search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child dies"

    • பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் ரித்திகா மீது கொட்டியது.
    • இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து புங்கம்பள்ளி கைகாலன் குட்டை பகுதி யை சேர்ந்தவர் செல்ல ப்பாண்டி (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சத்யா (24). இவர்களுடைய மகள் ரித்திகா (3).

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சத்யா வீட்டுக்கு வெளியே வெந்நீர் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரித்திகா அங்கு யாரும் இல்லாத போது பாத்திரத்தில் இருந்து வெந்நீர் எடுக்க முயன்றார்.

    அப்போது ரித்திகா திடீரென பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் அவர் மீது கொட்டியது. இதனால் ரித்திகா அலறி துடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ரித்திகாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ரித்திகா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி பாண்டி சுவாதி. இவர்களுக்கு மோஷிகா ஸ்ரீ (வயது 2) குழந்தை இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாண்டிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி உதவியாக இருந்தார்.

    இதன் காரணமாக பாண்டி சுவாதி தனது மகள் மோஷிகாவை நாட்டார் மங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மோஷிகா ஸ்ரீவுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. மருத்துவரிடம் காண்பித்தும் காய்ச்சல் குறையவில்லை‌. சம்பவத்தன்று உடல்நிலை மோசமானதால் குழந்தையை செக்கா னூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டாள். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலால் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தும்மக்குண்டு, நாட்டார்மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக முகாமிட்டு அந்த பகுதியில் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெற்றோர் கண் முன்னே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பங்காரு நகர் வடக்கு பற்றிய சேர்ந்தவர் குணசீலன் (வயது 27) இவர் ஜேசிபி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    நேற்று இவர் தனது மனைவி மோனிகா, அக்கா நீலாவதி அவரது பெண் குழந்தை மயூரி (11/2). ஆகியோருடன் காஞ்சிபுரத்திலிருந்து மாமண்டூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். தூசி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த பைக்கும் குணசீலன் ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் குணசீலன், மனைவி மோனிகா, அவரது குழந்தை மயூரி, அக்கா நீலாவதி ஆகியோர் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். குழந்தை மட்டும் நடுரோட்டில் விழுந்தது.

    அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த அரசு பஸ் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியது.

    இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்த குணசீலன், அவரது மனைவி மோனிகா, அக்கா லீலாவதி ஆகியோரே சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் குழந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரின் கண் முன்னே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கே. முத்துகவுண்டனூரை சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மதுஸ்ரீ (வயது 5).

    இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியின் உடல் நிலை திடீரென மோசமானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு சிறுமியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மதுஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
    தருமபுரி:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பாய்ச்சல் இதயம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் லாவண்யா (வயது1).

    லாவண்யாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதியடைந்தாக கூறப்படுகிறது.

    உடனே அந்த குழந்தையை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை லாவண்யா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஆரணி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி அடுத்த சிறுமூர் வடக்கு கொட்டாமேடு பகுதியை சேர்ந்தவர் அருள்மணி விவசாயி. இவரது மனைவி கனகா இவர்களுக்கு பவஸ்ரீ (வயது6), தாரகேஸ்வரன் (3).என்ற மகள் மகன் உள்ளனர்.

    பவஸ்ரீ ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகின்றார். பள்ளியில் இருந்து தினமும் வீட்டிற்கு வேன் வந்து பவஸ்ரீயை அழைத்து செல்வது வழக்கம். இன்று காலை பள்ளிவேன் மாணவி வீட்டிற்கு வந்து நின்றது. கனகா தனது மகள் பவஸ்ரீயை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டிலிருந்த 3 வயது குழந்தை தாரகேஸ்வரன் வீட்டைவிட்டு வெளியே வந்து வேனின் முன்பக்க சக்கரத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தான். இதனை கவனிக்காத வேன் டிரைவர் வேனை இயக்கினார். அப்போது குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தது.

    அவனது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் குழந்தையை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் வேன் டிரைவர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருப்பூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் சிறுமியை தண்ணீரில் அமுக்கி தாயே கொன்றதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    திருப்பூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி தமிழ் இசக்கி (21). இவர்களது 2½ வயது பெண் குழந்தை சிவன்யா ஸ்ரீ.

    இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு நாகராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது இவரது மகள் வீட்டின் பின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் சிவன்யா ஸ்ரீயை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறுமியின் தாய் தமிழ் இசக்கி முன்னுக்கு பின் முரணாக பேசினார். தான் வீட்டில் இருந்த போது சில மர்மநபர்கள் வந்து தாக்கியதாகவும், இதில் தான் மயங்கி விட்டதால் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

    இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் நாகராஜின் தாயார் தனலட்சுமி தனது பேத்தியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் மருமகள் தமிழ் இசக்கி மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து போலீசார் தமிழ் இசக்கியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.போலீசாரிடம் தமிழ் இசக்கி கூறியதாவது-

    எனது கணவர் நாகராஜூக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனை மாமியார் தான் தீர்த்து வைத்து வந்தார்.

