search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரு நாய்களை நகராட்சி அலுவலகத்தில் விடும் போராட்டம்
    X

    தெரு நாய்களை நகராட்சி அலுவலகத்தில் விடும் போராட்டம்

    • பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது.
    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது. அதை விரட்ட சென்ற தாயாரையும் கடிக்க வந்த போது அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் நாயை விரட்டினர். கடந்த மாதத்தில் மட்டும் கீழக்கரையில் 9 நபர் களை வெறி நாய்கள் கடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களை அச்சு றுத்தும் வெறி நாய் களை பிடிக்க கீழக் கரை நகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாவட்ட கலெக்டர், நகராட்சி அதிகா ரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர் தலைவர் அபுதாஹிர் கூறுகையில்,

    கீழக்கரையில் தொடர்ச்சியாக வெறி நாய்கள் பொது மக்களையும் குழந்தை களையும் கடித்துக் கொண்டி ருக்கிறது. இதனை எஸ்.டிபி.ஐ. கட்சி வன்மையாக கண்டிப்ப தோடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கீழக்கரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    Next Story
    ×