search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கே. முத்துகவுண்டனூரை சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மதுஸ்ரீ (வயது 5).

    இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியின் உடல் நிலை திடீரென மோசமானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு சிறுமியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மதுஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×