என் மலர்
உள்ளூர் செய்திகள்

செட்டேரி தடுப்பணை கானாற்றில் மணல் கடத்த முயற்சி
- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டம்பள்ளி அடுத்த செட்டேரி டேம் அருகே உள்ள கானாற்றில் அடையாளம் தெரியாத 2 பேர் அரசுக்கு சொந்தமான இடத்தில் மணல் கடத்த அங்கிருந்த மணல்களை ஜல்லடை வைத்து ஜலித்துக் கொண்டு இருந்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் 2 பேரும் தப்பி ஓடினர். ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
Next Story






