search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
    X

    மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

    • மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் சம்பவத்தன்று கே.என்.பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (24) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இரு ந்தார்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது.

    அதே போல் சதுமுகை பகுதியை சேர்ந்த கணேசன் (55) என்பவர் டி.ஜி.புதூர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டும் திருடப்பட்டதாக பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்ய ப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் வேட்டுவன் புதூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஏளூர் வேட்டு வன் புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரன் (36) என்பதும், அவர் நவீன்குமார் மற்றும் கணேசன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து மகேந்திரன் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×