search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் மனமகிழ் மன்றத்திற்கு சீல்
    X

    செங்கோட்டையில் மனமகிழ் மன்றத்திற்கு சீல்

    • செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.
    • அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பது தெரியவந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அரசு அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த மன்றத்தில் சில முறைகேடுகள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான சிறப்பு தனிப்படை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பதும், உரிமம் இல்லாத 30-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும், அந்த மன்றத்திற்கு சீல் வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×