search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பரிதாப சாவு
    X

    மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பரிதாப சாவு

    • திருமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி பாண்டி சுவாதி. இவர்களுக்கு மோஷிகா ஸ்ரீ (வயது 2) குழந்தை இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாண்டிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி உதவியாக இருந்தார்.

    இதன் காரணமாக பாண்டி சுவாதி தனது மகள் மோஷிகாவை நாட்டார் மங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மோஷிகா ஸ்ரீவுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. மருத்துவரிடம் காண்பித்தும் காய்ச்சல் குறையவில்லை‌. சம்பவத்தன்று உடல்நிலை மோசமானதால் குழந்தையை செக்கா னூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டாள். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலால் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தும்மக்குண்டு, நாட்டார்மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக முகாமிட்டு அந்த பகுதியில் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×