search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagadeep Thankar"

    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நாளை (21-ந் தேதி) திருவனந்தபுரம் வருகிறார். அங்கு பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    மறுநாள் அவர் திருவனந்தபுரம் சட்டசபை கட்டிட வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது இது தொடர்பான நினைவு சின்னத்தையும் திறந்து வைக்கிறார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • இதில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும்.
    • மக்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:

    உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சினை. உறுப்பு தானத்திற்கான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். மக்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிப்பதுடன், அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 


    இந்த முக்கியமான பிரச்சினையில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும். இந்த விஷயத்தில் சரியான சூழலை உருவாக்கும் தாதிச்சி தேஹ்தன் சமிதி அமைப்பின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்த பணியில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×