search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth arrested for"

    • சொட்டு நீர் பைப்பினை வாலிபர் ஒருவர் எடுத்துக் கொண்டிருந்தார்.
    • அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொல்லம்பாளையம் ஏரி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உமா சங்கர் (49). இவரது தோட்டத்தில் பயிர்களுக்கு சொட்டுநீர் முறையில் விவசாயம் செய்து வருகின்றார்.

    இந்த நிலையில் அந்த சொட்டு நீர் பைப்பினை வாலிபர் ஒருவர் உமா சங்கரின் தோட்டத்தில் புகுந்து பைப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த தோட்ட த்தின் உரிமையாளர் உடனடியாக அங்கு சென்று அவரை பிடித்தார்.

    இதையடுத்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனை அடுத்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஒலகடம் அடுத்த தாண்டா ம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (25) என்பதும், அவர் பைப்புகளை விற்பனை செய்வதற்காக திருடியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • கண்காணிப்பு கேமிராவில் மோட்டார் சைக்கிளை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

    அறச்சலூர்:

    அறச்சலூர் தலவுமலையில் ஓட்டல் நடத்தி வருபவர் முத்துசாமி (55). இவர் கடந்த 3-ந் தேதி தனது ஓட்டலில் வழக்கம்போல் வேலைநேரம் முடிந்த பின்னர் தனக்கு சொந்த மான மோட்டார்சை க்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது அதில் மோட்டார் சைக்கிளை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

    அது நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த பழனிமுத்து என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (40) என்பது தெரிய வந்தது. இவர் ஓட்டலி்ல் 2 மாதங்கள் வேலை செய்து விட்டு நின்றவர் என்பதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் அறச்சலூர் போலீசார் பூந்துறையில் இருந்து எழுமாத்தூர் செல்லும் ரோட்டில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில் அவர் அறச்சலூர் தலவுமலையில் ஓட்டலில் நிறுத்தியிருந்த ேமாட்டார் சைக்கிளை திருடிய கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அறச்சலூர் போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளி யம்பட்டி அடுத்த பவானிசாகர் பசுவா பாளையத்தை சேர்ந்த வர் ராமகிருஷ்ணன் (வயது 27). இவர் தொட்ட ம்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    அப்போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் மோட்டார் சைக்கிளை திருடியது மறு வாழ்வு முகாமை சேர்ந்த மோகன்ராஜ் (27) என தெரிய வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாலஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.

    • வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் ரோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் ரோடு அம்மன் நகர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் காணவில்லை. இதை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த தனியார் நிறுவன உரிமை யாளர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் புஞ்சை புளியம்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகித் (வயது 20) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் ரோகித்தை கைது செய்து நீதிமன்ற கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ரோகித் மீது கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு கள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • சக்திவேலை பவானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பவானி:

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபாநாயகன். இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். அவர் பவானி பூக்கடை வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வரு கிறார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் என கூறப்படு கிறது. இதை தொடர்ந்து அவர் நள்ளிரவு வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் கிடைக்க வில்லை. இது குறித்து பவானி போலீ சில் சபாநாயகன் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பவானி சப்- இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசா ரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலைய த்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பாப்ப ம்பட்டி சோழவண்டி வளவு கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் (24) என்பதும் பவானி பூக்கடை வீதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. வெல்டர் தொழில் செய்து வரும் சக்திவேல் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் திரு ட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர். இதை தொடர்ந்து சக்திவேலை பவானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் உள்ள கொளத்துப்பாளையம் பகுதியில் அப்பத்தாள் கோயில் அருகே டெக்ஸ்டைல் கடை உள்ளது.

    இங்கு கோபிநாத் என்பவர் அவருடைய நண்பரின் மோட்டார் சைக்கிளை கடையின் உள்பகுதியில் நிறுத்திவிட்டு உள்ளே இருந்துள்ளார்.

    மோட்டார் சைக்கிள் பூட்டப்படாமல் சாவியுடன் நின்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் அங்கு வந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.

    பின்னர் அந்த டெக்ஸ்டைல் கடையில் இருந்த ஊழியர்கள் பின் தொடர்ந்து தேடிய போது பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையத்தில் மோட்டார் சைக்கிளுடன் அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டை மாற்றியது தெரியவந்தது. பின்னர் அவரை சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவரது பெயர் சந்தோஷ்குமார் (21) என்பதும், திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போது பெருந்துறை அடுத்த பாலக்கரையில் உள்ள உறவினர் வீட்டின் அருகே வீடு வாடகைக்கு எடுத்து கூலி வேலை செய்து வருகிறார்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

    • மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.
    • தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    பெருமாள் கவுண்டர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் வெளியூரில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார். இவர் மாதத்தில் ஒரு முறை தனது வீட்டுக்கு வந்து செல்வார்.

