என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செட்டிபாளையம், சூலூரில் இருந்து கேரளாவுக்கு 14 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - வாலிபர் கைது
செட்டிபாளையம்:
கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுகிறது. அதுபோல் நேற்று இரவும் லாரி ஒன்றில் அரிசி கடத்தப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில், எஸ்.ஐ.கவியரசு, எஸ்.எஸ்.ஐ., கதிரேசன், போலீஸ்காரர் குமரேசன் ஆகியோர் மதுக்கரை மரப்பாலம் அடுத்த பெட்ரோல் பங்க் அருகே, கோவை -பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிந்தது இதையடுத்து லாரியை மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அதில் 50 கிலோ வீதம், 200 மூட்டைகளில், 10 டன் அரிசி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை சுந்தராபுரம் பகுதியிலிருந்து, கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.இதையடுத்து லாரி டிரைவர் பாலக்காடு மாவட்டம் நல்லேபிள்ளை, நீலிப்பதனை சேர்ந்த ராமகிருஷ்ணன்(39) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் பொள்ளாச்சி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இதேபோன்று பீளமேட்டிலும் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். சூலூர் போலீசாருக்கு நீலாம்பூர் அருகே மயிலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து எஸ்.ஐ.க்கள் நவநீத கிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், தலைமை காவலர் சந்துரு ஆகியோர் தலைமையிலான போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு குடோனை திறந்து உள்ளே சென்று போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது குடோனில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 40 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ அரிசி இருந்தது. இந்த குடோனை பாபு என்பவர் வாடகைக்கு எடுத்து, அருகே உள்ள வீடுகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதனை மூட்டையாக கட்டி கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்