காக நடை திறக்கப்படும். 18-ந்தேதி வரை 6 நாட்கள் சபரிமலை ஆலயம் திறந்து இருக்கும்.
வாஸ்து பூஜை
ஜூன் 4-ந்தேதி வாஸ்து பூஜைகள் செய்வதற்கு ஏற்ற சுபநாளாகும். புதன்கிழமையான அன்று வாஸ்து புருஷன் 8 நாழிகை விழித்து இருப்பார். அதாவது அன்றைய தினம் காலை 9.58 மணி முதல் 10.34 மணி வரை அவர் விழித்து இருக்கும் காலமாகும். இந்த நேரத்தில்தான் வாஸ்து பகவான் பல்தேய்த்து, குளித்து, சாப்பிட்டு, வெற்றிலை போடும் நேரமாகும். இந்த சமயத்தில் வாஸ்து பூஜை செய்து புதிய கட்டிடங்கள் கட்ட தொடங்குவது மிக மிக சிறப்பானதாக இருக்கும்.
புனித நீராடும் தினம்
ஜூன் 9-ந்தேதி (திங்கட்கிழமை) புனித நீராட சிறந்த தினமாகும். அன்று நதிகளில் நீராடி முருகனையும், துர்க்கையையும் மனமுருக வழிபட்டால் வியாபாரிகளுக்கு அவர்களது வியாபாரத்திலும், தொழிலிலும் வெற்றி மீது வெற்றி கிடைக்கும்.
காது குத்துதல்
குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உகந்த நாளாகும். அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் காது குத்தலாம். அதுபோல ஜூன் 14-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் காது குத்துவது நல்லது. புது வாகனங்கள் வாங்கி ஓட்ட தொடங்குபவர்கள் ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புதிய முயற்சிகளை தொடங்குவது நல்லது.
முக்கிய தினங்கள்
ஜூன் 1-ந்தேதி- உலக பால் தினம்.
ஜூன் 2- சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம், இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த தினம்.
ஜூன் 3- கலைஞர் கருணாநிதி பிறந்த தினம், நடிகர் ஜெய்சங்கர் நினைவு தினம். உலக சைக்கிள் தினம்.
ஜூன் 4- உலக பாதிக்கப்பட்ட குழந்தைகள் தினம், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த தினம், வ.வே.சு.அய்யர் நினைவு தினம்.
ஜூன் 5- உலக சுற்றுச்சூழல் தினம்.
ஜூன் 6- உலக பூச்சிகள் தினம், தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம்.
ஜூன் 7- உலக உணவு பாதுகாப்பு தினம்.
ஜூன் 8- தேசிய நண்பர்கள் தினம்.
ஜூன் 9- உலக அங்கீகார தினம்.
ஜூன் 10- நாகரிகங்களுக்கிடையில் உரையாடலுக்கான சர்வதேச தினம், பால்பாயிண்ட் பேனா தினம்
ஜூன் 11- சர்வதேச விளையாட்டு தினம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்
ஜூன் 12- உலக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினம், தேசிய சிவப்பு ரோஜா தினம்.
ஜூன் 13- தேசிய தையல் எந்திரம் தினம், ஒளியும் ஒலியும் அனுப்புவது கண்டுபிடிப்பு தினம்.
ஜூன் 14- உலக ரத்ததான தினம். சேகுவோரா பிறந்த தினம்.
ஜூன் 15- உலக காற்று தினம், உலக தந்தையர் தினம்.
ஜூன் 18- உலக சுற்றுலா தினம், கக்கன் பிறந்த தினம்.
ஜூன் 20- ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்த தினம், உலக அகதிகள் தினம், சுரதா நினைவு தினம்.
ஜூன் 21- உலக யோகா தினம், உலக இசை தினம்.
ஜூன் 24- கவிஞர் கண்ணதாசன், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம்.
ஜூன் 25- உலக வெண்புள்ளி தினம்.
ஜூன் 26- ம. பொ.சி. பிறந்த நாள், உலக போதை ஒழிப்பு தினம், சித்ரவதைக்கு எதிரான சர்வதேச தினம்.
ஜூன் 27- உலக நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்.
