என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை உயிரிழப்பு"
- பிரியதர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
- பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார்.
பூந்தமல்லி:
மாங்காடு, ஜனனி நகர் இணைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திப்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது 2½ வயது மகள் பிரணிகாஸ்ரீ. பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை பிரிய தர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பிரிய தர்ஷினியை வீட்டின் வெளியே வந்து தேடியபோது அருகில் உள்ள காலி மைதானத்தில் தேங்கி இருந்த மழைநீரில் மகள் பிரணிகாஸ்ரீ கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மகளை மீட்டு மலையம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை பிரணிகாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வீட்டில் தாயுடன் தூங்கியபோது எழுந்த பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார். அப்போது வீட்டின் அருகே தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாங்காடு போலீசார் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை பிரணிகா ஸ்ரீ உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மவுனிகா தனது குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
- குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகளை வைக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் யுகந்தர். இவருடைய மனைவி மவுனிகா இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். தம்பதியின் ஒன்றரை வயது மகன் ரக்ஷித்ராம்.
மவுனிகா இரவு நேர பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய மகனை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மவுனிகா தனது குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு தண்ணீர் பாட்டில் மூடியை குழந்தை எடுத்து விழுங்கியது.
பாட்டில் மூடி தொண்டையில் சிக்கியதால் குழந்தை அலறியது. சத்தம் கேட்டு மவுனிகா மற்றும் அலுவலக ஊழியர்கள் ஓடி வந்தனர். குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரக்ஷித்ராம் இறந்தது.
இதைக் கண்டு அவருடைய தாய் கதறி அழுதார். குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகளை வைக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
- ஓமசேரியை சேர்ந்த குழந்தை, அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது.
- அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 2 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அரிய வகை நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் வாழக்கூடிய அமீபாக்கள், அதில் குளிக்கக்கூடியவர்களின் மூக்கு துவாரத்தின் வழியாக உடலுக்குள் சென்று மூளையை தாக்குவதன் மூலம் இந்த காய்ச்சல் பாதிப்பு வருகிறது.
கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி முதன் முதலாக கடந்த மாதம் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அந்த தொற்று பாதிப்பு சிறுமியின் சகோதரனான 7 வயது சிறுவன் உள்பட 8 பேருக்கு கண்டறியப்பட்டது.
அவர்களுக்கு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 3 மாத குழந்தையும் அடங்கும். ஓமசேரியை சேர்ந்த அந்த குழந்தை, அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது. அந்த குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து ஆஸ்பத்திரியில் ஒரு மாத மாக சிகிச்சை பெற்று வந்த 52 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்தார். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி வாந்தி-காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்த அந்த பெண், கடந்த மாதம் 4-ந்தேதி கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், உடல்நலம் தேறியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் கடந்த மாதம் 26-ந்தேதி மீண்டும் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டார். இதனால் மீண்டும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 3 மாத குழந்தை இன்று அதிகாலை இறந்தது. அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 2 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்திருப்பது, கேரளா மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் இருவரையும் சேர்த்து அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- குழந்தையின் தந்தை பீடி புகைப்பதற்கு அடிமையாகி இருந்தார்.
- தொண்டையில் பீடி துண்டு சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரு டவுனில் அடையாறு பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி தேவி. இவரது கணவர் திருமண விழா அலங்கார பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் சொந்த ஊர் பீகார் மாநிலம் ஆகும். இந்த தம்பதிக்கு அனீஷ் குமார் என்ற 10 மாத குழந்தை இருந்தது.
குழந்தையின் தந்தை பீடி புகைப்பதற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவர் அவ்வப்போது பீடியை புகைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே போட்டுவிட்டு சென்று வந்துள்ளார். அதுபோல் சம்பவத்தன்று அவர் புகைத்துவிட்டு பீடி துண்டை வீட்டில் போட்டுள்ளார்.
