என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வுபெற்ற நீதிபதி"

    • உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.
    • உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.

    உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாகுபாடின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு என தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    அப்போது, மாவட்ட நீதிபதியாக இருந்தோ அல்லது வழக்கறிஞர்களாக இருந்தோ உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்டாலும், ஓய்வுபெற்ற அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற கொள்கை பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது

    ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள்:-

    * உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.

    உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.

    * உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும்போதே இறந்தால், அவர் நிரந்தரமாகப் பணியாற்றினாலும் அல்லது கூடுதல் பொறுப்பில் இருந்தாலும், அவரது மனைவி அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. #ThoothukudiSterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22‍-ந்தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது.



    அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மே 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதாகவும், ஆலை உற்பத்தியால் மாசு உண்டாவதாகவும் கூறப்படும் வாதத்தை ஆராய, குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வாதிட்டது. ஆனால் தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது. இந்த விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையில் நடந்தது.

    வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். மேலும் இந்த குழு, ஆறு வாரங்களுக்குள் தங்கள் ஆய்வு பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவருடன் மேலும் அந்த குழுவில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய வனத்துறையை சேர்ந்த‌ 2 பேரும் இடம்பெற்றுள்ளார்கள்.

    இந்த குழு ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள மாசு குறித்து ஆய்வு செய்யும். அதை தொடர்ந்து 6 வாரத்தில் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும். ஓய்வுபெற்ற நீதிபதி வசீப்தர் ஏற்கனவே பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiSterlite

    ×