search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை பலி
    X

    மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை பலி

    தருமபுரி அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
    தருமபுரி:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பாய்ச்சல் இதயம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் லாவண்யா (வயது1).

    லாவண்யாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதியடைந்தாக கூறப்படுகிறது.

    உடனே அந்த குழந்தையை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை லாவண்யா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×