    இந்த நிலையில் கணவர் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தகராறு வலுத்தது. எனவே குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொள்ள திட்டம் தீட்டினேன். அதன் படி குழந்தைகயை பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். தமிழ் இசக்கியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று காலை கியாஸ் சிலிண்டர் லாரி மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 35). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (30). இவர்களுக்கு நிவாஷ் (3) என்ற ஆண் குழந்தையும், லத்திகா என்ற 1½ வயது பெண் குழந்தையும் உள்ளது.

    இன்று காலை நிவாஷ் தனது தங்கை லத்திகாவை தூக்கி கொண்டு தெருவில் உள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்றான். குழந்தைகள் அனைவரும் தெருவில் விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் பண்ருட்டியில் உள்ள கியாஸ் ஏஜென்சிக்கு சொந்தமான மினி லாரி ஒன்று சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்தது.

    அந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உடனே அந்த குழந்தைகள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    இதில் 1½ வயது குழந்தையான லத்திகா மீது அந்த மினி லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லத்திகா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    லத்திகாவின் உடலை பார்த்து அவளது பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தை லத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மோதி 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை அருகே இன்று காலை வேன் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை தலை நசுங்கி பலியானது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காரைப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகம். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ரெடிமேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 1½ வயது மகன் சித்தார்த். இன்று காலை தூங்கி எழுந்த குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டினுள் வேலையில் இருந்தனர்.

    அப்போது சண்முகத்தின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேனை கிளப்புவதற்காக அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் திருப்பதி (30), பின்னோக்கி நகர்த்தினார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை டிரைவர் கவனிக்கவில்லை.

    இதில் பின் சக்கரத்தில் குழந்தை சிக்கிக்கொண்டது. தலை நசுங்கிய நிலையில் கதறித்துடித்த குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

    ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் வாயிலும், வயிற்றிலும் அடித்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

    பின்னர் பலியான குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வேன் டிரைவர் திருப்பதியை கைது செய்தனர்.

    டிரைவரின் அஜாக்கிரதையால் நடந்த இந்த விபத்தில் ஏதுமறியாத குழந்தை பலியானது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #Tamilnews
    மோசமான சாலையால் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை பகுதியைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை இறந்து பிறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை அருகில் உள்ள எழுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி துர்க்கையம்மாள் (வயது 26). நிறை மாத கர்ப்பிணி.

    சம்பவத்தன்று அதிகாலையில் துர்க்கையம்மாள் பிரசவ வேதனையால் துடித்தார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் துர்க்கையம்மாள் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது.

    அதில் அவரை ஏற்றி 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. இதனால் 60 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 6 மணி நேரம் ஆனது. இதனால் ஆம்புலன்சிலேயே குழந்தை இறந்தது.

    காலை 10 மணியளவில் துர்க்கையம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக ஆபரேசன் செய்தனர். அப்போது குழந்தை இறந்தே பிறந்தது. இதைக் கேட்டதும் சரவணனும் அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் துர்க்கையம்மாளின் உடல் நிலையும் கவலைக்கிடமானது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    துர்க்கையம்மாளின் கிராமத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் மாவடிபட்டு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால் அங்கு அனுமதிக்காமல் ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை 60 கி.மீ. தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    இது தொடர்பாக துர்க்கையம்மாளின் உறவினர்கள் கூறும் போது, ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்ததே குழந்தையின் உயிரை பலி வாங்கிவிட்டது என்று தெரிவித்தனர். #Tamilnews
    இரணியல் அருகே இன்று காலை ஊஞ்சல் கட்டி ஆடியபோது தூண் விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவிகா. இவர்களுக்கு பவுசிகா (13), ஜெபிஷா (7) என 2 மகள்கள் இருந்தனர்.

    சுப்பிரமணியனுக்கும், தேவிகாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்கிறார்கள். குழந்தைகள் 2 பேரும் தேவிகாவுடன் இருந்தனர். மூத்த மகள் பவுசிகா அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், ஜெபிஷா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இன்று காலை பவுசிகா விழித்தெழுந்ததும் வீட்டின் வெளிப்புற உத்திரத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென கயிறு கட்டப்பட்டு இருந்த தூண் சரிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் பவுசிகா சிக்கி அலறினார். சத்தம் கேட்டு அவரது தாயார் தேவிகா ஓடி வந்தார்.

    பவுசிகாவின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்தது. தேவிகாவும், அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து பவுசிகாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பவுசிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு தேவிகா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதுபற்றி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×