செங்கோட்டை சிவன் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு

செங்கோட்டை சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது.அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.
செங்கோட்டை  சிவன் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை சிவன் கோவில் மற்றும் ஆறுமுகசாமி ஒடுக்கம், மலையாளசாமி கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு, அன்னதான கூடத்தில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பின்னர் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜை புஷ்பாஞ்லி வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com