search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mason kill"

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.
    • 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஜெகன் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் குளித்து விட்டு தனது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரை அருகே துணியை காய போட சென்றுள்ளார்.

    அப்போது அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் ஜெகன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    ×