என் மலர்
நீங்கள் தேடியது "Ration rice smuggling"
செட்டிபாளையம்:
கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுகிறது. அதுபோல் நேற்று இரவும் லாரி ஒன்றில் அரிசி கடத்தப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில், எஸ்.ஐ.கவியரசு, எஸ்.எஸ்.ஐ., கதிரேசன், போலீஸ்காரர் குமரேசன் ஆகியோர் மதுக்கரை மரப்பாலம் அடுத்த பெட்ரோல் பங்க் அருகே, கோவை -பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிந்தது இதையடுத்து லாரியை மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அதில் 50 கிலோ வீதம், 200 மூட்டைகளில், 10 டன் அரிசி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை சுந்தராபுரம் பகுதியிலிருந்து, கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.இதையடுத்து லாரி டிரைவர் பாலக்காடு மாவட்டம் நல்லேபிள்ளை, நீலிப்பதனை சேர்ந்த ராமகிருஷ்ணன்(39) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் பொள்ளாச்சி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இதேபோன்று பீளமேட்டிலும் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். சூலூர் போலீசாருக்கு நீலாம்பூர் அருகே மயிலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து எஸ்.ஐ.க்கள் நவநீத கிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், தலைமை காவலர் சந்துரு ஆகியோர் தலைமையிலான போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு குடோனை திறந்து உள்ளே சென்று போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது குடோனில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 40 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ அரிசி இருந்தது. இந்த குடோனை பாபு என்பவர் வாடகைக்கு எடுத்து, அருகே உள்ள வீடுகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதனை மூட்டையாக கட்டி கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி நள்ளிரவில் படகு மூலம் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டுகள் துரைமுருகன், முத்துமாணிக்கம், சுரேஷ் கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 2நாட்களாக பழவேற்காடு ஏரிப்பகுதி மற்றும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். இந்த நிலையில் கூனங்குப்பம் பகுதியில் உள்ள படகுத்துறையில் 50 கிலோ எடை கொண்ட 200 ரேஷன் அரிசி மூட்டைகளை 2 படகுகளில் ஏற்றி கொண்டு இருந்ததை போலீசார் பார்த்தனர். போலீசாரை பார்த்ததும் சிலர் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து படகில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், 2 படகுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த ஆந்திரா மாநிலம் தடாவை சேர்ந்த குமார், ரங்கநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
குறைந்த விலைக்கு பழவேற்காடு பகுதியில் ரேஷன் அரிசியை அடிக்கடி வாங்குவதும் இதனை படகு மூலம் ஆந்திராவுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து திருவள்ளூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
பெரியகுளம் அருகே உள்ள ஜி. கள்ளிப்பட்டி அழகர் கோவில் தெரு பகுதியில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேவதானப்பட்டி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பீர்முகமதுவை பெரியகுளம் தென்கரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து கேரளா மாநிலத்திற்கு கடத்த இருந்த 500 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் பீர் முகமது தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதும், இவர் மீது அரிசி கடத்தல் சம்மந்தமான வழக்குகள் உள்ளதும், 80வயது முதியவர் என்பதை தனக்கு சாதகமாக்கி கொண்ட பீர் முகமது தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் அரிசி வாங்கி அதை ஒன்று சேர்த்து கேரளா மாநிலத்தை சேர்ந்த அரிசி கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கூடலூர்:
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் அரிசியை சிலர் மொத்தமாக கொள்முதல் செய்து கேரளாவுக்கு ரகசியமாக கடத்துகின்றனர்.
கழுதைகள் மூலமும் தோட்ட தொழிலாளர்கள் மூலமும் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. அதிகாரிகளின் தீவிர சோதனையால் அது கட்டுபடுத்தப்பட்டது. அதன் பின்பு அரசு பஸ்களில் கடத்தினர். போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தியதால் சில நாட்கள் ரேசன் அரிசி கடத்தல் இல்லாமல் இருந்தது.
தற்போது மீண்டும் ரேசன் அரிசி கடத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குமுளி அருகே தமிழக வனப்பகுதியில் ரேசன் அரிசிகளை பதுக்கி சிலர் கேரளாவுக்கு கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் கண்ணணுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அதிகாரிகள் வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செடிகளுக்குள் 20 மூட்டைகள் கிடந்தது. அதனை கைப்பற்றி சோதனையிட்டதில் 500 கிலோ ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதிகாரிகள் வந்ததால் பதுக்கல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரேசன் அரிசியை கைப்பற்றிய அதிகாரிகள் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews