என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாறை அருகே வேன் மோதி 1½ வயது குழந்தை பலி
Byமாலை மலர்11 Jun 2018 5:03 AM GMT (Updated: 11 Jun 2018 5:03 AM GMT)
மணப்பாறை அருகே இன்று காலை வேன் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை தலை நசுங்கி பலியானது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காரைப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகம். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ரெடிமேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது 1½ வயது மகன் சித்தார்த். இன்று காலை தூங்கி எழுந்த குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டினுள் வேலையில் இருந்தனர்.
அப்போது சண்முகத்தின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேனை கிளப்புவதற்காக அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் திருப்பதி (30), பின்னோக்கி நகர்த்தினார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை டிரைவர் கவனிக்கவில்லை.
இதில் பின் சக்கரத்தில் குழந்தை சிக்கிக்கொண்டது. தலை நசுங்கிய நிலையில் கதறித்துடித்த குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் வாயிலும், வயிற்றிலும் அடித்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.
பின்னர் பலியான குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வேன் டிரைவர் திருப்பதியை கைது செய்தனர்.
டிரைவரின் அஜாக்கிரதையால் நடந்த இந்த விபத்தில் ஏதுமறியாத குழந்தை பலியானது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #Tamilnews
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காரைப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகம். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ரெடிமேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது 1½ வயது மகன் சித்தார்த். இன்று காலை தூங்கி எழுந்த குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டினுள் வேலையில் இருந்தனர்.
அப்போது சண்முகத்தின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேனை கிளப்புவதற்காக அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் திருப்பதி (30), பின்னோக்கி நகர்த்தினார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை டிரைவர் கவனிக்கவில்லை.
இதில் பின் சக்கரத்தில் குழந்தை சிக்கிக்கொண்டது. தலை நசுங்கிய நிலையில் கதறித்துடித்த குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் வாயிலும், வயிற்றிலும் அடித்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.
பின்னர் பலியான குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வேன் டிரைவர் திருப்பதியை கைது செய்தனர்.
டிரைவரின் அஜாக்கிரதையால் நடந்த இந்த விபத்தில் ஏதுமறியாத குழந்தை பலியானது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X