search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    • பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர்.
    • வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி செங்காடு பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவர் பவானி அருகில் உள்ள சேர்வ ராயன்பாளையம் பகுதியில் உள்ள தனது தங்கையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் மோட்டார் சைக்கி ளை அவரது தங்கை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சாவியை வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டுக்கு சென்றார்.

    பிறகு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவர் பவானி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் பவானி மேட்டூர் மெயின் ரோடு பூக்கடை பகுதியில் ஒரு வாலிபர் வந்து கொண்டி ருந்தனர். அவர் மீது சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீ சார் அவரை நிறுத்தி விசா ரணை நடத்தினர்.

    இதில் அவர் முன்னுக்கு முரணாக பதில் கூறினார். இதையடுத்து அந்த வாலி பரை போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஈரோடு பி.பி. அக்ரகாரம் பூம்புகார் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பது தெரிய வந்தது.

    மேலும் ஈரோடு தினசரி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் பவானி, சேர்வராயன் பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கி ளை திருடியது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×