search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி மது விற்பனை செய்த வாலிபர் கைது
    X

    அனுமதியின்றி மது விற்பனை செய்த வாலிபர் கைது

    • கடத்தூர் போலீசார் சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
    • அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டி பாளையம் அடுத்த சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கு இருந்து தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்று வளைத்து பிடித்தனர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை மாவ ட்டம் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (41) என்பதும், அவர் சிங்கிரிபாளையம் பகுதியில் தங்கி அனுமதி யின்றி மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 450 மதிப்புள்ள 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×