அதை அவரது 10 மாத குழந்தை வாயில் எடுத்து போட்டு விழுங்கியுள்ளது. இதில் தொண்டையில் பீடி துண்டு சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனே தாயும், தந்தையும் குழந்தையை மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை 10.30 மணி அளவில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து குழந்தையின் தாய், மங்களூரு புறநகர் போலீசில் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், எனது கணவர் புகைத்துவிட்டு பீடி துண்டை வீட்டில் போட வேண்டாம் என்று கூறினேன்.
இருப்பினும் அவர் இதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக பீடி துண்டை வீட்டுக்குள்ளேயே வீசி வந்தார். சம்பவத்தன்றும் அவர் அவ்வாறு புகைத்துவிட்டு வீசிய பீடி துண்டை எடுத்து எனது 10 மாத குழந்தை விழுங்கிவிட்டது. இதில் உடல் நலம் பாதித்து எனது குழந்தை உயிரிழந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை செய்த தவறால் 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெனினா 5-வதாக கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
- சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்ச நல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீட்டை சோதனை நடத்தினர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சியை அடுத்த மண்ணச்ச நல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (37). இவரது மனைவி ஜெனினா (35). இந்த தம்பதிகளுக்கு 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் வடக்கிபட்டி அருகே ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (80) என்பவரது வீட்டில் கடந்த 2 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெனினா 5-வதாக கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஏப்ரல் 29-ந் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதனிடையே நேற்று ஜெனினா பச்சிளம் பெண் குழந்தையை வீட்டில் விட்டு வீட்டை பூட்டி அருகாமையில் உள்ள சர்ச்சுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
ஜெனினா நடவடிக்கையில் வீட்டின் அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து வீட்டின் உரிமையாளரான பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பெருமாளின் மருமகன் ராமன் (36) மாற்று சாவியை கொண்டு வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் துர்நாற்றம் வீசி உள்ளது.
பின்னர் சந்தேகமடைந்த ராமன் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்ச நல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீட்டை சோதனை நடத்தினர். சோதனையின்போது வீட்டின் குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்டி மூடி இருந்த நிலையில் அதில் இருந்து புழுக்கள் தென்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஜெனினாவை விசாரணை நடத்த சென்றனர். போலீசாரை கண்டதும் ஜெனினா அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் ஜெனினாவை போலீசார் மடக்கி பிடித்து மண்ணச்ச நல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று முதல் கட்ட விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 4 குழந்தைகளுக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டதாகவும் 5-வதாக பிறந்த இந்த குழந்தைக்கு தானே பிரசவம் பார்த்ததாகவும் பிரசவத்தின்போது குழந்தை இறந்தே பிறந்ததாகவும் கூறினார்.
மேலும் கணவர் சுரேஷ் வெளி ஊருக்கு வேலைக்கு சென்றதாலும் உதவி வேறு ஆட்கள் இல்லாததால் வீட்டின் உள் குழி தோண்டி பச்சிளம் குழந்தையை புதைத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜியபுரம் டி.எஸ்.பி. பழனி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை புதைத்த இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் போலீசார் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெனினா போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறந்தே பிறந்ததா? 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் தாயே குழந்தை கொன்று புதைத்தாரா? அல்லது வேறு எதேனும் காரணத்தினால் குழந்தை இறந்ததா என தெரியவரும் என போலீசார் கூறினர்.
- பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- குழந்தை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் ராஜமங்கலத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நைட்டி உடையில் குழந்தையின் உடலை சுற்றி குப்பையில் வீசிச் சென்றுள்ளனர். குப்பைத் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் குழந்தையின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டு வாசலில் சார்ஜ் போடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- கணவன், மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரில் வீட்டு வாசலில் சார்ஜ் போடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ விபத்தில் இருந்து தம்பதி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கணவன் கௌதம், மனைவி மஞ்சு இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்தாள்.
- சிறுமி உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில் எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அக்சிதா,வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி அக்சிதா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார்.
- மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் சுகன்யாவுக்கு டந்த 45 நாட்களுக்கு முன்பு 2வது ஆண் குழந்தை பிறந்தது. குரு பிரசாத் என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டுக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசியை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார். அதன் பிறகு நேற்று மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் இருக்கலாம் என நினைத்து ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்துகளை கொடுத்துள்ளனர்.
