search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

    • நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து நடந்தது
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    வந்தவாசி:

    வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக் குழு உறுப்பினர் சேட்டு தலைமை தாங்கினார். கிளை உறுப்பினர்கள் சண்முகம் முனியன் ஏழுமலை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் வி.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.முரளி, வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் பேசினர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் கீழ் கொடுங்கலூர் கிராம கூட்டுச்சாலையில் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்தும் மழைநீர் வடிகால் கால்வாயை சரியான முறையில் அமைக்கவில்லை என்று கூறியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப் பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் சுகுமார், ராதாகிருஷ்ணன், தீபநாதன், தேவி, ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×