    பெரியம்மாள் மட்டும் தனியாக இருந்து கொண்டு தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பெரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது இரவு 8 மணியளவில் அவரது வீட்டிற்குள் வந்த மர்மநபர் ஒருவர் பெரியம்மாளின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு வீட்டிற்கு வெளியே தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் தப்பி சென்றார். பின்னர் பெரியம்மாள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் சத்தியமங்கலம் எஸ்.டி. கார்னர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ஜனா என்கிற ஜனார்த்தனன் (26) என்றும் இவர் தான் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இது தொடர்பாக தலைமறைவான மற்றொருவரையும் தேடி வருகிறார்கள்.

    • குளித்தலையை சேர்ந்த புன்னியராஞ் என்பவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    திருப்பூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 34). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி யில் மனிதவள துறை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது கம்பெனியில் ஆனந்த் என்பவர் டிரை வராக பணியாற்றி வரு கிறார். இவர் கம்பெனிக்கு தேவையான துணிகளை கொண்டு வருவதற்காக செங்கப்பள்ளிக்கு சரக்கு வாகனத்தில் சென்றார்.

    தொடர்ந்து அவர் அங்கு துணிகளை ஏற்றிகொண்டு வந்தார். இதையடுத்து அவர் பெருந்துறை அடுத்த சிப்காட் அருகே ரோட்டோரம் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கு உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அவர் அங்கு சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து பார்த்தார்.

    அப்போது அங்கு நிறுத்தி இருந்த சரக்கு வாகனம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சரக்கு வாகனத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த புன்னியராஞ் (34) என்பவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் புன்னியராஞ்யை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் சரக்கு வாகனத்தை மீட்டனர். மேலும் அவர்மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த னர்.

    • காரில் இருந்தவர்கள் காரை வேகமாக திருப்ப முயன்றனர்.
    • 48 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.

    பெருந்துறை,

    பெருந்துறை சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    பெருந்துறை-கோவை சாலையில் பெருந்துறை போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று போலீசாரை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் காரை வேகமாக திருப்ப முயன்றனர். இதைப்பார்த்த போலீ சார் அந்த காரினை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    காரில் சீனாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 48 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.

    பின்னர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (40) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சுரேஷ்கு மாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 48 மதுபாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் செய்தனர். மேலும் சுரேஷ்கு மாரை நீதிம ன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் மலைய ம்பாளையம் வெள்ளோட்டம்பரப்பு பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதேபகுதியை சேர்ந்த சுந்தரம் (76) என்பவரை போலீசார் கைது செய்து 5 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

    கோபி சுண்டக்காம்பாளையம் எல்.பி.பீ. வாய்க்கால் கரை பகுதியில் மது விற்றதாக நம்பியூர் ஏலத்தூரை சேர்ந்த ரமேஷ்குமார் (37) என்பவரை போலீசார் கைது செய்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • புளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • கவியரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது புளியம்பட்டி-மேட்டுப்பாளையம் ரோடு ஜே.ஜே.நகர் அருகே மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை 18 பாக்கெட்டுகள் மற்றும் விமல் பான் மசாலா 9 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த கவியரசன்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.
    • இது தொடர்பாக பூபதி என்கிற பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகு (36). இவர் மேட்டூர் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    அப்போது 2 பேரும் திடீரென்று வியாபாரி ரகுவிடம் வாய்த்தகராறு செய்ததோடு தாக்குதலில் ஈடுபட்டனர்.

    அப்போது ரகுவின் கழுத்தில் இருந்த 6 அரை பவுன் நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.

    இதையடுத்து பின்னால் மற்றொரு வாகனத்தில் ரகு துரத்தி சென்றதையடுத்து மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.

    இது தொடர்பாக ரகு கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரோடு பழைய கரூர் ரோடு, கோணவாய்க்கால், பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரன் (30) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே ஊமரெட்டியூர் மாரியம்மன் கோவில் பின்புறம் வசிப்பவர் ரேவதி வயது (50).

    இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு வராண்டாவில் சமையல் செய்து விட்டு கியாஸ் சிலிண்டரையும், அடுப்பையும் அப்படியே விட்டு விட்டு இரவு தூங்கச்சென்று விட்டார்.

    பின்னர் காலை எழுந்து வெளியே சமையல் செய்வதற்காக வந்து பார்த்தபொழுது சிலிண்டரும், அடுப்பும் காணவில்லை. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் ரேவதி புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் ரேவதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் லைலா என்பவர் கியாஸ் சிலிண்டரும், அடுப்பும் எனது வீட்டில் இருக்கிறது.

    இதனை எனது வீட்டிற்கு அடிக்கடி வரும் ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன் (21) என்பவர் இங்கு வைத்து விட்டு சென்றுள்ளார் என ரேவதியிடம் லைலா கூறியுள்ளார்.

    உடனடியாக கோவிந்தனை லைலா தனது வீட்டுக்கு வரும்படி நைசாக பேசி வரவழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து லைலாவும், ரேவதியும் அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    ×