search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolkata Police Commissioner"

    பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜீவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். #PoliceCommissioner #RajeevKumar
    கொல்கத்தா:

    நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜீவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். இதையடுத்து கொல்கத்தா போலீஸ் கமிஷனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான அனுஜ் சர்மா நேற்று நியமனம் செய்யப்பட்டார். #PoliceCommissioner #RajeevKumar 
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். #CBIgrills #KolkataPoliceCommissioner #Sharadascam
    ஷில்லாங்:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு குழுவை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமைத்தார். ஆனால், இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கின் முக்கிய ஆவணங்களை ராஜீவ்குமார் அழித்து விட்டதாக குற்றம்சாட்டினர்.

    இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 3-ந்தேதி கொல்கத்தாவுக்கு வந்தனர். மேற்கு வங்காளம் மாநில போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி 3 நாட்கள் தர்ணாவில் ஈடுபட்டார்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது கடமையை செய்யவிடாமல் கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



    இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ராஜீவ் குமாருக்கு கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டது. மேகாலாயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகர சி.பி.ஐ. அலுவலகத்தில் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஷில்லாங்கில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ராஜீவ் குமார் நேற்று ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ராஜீவ் குமார் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது ராஜீவ் குமாரின் வக்கீல் பிஸ்வஜித் தேப்பும் உடன் இருந்தார். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதே சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. குணால் ஜோஷுக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி அவர் இன்று ஆஜரானார். அவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரையும், முன்னாள் எம்.பி.யையும் நேருக்கு நேர் வைத்து ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி வருவதாக ஷில்லாங்கில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #CBIgrills #KolkataPoliceCommissioner #Sharadascam
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று மேகாலயாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். #SaradhaScam #KolkataCommissioner #CBI
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பியது. அவர் தொடர்ந்து ஆஜராகாத நிலையில், சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று சிறிது நேரம் விசாரித்து விட்டு பின்னர் விடுவித்தனர்.

    சிபிஐ அதிகாரிகள் தடுக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.



    இதையடுத்து, கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் பிப்ரவரி 9-ம் தேதி விசாரணை நடத்துவதற்காக சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து கமிஷனர் ராஜீவ் குமார் நேற்றே ஷில்லாங் வந்து சேர்ந்தார். அவருடன் மாநில போலீஸ் அதிகாரிகள் 3 பேர் வந்தனர். இதேபோல் சிபிஐ தரப்பில் கமிஷனரிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து 10 அதிகாரிகள் நேற்றே ஷில்லாங் வந்து சேர்ந்தனர்.

    இன்று சிபிஐ அலுவலகத்தில் கமிஷனர் ராஜீவ் குமார் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாரதா நிறுவன மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக, கமிஷனரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதற்கிடையே, சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே திரண்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SaradhaScam #KolkataCommissioner #CBI
    கொல்கத்தாவில் போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த விடாமல் தடுத்தது தொடர்பாக, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #CBI #KolkataCommissioner
    புதுடெல்லி:

    சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.



    அதேசமயம் சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ சேனல் அருகே மம்தா பானர்ஜி நேற்று இரவு தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். மம்தாவின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

    இந்நிலையில், கொல்கத்தா விவகாரம் தொடர்பாக, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது.  

    பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்க மறுப்பதாகவும், விசாரிக்க சென்றால் தடைகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிரான ஆதாரங்களை நாளை தாக்கல் செய்யும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்தார்.

    வலுவான ஆதாரங்கள் இருந்தால் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வருந்தும் அளவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். #CBI #KolkataCommissioner
    ×