search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசியில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு மீண்டும் இயங்க தொடங்கிய பட்டாசு ஆலைகள்
    X

    சிவகாசியில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு மீண்டும் இயங்க தொடங்கிய பட்டாசு ஆலைகள்

    • சிவகாசியில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு மீண்டும் பட்டாசு ஆலைகள் இயங்க தொடங்கின.
    • தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் 1,070 பட்டாசு ஆலை கள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழி லாளர்களும், உப தொழில் கள் மூலம் மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்ற னர்.

    ரூ.6 ஆயிரம் கோடி

    ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டமே என்றா லும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக் கும் ஓய்வறியா மனிதர் களை கொண்ட ஊர் சிவ காசியாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி விற் பனை இலக்கை சிவகாசி பட்டாசு தொழில் சந்தைபடுத்தியுள்ளது.

    கடைசி நேர பட்டாசு வெடி விபத்துகள், அதிகாரி களின் ஆய்வுகள் பட்டாசு விற்பனையை பாதித்த போதிலும் அதையும் தாண்டி பட்டாசு விற்பனை நன்றாக இருந்ததாக விற்ப னையாளர்கள் தெரிவித்த னர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பட்டாசு ஆலைகளில் கடந்த 11-ந்தேதி உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த சில நாட்களாக பட்டாசு ஆலைக ளில் மராமத்து பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்ட னர்.

    ஆயத்த பணிகள்

    பட்டாசு அறைகளுக்கு வெள்ளை அடிப்பது, செடி கொடிகளை அகற்றுவது, ஆலையை சுத்தப்படுத்துவது போன்ற பணிகள் முழுவீச் சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று முன் தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பட்டாசு ஆலைகளில் பூஜை கள் போட்டு உற்பத்தி பணி களை தொடங்கியது.

    இதில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர். அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற் பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகளுக்கான வட மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந் தும் பெறப்பட்ட ஆர்டர் களை கொண்டு பட்டாசு உற்பத்தி பணிகளை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் செய்திருந்தனர். பட்டாசு ஆலைகள் மீ்ண்டும் திறக்கப் பட்டதால் பட்டாசு ஆலை யில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.

    Next Story
    ×