என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rabies virus"

    • நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக தகவல்.
    • நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

    அதன்படி, சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில்," நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 28,250 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிறுமி நியா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
    • சிறுமிக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருந்தது சோதனையில் தெரியவந்தது.

    கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. மேலும் தெருநாய் கடித்து ஏராளமாமனோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

    தெருநாய் கடித்ததன் காரணமாக ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளான 2 குழந்தைகள் ஏற்கனவே இருந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுமி பலியாகியிருக்கிறாள்.

    கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியை சேர்ந்த நியா பைசல் (வயது7) என்ற சிறுமி கடந்தமாதம் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது, அவரை ஒரு தெருநாய் கடித்தது. இதையடுத்து சிறுமி நியா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. 3 டோஸ் தடுப்பூசிகளும் சிறுமிக்கு போடப்பட்டு இருக்கிறது.

    இறுதி டோஸ் நாளை (6-ந்தேதி) போட திட்டமிடப் பட்டிருந்த நிலையில், சிறுமிக்கு திடீரென காய்ச்சல் அடிக்க தொடங்கியது. மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நியா பரிதாபமாக இறந்தாள்.

    சிறுமிக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருந்தது சோதனையில் தெரியவந்தது. தடுப்பூசிகள் போடப்பட்டும் சிறுமி இறந்திருப்பது, அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.
    • மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

    நாய் கடித்துவிட்டால் நம்மில் பலர் உடனே மருத்துவமனைக்கு செல்வதையே முதலில் செய்கின்றனர். மருத்துவமனைக்கு சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்பு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் முதல் ஒரு மணிநேரத்தில் நாம் செய்யும் விஷயங்கள்தான் நம் உயிரை காப்பாற்றும்.

    நாய் கடித்தால் அது ரேபீஸ் பாதித்த நாயா அல்லது சாதாரண நாயா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. நாய் கடித்த உடனேயே அருகில் எங்காவது டேப் (Tap) இருந்தால் அதனை திறந்து நாய் கடி காயங்களில் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வெறும் தண்ணீரில் கழுவிய பின்னர், சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். 15 நிமிடங்கள் இதனை செய்ய வேண்டும். ஒருவேளை சோப்பு இல்லாவிட்டால், வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.


    நாய் பற்கள் பட்டு துளை போல காயம் ஏற்பட்டிருந்தால் அந்த காயத்துக்குள் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டியது அவசியம். அதன் பின்னர் டெட்டால் போன்றவற்றை காயத்தின் மீது ஊற்றி நன்றாக கழுவிவிட வேண்டும். இப்படி செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும்.

    இதையடுத்து, மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரமாக எடுக்கிறோமோ அந்த அளவுக்கு ரேபீஸ் கிருமியை நாம் அழித்துவிடலாம். அதன் பின்னர் மருத்துவர் கூறும் நாட்களில் சென்று அடுத்தடுத்து 3 டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடி காயங்களுக்கு பொதுவாக தையல் போட மாட்டார்கள். காயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

    ×