என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் சக்கரபாணி"
- 2024- 25ம் ஆண்டில் நெல் உள்ளிட்ட பொருட்கள் போக்குவரத்து செலவினம் ரூ.863 கோடி செலவானது.
- அதிமுக ஆட்சியில் 1.20 கோடி டன் நெல் போக்குவரத்துக்கு ரூ.1,947 கோடி செலவானது.
தமிழகத்தில் நெல் கொள்முதலும் நகர்வும் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
நெல் கொள்முதல், நகர்வில் தொய்வு என ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்ட நிலையில் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 12.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மழை, பண்டிகையால் ஏற்பட்ட தடங்கலையும் மீறி 10.75 லட்சம் டன் நெல் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களை மீறி லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் நெல் நகர்வு நடைபெற்று வருகிறது. 2024- 25ம் ஆண்டில் நெல் உள்ளிட்ட பொருட்கள் போக்குவரத்து செலவினம் ரூ.863 கோடி செலவானது.
அதிமுக ஆட்சியில் 1.20 கோடி டன் நெல் போக்குவரத்துக்கு ரூ.1,947 கோடி செலவானது. நெல் போக்குவரத்து செலவினம் திமுக ஆட்சியில் ரூ.731, அதிமுக ஆட்சியில் ரூ.1,622 செலவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* கொள்முதல் நிலையங்களிலிருந்து 4,000 லாரிகள், 10 ரெயில்வே வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன.
* ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
* நாள் ஒன்றிற்கு தலா 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தற்போதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை, உடனே அனுமதி வாங்கி தாருங்கள்.
* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது.
* நெல் அதிகமாக விளையும் இடத்தில் 2,000 முதல் 3,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்கிறோம்.
* நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்.
* நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
* கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- முன்கூட்டியே அரிசி பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
அரிசு குடும்ப அட்டைத்தாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.
அரிசியை முன்கூட்டியே அக்டோபரில் பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் அரிசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.
- அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள் நாங்கள்.
- எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி மற்றும் நத்தத்தில் தி.மு.க. சார்பில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வேடசந்தூரில் செயற்பொறியாளர் மின் கோட்ட அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் நானும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டோம். இந்த விழாவில் கலந்து கொண்டு வந்தபிறகு, அ.தி.மு.க.வினர் வெளியிட்ட அறிக்கையை பார்த்த பிறகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் அங்கு குப்பைத்தொட்டியில் போடப்பட்ட சம்பவமே எனக்கு தெரியவந்தது. இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை தி.மு.க. என்றுமே செய்யாது. ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகப்பைகளில் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் அந்த படங்கள் அப்படியே இருக்கட்டும் விட்டுவிடுங்கள். அவர்களது படங்கள் இருந்தாலும் பரவாயில்லை, பள்ளி மாணவர்களுக்கு அந்த பைகளை கொடுங்கள் என்றார். இதனால் அவர் வழியில் வந்த நாங்கள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம். எல்லோரையும் நாங்கள் மதிக்க கூடியவர்கள். அனைத்து கட்சியினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள் நாங்கள்.
தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளை மட்டும் பார்க்கக்கூடாது. 234 தொகுதிகளும் சீராக வளர்ச்சி அடைய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. இதனால் நாங்கள் பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில் நத்தத்தில் இன்று அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் தனது தொகுதிக்கு அரசு கல்லூரியை கொண்டு வர முடியாதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.
- உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.
- மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.
தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
'மா' சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. மா விவசாயிகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசு.
பழனிசாமி செய்தித் தாள்களைக் கூடப் படிக்காமல் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விடுகிறார் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி. உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.
ஒரு பிரச்சினை எழுந்தால் அதனை உடனடியாகக் கவனித்துத் தீர்வு காணும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படிதான் மா சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்திலும் தலையிட்டு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. அதன் பிறகும் தன் இருப்பை காட்டிக் கொள்ளப் போராட்டம் அறிவித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கிருஷ்ணகிரி , திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக 5 முதல் 6 மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தியாகும் மா உற்பத்தி இந்த ஆண்டு பருவ நிலையின் சாதகத்தால் 8 மெட்ரிக் டன்னிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
மாம்பழக் கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம்.
