search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathyawageeswarar temple"

    • சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா கோலாகலத்துடன் நடந்தது.
    • முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    களக்காடு:

    களக்காட்டில் பிரசித்திப் பெற்ற சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியான முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முருகப்பெரு மான் சிறப்பு அலங்கா ரத்தில் காட்சி அளித்தார்.

    அதன்பின் முருகப்பெரு மான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ரதவீதிகளில் வீதி உலா வந்தார். சப்பரம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரதவீதிகளில் திரண்ட பக்தர்கள் முருகப்பெருமானுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

    • இந்தாண்டு வைகாசி திருவிழா இன்று (புதன் கிழமை) தொடங்கியது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், களக்காட்டில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீசத்திய வாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பும், புராண சிறப்பும் மிகுந்த இந்த கோவில் பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ள பஞ்ச சிவ ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தேரோட்டத் திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்தாண்டு வை காசி திருவிழா இன்று (புதன் கிழமை) தொடங்கி யது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்த ப்பட்டது. அதன் பின் சத்திய வாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் விஷேச அலங்காரத்தில் கொடி மர மண்ட பத்தில் எழுந்தரு ளினர். அதனைதொடர்ந்து அதிகாலை 6.35 மணிக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க கோவில் கொடி மரத்தில் நந்தி பகவான் உருவம் பொறித்த கொடி ஏற்றப்ப ட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கும் விஷேச அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா வை முன்னிட்டு தினசரி காலையில் சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனம் வாகனத்தில் திருவீதி உலா வருதலும், கும்பாபி ஷேகமும், இரவில் சிறப்பு அலங்கார தீபாரா தனைகளுக்கு பின்னர் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சி 8-ம் நாளான 31-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று பகல் 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்ப டுகிறது. மதியம் 12 மணிக்கு அன்ன தானம் வழங்கப்ப டுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு நடராஜர் பச்சை பட்டு உடுத்தி, முழுவதும் பச்சை சாத்தி வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

    அதன் பின் கங்காள நாதர், சந்திரசேகர் சுவாமி களும், சத்தியவாகீ ஸ்வரர் பூங்கோவில் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்தி லும் திருவீதி உலா வருகின்றனர். சிகர நிகழ்ச்சி யான தேரோட்டத் திருவிழா 9-ம் நாளான 1-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் ஊழிய ர்கள், விழா மண்டக ப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    பிச்சாண்டர் கோலத்தில் கங்காளநாதர் ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி திருவிழாவின் 8-ம் நாள் மட்டுமே கங்காளநாதர் பிச்சாண்டர் கோலத்தில் எழுந்தருளுவது குறிப்பிட த்தக்கதாகும். சிவனின் அம்சமான அவருக்கு பக்தர்கள் பச்சரிசி வழங்கி தரிசனம் செய்வது சிறப்புமி க்கதாகும். வருகிற 31-ந் தேதி மாலை 6 மணிக்கு கங்களாநாதர் திருவீதி உலா நடக்கிறது.

    • களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா நடந்தது.
    • முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

    களக்காடு:

    களக்காடு சத்தியவா கீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வின் தொடர் நிகழ்ச்சியான முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா நடந்தது.

    இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து முருகப்பெருமான் விஷேச அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதன்பின் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, வான வெடிகள் ஒலிக்க திருவீதி உலா வந்தார். சப்பரம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×