இன்று காலை தனது குழந்தைக்கு சுகன்யா தாய்ப்பால் கொடுத்தார். ஆனால் பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா மற்றும் அவரது கணவர் குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் கதறி அழுதனர். தடுப்பூசி போட்ட பிறகுதான் தனது குழந்தைக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது உயிரிழந்து விட்டதாகவும் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே குழந்தை இறப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- தாயின் மடியில் இருந்து கீழே இறங்கி தவழ்ந்து சென்ற குழந்தை தீஷ்குமார், அங்கு ஓடிக்கொண்டிருந்த நார் மில் எந்திரத்தின் அருகே சென்றான்.
- எதிர்பாராத விதமாக குழந்தை அணிந்திருந்த சட்டை, நார் மில் எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உள்ளே இழுத்தது.
பரமத்திவேலூர்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சுராம் (வயது 36). இவரது மனைவி மனிஷா தேவி. இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் அருகே ஓலப்பாளையத்தில் உள்ள பிரபாகரன் என்பவரது தேங்காய் மட்டையில் இருந்து நார் பஞ்சு பிரித்து எடுக்கும் நார் மில்லில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
பஞ்சுராம் வழக்கம் போல் நேற்று மாலை நார் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க வந்த மனைவி மனிஷாதேவி, அவர்களது 1½ வயது ஆண் குழந்தை தீஷ்குமாரையும் அழைத்து வந்துள்ளார்.
கணவன், மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, தாயின் மடியில் இருந்து கீழே இறங்கி தவழ்ந்து சென்ற குழந்தை தீஷ்குமார், அங்கு ஓடிக்கொண்டிருந்த நார் மில் எந்திரத்தின் அருகே சென்றான்.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை அணிந்திருந்த சட்டை, நார் மில் எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உள்ளே இழுத்தது. இதில் படுகாயம் அடைந்த தீஷ்குமார் அலறினான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், தீஷ்குமார் எந்திரத்தில் சிக்கியதை பார்த்து பதறினர். ஓடிச்சென்று குழந்தையை காப்பாற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தீஷ்குமார் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர்.
இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 1½ வயது குழந்தை நார் மில்லில் உள்ள எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.
- குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் 5-வது வார்டு வெட்னி கரடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35)-பிரியா (27).
இந்த தம்பதிக்கு திலீப் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு இரவு 7 மணிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.
ஆனால் குழந்தையின் பெற்றோர் தனியார் ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு 8 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதி செய்வதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஆனதாக தெரிகிறது.
அதன்பிறகு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க சென்றபோது சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டது.
இதனால் இன்று காலை ஈஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தாரமங்கலம் அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி கார்த்திகா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ரூபி என்ற குழந்தை உள்ளது. 8 மாதத்தில் மரியா ஆரோனிக்கா என்ற குழந்தை இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மரியா ஆரோனிக்காவை அவளது பெற்றோர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மரியா ஆரோனிக்காவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் மரியா ஆரோனிக்காவுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை குழந்தை மரியா ஆரோனிக்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதைகேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறுகையில், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை மரியா ஆரோனிக்காவை பெற்றோர் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்ததில் டைப்-1 வகை நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. குழந்தைக்கு சர்க்கரை அளவானது 520 இருந்துள்ளது. இதுமாதிரியான நோய் 4 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி இந்த நோய் வரும் பட்சத்தில் 6 மாதத்தில் இருந்து 1 ஆண்டுக்குள் தான் தெரியவரும். 6 மாதத்துக்கு பிறகு தாய்பாலை தவிர வேறு உணவு குழந்தைக்கு உட்கொள்ள கொடுக்கும்போது இதுமாதிரியான சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
சம்பவத்தன்று மரியா ஆரோனிக்காவுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால், மூளை செயலிழந்து விட்டது. நோயின் தன்மை தீவிரமடைந்ததால், சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. எனவே ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டால் பெற்றோர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.






