search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street propaganda"

    • மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில குழு அறிவித்தது.
    • புலவர்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தெருமுனை பிரசார இயக்கம் துவங்கியது.

    ஊத்துக்குளி :

    வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, சமத்துவமின்மை, மக்கள் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்கள் என தொடர்ந்து மத்திய அரசின் தாக்குதலாலும், பாஜக. அல்லாத மாநிலங்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிப்பது, தொடரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் மார்ச் 27,28 ந்தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள், மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில குழு அறிவித்தது. அதன்படி ஊத்துக்குளி தாலுகா, புலவர்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தெருமுனை பிரசார இயக்கம் துவங்கியது.

    எம்.தொட்டிபாளையம், தென்றல் நகர், சொட்டகவு ண்டம்பாளையம், ராஜீவ் நகர்,தெற்கு சாணார்பா ளையம், பல்லகவுண்ட ன்பாளையம் நால்ரோடு, கூனம்பட்டி, கூனம்பட்டிபுதூர் காலனி, ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், பாச்சாங்காட்டுபாளையம், சுக்காகவுண்டன்புதூர் கா லனி, செங்காளிபாளையம், சுண்டக்காம்பாளையம், எம்.ஜி.ஆர்.காலனி, தாளப்பதி, விருமாண்ட ம்பாளையம், செங்கப்பள்ளி வரை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    இதற்கு கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் வி.காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மணியன் மற்றும் சிவராஜ், சந்திரமூர்த்தி, அர்ஜுனன், லிங்கப்பன், நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×