இது தொடர்பாகக் கடந்த 16-ம் தேதி வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத் துறை இயக்குநர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள் ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் நிறுவனங்கள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், மாம்பழங்களைக் கொள்முதல் செய்யும் தேவை குறைந்துள்ளதாகப் பதப்படுத்தும் நிறுவனங்கள் சார்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தேவை குறைந்துள்ளதாலும் மா உற்பத்தி அதிகமானதாலும் விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது என்றும் சொன்னார்கள். ஜூன் 20-ம் தேதிக்கு மேல் விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கொள்வதாக பதப்படுத்தும் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளன.
மா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் கொள்முதல் செய்யவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலாளருமான தட்சிணாமூர்த்தி மாம்பழக் கூழ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட செய்தி நேற்றும் இன்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் பிறகு போராட்டத்தை அதிமுக நடத்துகிறது என்றால் அதற்கு அரசியல் காரணம் தவிர வேறு என்ன இருக்க முடியும்?
பிரச்சினைக்கு அரசு தீர்வு காணாவிட்டால் அதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டலாம். ஆனால், தீர்வு கண்ட பிறகும் நடவடிக்கை எடுத்துவிட்ட பிறகும் உண்ணா விரதப் போராட்டத்தை அறிவிப்பது எதற்காக? மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படும் எனச் சொல்லப்பட்ட 20-ம் தேதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை பழனிசாமி அறிவித்தது அரசியல் ஆதாயம் பெறத்தானே!
'இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என பழனிசாமி அறிக்கையில் பச்சைப் பொய் சொல்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
'மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்' என திமுக அரசை பழனிசாமி வலியுறுத்துவது எல்லாம் விந்தையிலும் விந்தை.
அதற்கான அதிகாரத்தை வைத்திருக்கும் ஒன்றிய பாஜகவைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடுவதன் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் காப்பாற்றி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.
ஒன்றிய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என இரட்டை வேடம் போடும் கபட வேடதாரிதான் பழனிசாமி!
மா விவசாயிகளின் நலனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசுதான்.
வேளாண் துறைக்குத் தனிப் நிதிநிலையை அறிவித்து உழவர் குடி மக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்டு வரும் திராவிட மாடல் அரசை இந்த அபத்தப் பொய்களால் எல்லாம் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பயனாளிகள் மட்டுமே ரேசன் அரிசி பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
- ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு முன்பே, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அனைத்துப் பொது விநியோகத் திட்டக் கடைகளிலும் தரமான அரிசி கிடைக்கிறது என்று பொதுமக்களும் மாற்றுக் கட்சியினரும் பாராட்டுகின்ற நிலை உருவாகியுள்ளது. அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி கடத்தலுக்குத் துணை போன அரிசி ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. அரிசிக் கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புலனாய்வு செய்து, கடத்தலுக்கு முன்பே அதை நிறுத்தும் வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் வழக்கமாக கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கு வழி செய்து அவர்களைக் கடத்தலில் ஈடுபடுத்தாமல் நல்வழிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயனாளிகள் மட்டுமே அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், ரேசன் அரிசி வாங்கி தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பவர்கள் யார் என்பதைக் கடைகள் வாரியாகக் கண்டறிந்து அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பொது விநியோகத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தான் அரிசிக் கடத்தலை அறவே தடுக்க முடியும். அரசி கடத்தல் தொடர்பாக தகவல் அளிக்க விரும்புபவர்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 வழியாகவும் தெரியப்படுத்தலாம்.
பொதுமக்களுக்குத் தரமான அரிசி வழங்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு, கடத்தலில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளோர் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
- விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
திண்டுக்கல் :
திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-
கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவிலேயே 2-வது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய இருக்கிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.
இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மேலும் ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
- தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
- நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மழைக்காலங்களில் நெல்மணிகள் நனையாமல் இருப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
2 லட்சத்து 86 ஆயிரம் 350 மெட்ரிக் டன் அளவுக்கு நெல்மணிகளை பாதுகாக்க முடியும். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் முடிவடையும்.
இது தவிர நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, அரசு துறை கட்டிடங்களிலும் நபார்டு சேமிப்பு கிடங்கு கட்டும் பணி நடைபெறுகிறது. அவற்றின் மூலம் 7 லட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்க முடியும். தற்போதைய ராபி பருவத்தில் 8 லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற பருவத்தில் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரல்ரேகை மூலம் பொருள் வாங்க முடியாதவர்கள் கண் கருவிழி கொண்டு பொருள் வாங்கலாம். திருவல்லிக்கேணி, பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்வதில் சிரமம் இருந்தால் அங்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒருவரை நியமித்து அவர்கள் மூலம் பொருள் வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.
தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு தற்போது ரூ.2125 வழங்கப்படுகிறது. அது படிப்படியாக ரூ.2500-ஐ எட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.
- நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் சாணம்பட்டியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் 100 சதவீதம் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.
நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர் அவர் கூறினார்.
- பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.
- பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், "சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.
தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர்புறத்தில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் ஒரு கடையிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில், விரைவில் டெண்டர் விடப்பட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். அதுவரை பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
- விவசாயிகள் மீண்டும் விடுத்த கோரிக்கையின்படி நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தப்படும்.
- செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதியில் இன்று மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நான், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்கள், நிலக்கடலை , உளுந்து போன்ற பயிர்களை 2 குழுக்களாக சென்று ஆய்வு செய்தோம்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் 87 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்று மாலை வரை ஆய்வு செய்ய உள்ளதால் அதன் பிறகு பாதிப்பின் விவரம் முழுமையாக தெரியவரும். மேலும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 987 ஹெக்டேரில் உளுந்து, 462 ஹெக்டேரில் நிலக்கடலை, 16900 ஹெக்டேரில் நெற்பயிர்கள் என 18324 ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்று முழுவதும் கள ஆய்வு செய்து நாளை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பயிர் சேத விவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம்.
அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று தருவது குறித்தும் , பாதிப்புக்கு ஏற்றவாறு எவ்வளவு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்தும் அறிவிப்பார்.இதுவரை 11.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 58 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நினைக்கப்பட்டது.
ஏற்கனவே விவசாயிகள் நெல்லின் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்த கோரிக்கையின் படி மத்திய அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தினார். அதை தொடர்ந்து மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் அளவை 19 சதவீதமாக உயர்த்தியது. இந்த நடைமுறை அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது விவசாயிகள் மீண்டும் விடுத்த கோரிக்கையின்படி நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தப்படும்.
தமிழ்நாட்டில் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு இருக்கக் கூடாது என்பதற்காக ரூ.238 கோடி மதிப்பில் செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். வருகிற 11-ந் தேதி 1.66 லட்சம் மெட்ரிக் டன் சேமித்து வைக்க கூடிய செமி குடோன்களை முதல் கட்டமாக முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். கடந்த காலங்களில் 350 அரவை ஆலைகள் தான் இருந்தன. ஆனால் தற்போது 750 அரவை ஆலைகள் உள்ளன.
செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்தியா முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்.
- ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர். பகுதியில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். இது மக்களுக்கான பொற்கால ஆட்சியாக திகழ்கிறது. இதனால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
வேட்பாளரை அறிவித்து தனித்து நிற்க முடியாமல் திணறும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் காலூன்ற முடியாததால் அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கிறது.
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. எத்தனை அண்ணாமலை அ.தி.மு.க.வுடன் கூட்டணியாக வந்தாலும் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.