சித்தர்கள் குருபூஜை தினம்
ஜூன் 7 - அஸ்தலிங்க சுவாமிகள் 175-வது குரு பூஜை இடம் அய்யன்பேட்டை (காஞ்சிபுரம்-தாம்பரம் சாலை)
ஜூன் 8-ந்தேதி- மகான் சாங்கு சித்தர் ஜீவசமாதி கும்பாபிஷேகம் (கிண்டி)
ஜூன் 9-ந்தேதி - சிதம்பரம் சுவாமிகள் 365-வது குரு பூஜை, திருப்போரூர். சிவப்பிரகாச தேசிகர் குரு பூஜை, திருவண்ணாமலை, வீரசேகர ஞானதேசிகர் 114-வது குரு பூஜை, திருக்களார் (மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலை), தாண்டவராய சுவாமிகள்- நன்னிலம், எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் 43-வது குரு பூஜை, கோட்டையூர் (காரைக்குடி அருகே), சண்முக பரதேசி சுவாமிகள் 83-வது குரு பூஜை, சிவராமபேட்டை (தென்காசி-மதுரை சாலை)
ஜூன் 10-ந்தேதி- நாகமுனி சுவாமிகள் 129-வது ஜெயந்தி விழா, பூங்கோடு (ஆற்காடு-திண்டிவனம் சாலை), பரமஹம்ச ஓங்கார சுவாமிகள், கோடம்பாக்கம்.
ஜூன் 12-ந்தேதி - திருஞான சம்பந்தர் குரு பூஜை
ஜூன் 14-ந்தேதி- குமரகுருபரர் குரு பூஜை
ஜூன் 25-ந்தேதி - சோமப்ப சுவாமிகள் 57-வது குரு பூஜை, திருப்பரங்குன்றம் (மதுரை)
ஜூன் 26- சிவஞான பாலசித்தர் குரு பூஜை, மயிலம் முருகன் ஆலயம், சற்குரு சுவாமிகள் 115-வது குரு பூஜை, மாயகுண்டு (தேனி அருகே), மவுனகுரு சுவாமிகள் 89-வது பூஜை, பெரியகுளம் வராகநதி பாலம் அருகே.
ஆன்மிக குறிப்புகள்
ஜூன்1- சஷ்டி விரதம், ஆரணய கவுரி விரதம்
ஜூன் 2- சாமிதோப்பு வைகுண்ட கோவில் தேர்
ஜூன் 3- அஷ்டமி திதி
ஜூன் 4- வாஸ்து நாள், ஆழ்வார்திருநகரியில் 9 கருட சேவை
ஜூன் 6 - சுமார்த்த ஏகாதசி
ஜூன் 7 - வைஷ்ணவ ஏகாதசி, பக்ரீத் பண்டிகை
ஜூன் 8 - பிரதோஷம்
ஜூன் 9 - வைகாசி விசாகம், நம்மாழ்வார் திருநட்சத்திரம்
ஜூன் 10 - பவுர்ணமி, காஞ்சீபுரம் குமரகோட்ட முருகன் திருக்கல்யாணம்.
ஜூன் 12 - திருஞானசம்பந்தர் குருபூஜை
ஜூன் 14 - சங்கடகர சதுர்த்தி, குமரகுருபரர் குரு பூஜை, திருதியை திதி.
ஜூன் 15 - கரிநாள், திருவோண விரதம்.
ஜூன் 16 - பஞ்சமி, வராகி வழிபாடு தினம்
ஜூன் 17 - சஷ்டி விரதம்
ஜூன் 18 - அஷ்டமி
ஜூன் 20 - கரிநாள்
ஜூன் 21 - சர்வ ஏகாதசி
ஜூன் 22 - கூர்மஜெயந்தி, கார்த்திகை விரதம்
ஜூன் 23 - பிரதோஷம், சிவராத்திரி
ஜூன் 24 - சதுர்த்தசி திதி, சிதம்பரம் நடராஜர் பவனி
ஜூன் 25 - அமாவாசை, திருவள்ளூர் வீரராகவர் தெப்பம்
ஜூன் 26 - ஆஷாட நவராத்திரி தொடக்கம்
ஜூன் 29 - மாணிக்கவாசகர் குரு பூஜை
ஜூன் 30 - ஸ்கந்த பஞ்சமி
வராகி நவராத்திரி
ஜூன் மாதம் 26-ந்தேதி (வியாழக்கிழமை) வராகி நவராத்திரி தொடங்குகிறது. ஜூலை மாதம் 4-ந்தேதி இந்த நவராத்திரியை கொண்டாட வேண்டும். இந்த 9 நாட்களும் தினமும் மாலை அம்பிகையை பூஜை செய்து வழிபட்டால் சலக முன்னேற்றமும் கிடைக்கும்.
