என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறநகர் மின்சார ரெயில்"

    • எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்கள் நடைபெறவுள்ளன.
    • பயணிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை, ஆதரவையும் வழங்க வேண்டும் என்றனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடக்கும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஏப்ரல் 5-ம் தேதி வரை கடற்கரை-தாம்பரம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் 40 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எழும்பூரில் 10, 11 நடைமேடைகளில் பணிகள் நடைபெறவுள்ளதால், 5 மற்றும் 6 நடைமேடைகளில் புறநகர் ரெயில்கள் வந்து செல்லும் வகையில் தற்காலிக அட்டவணை அமலுக்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில், புறநகர் ரெயில் சேவையில் குளறுபடிகள் ஏதுமில்லை என தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் முக்கிய மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்கள் காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் பயணிகள், பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குமாறு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் மனமாரக் கேட்டுக்கொள்கிறது.

    இந்த முக்கிய கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் சில புறநகர் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதும், சில சேவைகள் மாற்றி அமைக்கப்படுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கவனமாக திட்டமிடப்பட்டவை ஆகும். திட்டமிட்ட காலக்கெடுவில் பாதுகாப்பாகவும் திறம்படவும் பணிகளை நிறைவேற்றுவதற்காக அவை அவசியமானவை.

    இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டத்தின் நோக்கம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய, பயணிகள் நட்பு நிலையமாக மாற்றுவதாகும். மேம்பட்ட வசதிகள். உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.

    இந்த தற்காலிக மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என புரிந்துகொள்கிறோம். தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்கும் வருங்கால தலைமுறைகளுக்கும் நீண்டகால நன்மைகளை வழங்க இவை அவசியமானவை.

    சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்படாத மற்றும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன என்பது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, செயல்பாட்டு தோல்வி அல்லது பாதுகாப்பற்ற ரெயில் இயக்கம் குறித்த தவறான தகவல்கள் தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

    அனைத்து ரயில் இயக்கங்களும் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கடுமையான கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

    பயணிகள் பாதிப்பு குறித்த முழுமையான மதிப்பீட்டின் பின்னரே இந்த செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் மற்றும் செயல்பாட்டு துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் திட்டமிட்டுச் செயல்படுத்தியுள்ளனர்.

    பயணிகள் அனைவரும் தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் வழிகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் தொடர்ந்த ஒத்துழைப்பும் புரிதலும் உடன், இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி, அனைவருக்கும் பாதுகாப்பான, திறம்பட்ட மற்றும் வசதியான பயண அனுபவத்தை உருவாக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத், புறநகர் ரெயில் சேவைகளின் நெரிசலை குறைக்க உதவும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
    • புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை வந்த ரெயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலைக்காகவும், பல்வேறு பணிகள் காரணமாகவும் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் புறநகர் மின்சார ரெயில்களையே நம்பி உள்ளனர். புறநகர் மின்சார ரெயில்களில் ஏறி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் வேலைக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னை மூர்மார்க்கெட் வளாகத்துக்கு வரும் புறநகர் மின்சார விரைவு ரெயில்கள் கடந்த 2020-ம் ஆண்டு கோவிட் தொற்றுக்கு பிறகு மெதுவான பாதையில் இயக்கப்பட்டன.

    குறிப்பாக இந்த ரெயில்கள் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து மெதுவான பாதையில் இயக்கப்பட்டதால் மூர்மார்க்கெட் வளாகத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து வேலைக்கு செய்பவர்கள் தாமதமாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதையடுத்து புறநகர் மின்சார ரெயில்களை விரைவுப் பாதையில் இயக்க வேண்டும் என்று திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கனக்கான பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. புறநகர் மின்சார விரைவு ரெயில்கள் இன்று முதல் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத், புறநகர் ரெயில் சேவைகளின் நெரிசலை குறைக்க உதவும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி இன்று முதல் புறநகர் மின்சார விரைவு ரெயில்கள் விரைவுப் பாதையில் இயக்கப்பட்டன.

    இதனால் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை வந்த ரெயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சென்னை கோட்டம் முழுவதும் இரண்டாம் வகுப்பு புறநகர் ரெயில்களுக்கு மட்டுமே இலவச பயணம் பொருந்தும்.
    • கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச புறநகர் ரெயில் பயணத்தை தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு அறிவித்துள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் நாளை (25.01.2025) நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியில் கலந்துகொள்ளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச புறநகர் ரெயில் பயணத்தை தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளதாவது:-

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து இடையேயான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு பயண ஏற்பாட்டை தெற்கு ரெயில்வேயின் சென்னை பிரிவு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

    தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்கும், பார்வையாளர்களுக்கு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, போட்டியின் அனைத்து டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் புறநகர் ரெயில்களில் இலவச பயணத்தை வழங்குகிறது.

    இலவச பயண வசதியின் முக்கிய விவரங்கள்:

    இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கான செல்லுபடியாகும் போட்டி டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பார்வையாளர்கள்.

    சென்னை கோட்டம் முழுவதும் இரண்டாம் வகுப்பு புறநகர் ரெயில்களுக்கு மட்டுமே இலவச பயணம் பொருந்தும்.

    ஜனவரி 25, 2025 (நாளை) அன்று முதல் மற்றும் திரும்பும் பயணங்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

    பயணிகள்/பார்வையாளர்கள் தங்கள் பயணத்தின் போது தங்கள் அசல் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

    டிக்கெட் சரிபார்ப்பு ஊழியர்களின் கோரிக்கையின் பேரில் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து.
    • பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

    சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப். 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து

    எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
    • பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    தெற்கு ரெயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, அதன் விபரம் பின்வருமாறு:-

    சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக வரும் 16, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி உட்பட 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×