search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikasi festival"

    • ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • தங்கரத புறப்பாடு நடந்தது.

    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான (வைகாசி) கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

    பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது.

    அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி மாலை 6 மணிக்கு கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பின்னர் 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.

    இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 115 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி பங்கேற்றனர்.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். இதனால் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்வதற்கான மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.

    • திருவிளக்கு பூஜைகள், கிராமத்து தெம்மாங்கு நிகழ்ச்சி நடந்தது.
    • மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

    அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் கோட்டை கருப்பசாமி, மண்டு சோலைச்சி, அசையாமணிகட்டி, அம்மச்சி, மந்தைஅம்மன், ஆதிசிவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வைகாசி திருவிழா நடைபெற்றது. இதில் விநாயகருக்கு கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது.

    மாலையில் திருவிளக்கு பூஜைகள், கிராமத்து தெம்மாங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மறுநாள் குட்டிமேய்க்கிபட்டி சென்று மந்தை அம்மன், அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க சின்ன இலந்தை குளம் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அம்மனுக்கு நகை அலங்காரம் செய்து சக்தி கிடாய் வெட்டுதல், அம்மச்சி அம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் எடுத்து முளைப்பாரியுடன் ஊர்வலமாக மந்தை அம்மன் கோவிலுக்கு சாமி சென்று அடைந்தது.

    விழாவில் நேர்த்திக்கடனாக மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது . அதைத்தொடர்ந்து மாலை மந்தை அம்மன் முளைப்பாரியுடன் பூஞ்சோலை சென்றடைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை சின்ன இலந்தைகுளம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் தேரில் எழுந்தருளினார்.

    நாகை வெளிப்பாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் கிளி, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் தேரில் எழுந்தருளினார்.

    இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரானது பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து மாலை செடில் உற்சவம் நடைபெற்றது.

    • இன்று விரதம் இருந்து சிவவழிபாடு செய்வது உத்தமம்.
    • இந்தநாளில், ஞானமும் யோகமும் தந்தருளும் சிவனாரை விளக்கேற்றி வழிபடுவோம்.

    புண்ணியம் நிறைந்த வைகாசி மாதம் என்று ஞானநூல்கள் போற்றுகின்றன. இந்த வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திர நாள் என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள். அதேபோல், வைகாசிச் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த நாள்.

    விசாக நட்சத்திரநாளில் முருக வழிபாடு மிகுந்த விசேஷம். அதேபோல், அம்பிகையை ஆராதிக்க, வாழ்வில் சங்கடங்கள் அனைத்தும் விலகிவிடும். சந்தோஷங்கள் பெருகும்.

    சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். வைகாசி மாதத்தின், திங்கட்கிழமைகள் ஈஸ்வர வழிபாடு ரொம்பவே வலிமையைத் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். திங்கட்கிழமைகளில், விரதம் இருந்து சிவ ஸ்துதி பாராயணம் செய்து சிவபெருமானை தீபாராதனை காட்டி பிரார்த்தனை செய்வது உத்தமம். ருத்ரம் ஜபிப்பது, எதிரிகளையும் தீய சக்திகளையும் அழிக்கவல்லது.

    வைகாசி மாதத்தின் கடைசி சோமவாரம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தநாளில், விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றுங்கள். சோம வார நாளில், சோமன் எனப்படும் திங்கள் எனப்படும் சந்திரன் எனப்படும் நிலா உதயமாகும் மாலை வேளையில் விளக்கேற்றுங்கள். முடிந்தால், கிடைத்தால், சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள். குடும்பமாய் அமர்ந்து சிவநாமம் சொல்லுங்கள். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடுங்கள் அல்லது ஒலிக்கவிடுங்கள். முக்கியமாக, நோய் தீர்க்கும் பதிகங்களைப் பாடி பரமேஸ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    சிவனாருக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். ஞானமும் யோகமும் தந்தருள்வார் சிவனார்.

    தென்னாடுடைய சிவனே போற்றி.

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    • காளியம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
    • அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.

    திருக்கடையூர் அருகே திருப்பஞ்சாக்கையில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி திருவிழாயையொட்டி கடந்த 2-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதையடுத்து ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவை காவடிகளுடன் கரகம் புறப்பட்டு வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க தோட்டம் அன்னப்பன்பேட்டை மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் செம்பனார்கோவில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சியை அடுத்த வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3-ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமான் அருணகிரிநாதரின் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட அருளியச் செய்த தலமான வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூன் 3-ம் தேதி தொடங்கும் வைகாசி விசாகப் பெருவிழா 14-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவின் தொடக்கமாக வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்கு கொடியேற்றம், நாள்தோறும் இரவு 8 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமியின் வீதி உலா, ஒன்பதாம் திருநாளான ஜூன்.11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்கள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணிய சுவாமியின் ரதாரோகணம் மாலை 4 மணிக்கு மேல் தேரோட்ட விழா, ஜூன் 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    ஜூன் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், ஜூன்.14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுறும்.

    ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்10 நாட்கள் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற 2-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.

    அதைத் தொடர்ந்து 1-ம்திரு விழாவான 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசையும் 9 மணிக்கு கிளி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    3-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 9மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    4-ம்திருவிழாவான 6-ந் தேதி காலை 6 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சியும் 9 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 7-ந்தேதி காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    6-ம் திருவிழாவான8-ந்தேதி காலை 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு இந்திர வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 9-ந்தேதி அதிகாலை5-30 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் பிற்பகல்3-30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    8ம் திருவிழாவான 10-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் 8-30 மணிக்கு அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 11-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ்மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 12-ந்தேதி  காலை 9 மணிக்கு  மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தனபஜனையும் நடக்கிறது.

    9- மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்ம னுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது.
    காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலில் வைகாசி விசாக பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகப்பெருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி தேவேந்திர மயில் வாகனம், கோபுர சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.

    9-ந்தேதி திருத்தேர், 11-ந்தேதி மாவடி சேவை நடக்கிறது. 12-ந்தேதி திருத்தேர், விசாகம், தீர்த்த வாரி நடைபெற உள்ளது.

    வருகிற 13-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம், சூரன் மயில் வாகன சேவையும், 14-ந்தேதி கேடயம், மங்கள கிரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கால் நாட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக 2-ந் தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு 'மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான' நிகழ்ச்சியாக நடக்கும் கொடி மரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    இதுதவிர விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள்,அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு சமய சொற்பொழிவு, பாட்டுக்கச்சேரி, நாதஸ்வரகச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9-ம் திருவிழாவான 11-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்றுகாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    10-ம் திருவிழாவான 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆராட்டு நிகழ்ச்சி முடிந்ததும் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.

    தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் வறண்ட குளத்தின் கரையில் அம்மனை வைத்து பூஜைகள் நடத்துகிறார்கள். தெப்ப திருவிழா முடிந்த பிறகு நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி இன்று காலை 8-30 மணிக்கு நடந்தது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும் கன்னியம்பலம் மண்டபத்திலும் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட வைகாசி திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைத்தார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகன பவனி நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி நெல்லை தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

    வருகிற 3-ம்தேதி வெள்ளிக்கிழமை மாலை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோலகாட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 6-ம் தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் மூன்று வேளை தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை மூலம் அய்யாவழி பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
    கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி காவிரி படித்துறையிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பால்குடம் கரகம், எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
    கும்பகோணம் பழைய அரண்மனை தெருவில் மகா காளியம்மன் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி காவிரி படித்துறையிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பால்குடம் கரகம், எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

    தொடர்ந்து காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் காளிகா பரமேஸ்வரி சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று (புதன்கிழமை) பவளக்காளி திருநடன உற்சவம் நடக்கிறது.

    நாளை மறுநாள் வீரகாளியம்மன் முனீஸ்வரர் ரதத்தில் வீதிஉலாவும், 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விடையாற்றி உற்சவம், கஞ்சி வார்த்தல், சந்தனகாப்பு அலங்காரத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டிற்கான விசாகத் திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தொடங்குகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விசாகத் திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வசந்த உற்சவம் தொடங்குகிறது. அன்று உற்சவருக்கும், சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானைக்கு மாககாப்பு கட்டுதல் நடக்கிறது.

    இதையடுத்து கோவிலுக்குள் வசந்த மண்டபத்தில் 9 நாட்கள் தினமும் இரவு 7 மணிஅளவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) விசாக விழா கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி விசாக கொறடு மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் சண்முகப்பெருமாள் எழுந்தருளுவார். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளக்கூடிய சண்முகப் பெருமானுக்கு காலையில் இருந்து மாலைவரை இடைவிடாது குடம் குடமாக பால் அபிஷேகம் நடைபெறும். விசாக திருவிழாவையொட்டி துணை கமிஷனர் சுரேஷ் மேற்பார் வையில் கோவிலுக்குள் உள்ள கொறடு மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் சுத்தப்படுத்தப்பட்டு மெருகு ஏற்றி தயார்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    ×