கணபதி ஹோமம்
வீட்டில் கணபதி ஹோமம் நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜூன் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை), ஜூன் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாட்களில் கணபதி ஹோமம் செய்யலாம். இந்த நாட்களில் சுதர்சன ஹோமம் மற்றும் தோஷ பரிகார சாந்திகள் செய்வது சிறப்பான பலன்களை தரும்.
வட சாவித்திரி விரதம்
ஜூன் 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வட சாவித்திரி விரத தினமாகும். அன்று பெண்கள் விரதம் இருந்து வீட்டில் கவுரி பூஜை செய்வது மிக மிக மேன்மையானது ஆகும். அன்று பெண்கள் சத்தியவான் சாவித்திரி கதையை படித்தால் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பலன்களை பெறுவார்கள்.c
ஆபரேஷன் செய்து குழந்தை பெற
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் ஜூன் மாதம் 5-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 1 மணி முதல் 1.30 மணிக்குள் அஸ்தம் நட்சத்திரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெறலாம். ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சித்திரை நட்சத்திரத்திலும், ஜூன் 7-ந்தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் 4 மணிக்குள் சுவாதி நட்சத்திரத்திலும், ஜூன் 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அனுஷம் நட்சத்திரத்திலும், ஜூன் 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் மிதுனம் லக்னத்திலும் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை பெற்றெடுக்கலாம்.
பகவதா அஷ்டமி
ஜூன் மாதம் 18-ந்தேதி (புதன்கிழமை) வரும் அஷ்டமியை பகவதா அஷ்டமி என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் காலை சிவபெருமானையும், மாலை சூரியன் மறையும் நேரத்தில் காலபைரவரையும் வழிபட வேண்டும். இந்த வழிபாடு மூலம் தெரிந்தும், தெரியாமலும் பெரியோர்களை அவமரியாதை செய்து இருந்தால் அந்த தோஷம் விலகும். அதோடு கடன் சுமைகளும் நீங்கும்.
அமிர்த லட்சுமி விரதம்
ஜூன் மாதம் 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மகாலட்சுமியை வழிபட்டு விரதம் இருப்பதற்கு உகந்த தினமாகும். அன்றைய தினம் பெண்கள் வீட்டில் கலசம் வைத்து லட்சுமி பூஜை செய்ய வேண்டும். வீட்டில் லட்சுமி படத்தின் முன்பு விளக்கு ஏற்ற வேண்டும். கோவிலுக்கு செல்வதாக இருந்தால் விளக்கு ஏற்றி விட்டு வரவேண்டும். இந்த வழிபாடு மூலம் வீட்டில் லட்சுமி அருள் கிடைத்து சகல செல்வங்களும் பெறலாம்.
லட்சுமி நரசிம்மர் வழிபாடு தினம்
ஜூன் மாதம் 9-ந்தேதி (திங்கட்கிழமை), 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) லட்சுமி நரசிம்மரை வழிபடுவதற்கு சிறந்த நாட்கள் ஆகும். ஜூன் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) லட்சுமி நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திர தினமாகும். எனவே அன்றும் லட்சுமி நரசிம்மரை அவசியம் வழிபட வேண்டும்.
அம்பாளுக்கு உகந்த நாள்
ஜூன் 10-ந்தேதி வீட்டில் பெண்கள் அம்பாளை வழிபட்டால் கணவருக்கு உடல்நலம் உண்டாகும். ஜூன் 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெண்கள் வீட்டில் சமிகவுதி விரதம் இருக்கலாம். இதனால் தாயும் சேயும் நலமாக இருப்பார்கள். வீட்டில் கலச பூஜை செய்வது மிக மிக நல்லது.
