search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "from woman"

    • முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது
    • அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது மனைவி தங்கமணி (47).மளிகை கடை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கத்தி முனையில் தங்கமணி அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலியை முகமூடி அணிந்த மருமநபர் பறித்து சென்றார்.

    இதையடுத்து முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால், திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் காலை முதல் நகை பறிப்பு சம்பவம் நடை பெற்றது வரை சுற்றித்திரிந்த நபர்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

    மேலும் அந்தியூர் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளை இரவு 11 மணிக்கு மேல் மூடவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றார்கள். ஏனெனில் திருட்டு சம்பவம் நடைபெற்ற உடன் டீ கடையில் டீ குடிப்பது போல் அங்கு சென்று அமர்ந்து விடுவதால் குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீசாருக்கு சிரமம் ஏற்படுவதால் டீக்கடை உரிமையா ளர்களுக்கு இரவு 11 மணிக்கு மேல் கடையை திறக்க கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.
    • தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    பெருமாள் கவுண்டர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் வெளியூரில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார். இவர் மாதத்தில் ஒரு முறை தனது வீட்டுக்கு வந்து செல்வார்.

    பெரியம்மாள் மட்டும் தனியாக இருந்து கொண்டு தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பெரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது இரவு 8 மணியளவில் அவரது வீட்டிற்குள் வந்த மர்மநபர் ஒருவர் பெரியம்மாளின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு வீட்டிற்கு வெளியே தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் தப்பி சென்றார். பின்னர் பெரியம்மாள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் சத்தியமங்கலம் எஸ்.டி. கார்னர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ஜனா என்கிற ஜனார்த்தனன் (26) என்றும் இவர் தான் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த பெரியம்மாளிடம் நகை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இது தொடர்பாக தலைமறைவான மற்றொருவரையும் தேடி வருகிறார்கள்.

    • சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.
    • விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை கருப்புசாமி என்பவர் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள கிராமம் எம்.பி.என்.புரம் நெசவாளர் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் கவின் குமார்.

    கடந்த 3 மாத்திற்கு முன்பு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.

    இதனையடுத்து 1½ பவுன் தங்க செயின் திருட்டு போனதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் என்றும் இச்சம்பவம் குறித்து கவின்குமார் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கருப்புசாமி (35) என்பவர் இந்த பெண்ணிடம் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    போலீசார் அவரை கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×