பராசக்தி பூஜை
ஜூன் 2-ந்தேதி (திங்கட்கிழமை) தூமாவதீ ஜெயந்தி தினமாகும். அதாவது இது பராசக்தியின் வடிவங்களில் ஒன்றாகும். இந்த வடிவத்தை திருமாலின் மச்ச அவதாரத்துக்கு இணையானதாக புராணங்களில் புகழ்ந்து கூறியுள்ளனர். எனவே 2-ந்தேதி இரவு பராசக்தியை நினைத்து பூஜைகள் செய்தால் அம்பாள் அருள் பெற முடியும். இந்த பூஜைகள் மூலம் கேது தோஷங்கள் உடனடியாக விலகி சென்று விடும்.
ஜூன் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) குல தெய்வ வழிபாட்டுக்கு முக்கிய நாளாகும். அன்றைய தினம் குல தெய்வத்தை நினைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த பிரார்த்தனையை வைக்க வேண்டும். சுப காரியங்கள் நிறைவேற அன்றைய தின பூஜை முக்கியம். அன்று மதியம் தயிர் சாதம் நைவேத்தியம் செய்தால் சகல விதமான தோஷங்களும் விலகி நீங்கள் நினைத்ததை குல தெய்வமும், பித்ருக்களும் நடத்தி தருவார்கள்.
- பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
- 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள்.
பத்திரப் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அந்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
தற்போது பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17-ந் தேதி (நாளை) அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும்.
அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.
- வைகாசி மாதத்தில் நல்ல காரியங்களை செய்ய உகந்த நாட்களை பார்க்கலாம்.
தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. 2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.
வைகாசி 08 (மே 22) - திங்கட்கிழமை (வளர்பிறை)
வைகாசி 10 (மே 24) - புதன்கிழமை (வளர்பிறை)
வைகாசி 11 (மே 25) - வியாழக்கிழமை (வளர்பிறை)
வைகாசி 18 (ஜூன் 01) - வியாழக்கிழமை (வளர்பிறை)
வைகாசி 22 (ஜூன் 05) - திங்கட்கிழமை
வைகாசி 24 (ஜூன் 07) - புதன்கிழமை
வைகாசி 25 (ஜூன் 08) - வியாழக்கிழமை
வைகாசி 26 (ஜூன் 09) - வெள்ளிக்கிழமை
வாஸ்து மற்றும் பூமி பூஜை நாள், நேரம் :
வைகாசி 21 (ஜூன் 04) ஞாயிற்றுக்கிழமை - காலை 09.58 முதல் 10.34 வரை
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும்.
- வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்து பெண்ணை அனுப்ப யோசிப்பர்.
திருமணத்திற்கென்று சுபமுகூர்த்த நாள் குறிக்கும் பொழுது கூடுதலாக நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள், நேரம் குறிக்க வேண்டும்.
1. முகூர்த்தக் கால் நாட்ட, 2. மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம், 3. பெண் அழைப்பிற்கான நேரம், 4. திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம், 5. சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்
இதில், பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்து பெண்ணை அனுப்ப யோசிப்பர். அதே சமயம் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். குறிப்பாக லட்சுமி என்ற அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் பெண் அழைப்பு நடத்தலாம்.
நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும்.
அதே நேரத்தில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் வழிபாடு முடித்து அதன் பின்னர் சாந்தி முகூர்த்தம் செய்தால் பிறக்கும் குழந்தை பிறர் போற்றும் அளவு வாழ்க்கையில் உயரும்.
- புரட்டாசி மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது.
- புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் - அக்டோபர்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்களை பார்க்கலாம்.
புரட்டாசி 11 (28.9.2022) புதன் திருதியை சுவாதி சித்த காலை 9-10
புரட்டாசி 18 (5.10.2022)புதன் தசமி திருவோணம் சித்த காலை 6-7
புரட்டாசி 19 (6.10.2022) வியாழன் துவாதசி அவிட்டம் சித்த காலை 11-12
புரட்டாசி 20 (7.10.2022) வெள்ளி துவாதசி சதயம் சித்த காலை 6-7






