என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலிவுட்"

    • இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது
    • இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.

    திரையரங்குகளில் வசூல் எவ்வளவு, எத்தனை நாட்கள் ஓடியது என்ற கணக்குகளை விட, இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது

    "இந்த படம் என்ன?", "யார் நடித்திருக்காங்க?", "கதை உண்மையா?" – இப்படிப் பல கேள்விகளோடே இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.

    2025 REWIND-ல், கலெக்சனை ஒதுக்கி விட்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் எவை?

    ஹிட்–ஃப்ளாப் எல்லையை தாண்டி மக்கள் மனசை கலக்கிய படங்கள் யாவை? இந்த லிஸ்ட், சினிமாவின் இன்னொரு பக்கமான Search Engine சொன்ன மக்கள் தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்

     1. சயாரா

    அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடிப்பில் உருவான காதல் படம் சயாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி ரூ.500 கோடி வசூலை கடந்தது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலை குவிப்பது இதுவே முதல்முறையாகும்.

    இளைஞர்கள் பெரும் ஆதரவை பெற்ற இப்படம் கூகுள் Search-லும் முதல் இடத்தை பிடித்துள்ளது.


    2. காந்தாரா - சாப்டர் 1

    காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்தது.

    இப்படம் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததால் இணையத்திலும் இப்படம் பேசுபொருளாகி இந்த பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.


    3. கூலி

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி படம் இந்தாண்டில் அதிக எதிர்பார்ப்போடு வெளியான படமாகும்.

    அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்திருந்தால் இந்த பட்டியலில் முதல் இடத்தை கூட இப்படம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


    4. வார் 2

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான வார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்தது மற்றும் கியாரா அத்வானியின் பிகினி காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. திரையரங்குகளில் இப்படம் மீதான வரவேற்பு குறைந்தாலும் இணையத்தில் இப்படம் பெரும் பேசுபொருளாகி இப்பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.


    5. சனம் தேரி கசம்

    சனம் தேரி கசம் இந்தாண்டு வெளியான படம் கிடையாது. 2016 ஆம் ஆண்டு வெளியான படம். அப்படியிருக்க இந்த படம் பட்டியலில் இடம்பெற காரணம் ரீரிலீஸ் தான்.

    2016-ம் ஆண்டு ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான சனம் தேரி கசம் படம் ரூ.7 கோடி வசூலை ஈட்டி தோல்வி அடைந்தது. விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

    9 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 7-ம் தேதி இந்தப் படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. காதல் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுது. இந்தப் படம் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

    தற்போது ரீரிலீஸ் கலாச்சாரம் இந்தியா முழுவதும் வைரஸ் போல பரவியுள்ளது. அதன் காரணமாக இப்படம் இந்த பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.


    6. மார்கோ

    மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் மார்கோ திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படம் வரவில்லை என மக்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இந்தி மொழியில் அதிக வசூலித்த மலையாள திரைப்படம் என்ற சாதனையை படைத்த இப்படம் மொத்தமாக 100 கோடி வசூலை கடந்தது. இந்தி பேசும் மக்களிடையே பெட்ரா வரவேற்பால் இந்த பட்டியலில் இப்படம் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.


    7. ஹவுஸ்புல் 5

    அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

    ஹவுஸ்புல் 4 பாகங்கள் பெற்ற வெற்றியால் ஹவுஸ்புல் 5 படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பினால் தான் இப்படம் இந்த பட்டியலில் 7 அம இடம் பிடித்துள்ளது.


    8. கேம் சேஞ்சர்

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

    இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இந்த பட்டியலில் இப்படம் 8 ஆம் பிடித்துள்ளது.


    9. மிசஸ்

    Mrs' என்பது 2025-ல் அதிகம் பேசப்பட்ட இந்திய படங்களில் ஒன்று. மலையாளத்தில் வெளியான The Great Indian Kitchen படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன இந்த படம், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் சந்திக்கும் அதிகாரம், அடக்குமுறை மற்றும் அடையாள இழப்பு போன்ற பிரச்சினைகளை நுணுக்கமாக பேசுகிறது.

    இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள சன்யா மல்ஹோத்ரா, பாரம்பரிய குடும்ப அமைப்பில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணின் மனஅழுத்தத்தையும், அவளின் மௌன எதிர்ப்பையும் மிக யதார்த்தமாக வழிபடுத்தியுள்ளார்.

    பெரிய ட்விஸ்ட், அதிக வசனங்கள் இல்லாமல், அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் சமூக உண்மைகளை சொல்வதே 'Mrs' படத்தின் பலம். பெண்களின் உழைப்பு, சமத்துவம், திருமண வாழ்க்கையில் உள்ள மறைமுக வன்முறை போன்ற விஷயங்களை நேர்மையாக பேசும் இந்த படம், வசூலை விட விவாதத்திலும், தேடலிலும் அதிக கவனம் பெற்றது.


    10. மகாவதார் நரசிம்மா

    அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான மகாவதார் நரசிம்மா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    வெறும் ரூ.15 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.

    வட இந்தியாவில் இப்படம் பெற்ற பெரிய வெற்றியால் இந்த பட்டியலில் இப்படம் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.

    • ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்‌ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
    • 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.

    பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர்' இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' புகழ் ஆதித்ய தார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தக் கதை பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.

    வெளியான ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இந்தப் படம் ரூ. 200 கோடி நிகர வசூலைத் தாண்டியது. வளைகுடா நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ. 44.5 கோடியை வசூலித்தது.

    இந்த படம் பாகிஸ்தானுக்கு எதிரான செய்தியைக் கொண்டிருப்பதாகக் கூறி ஆறு வளைகுடா நாடுகள் படத்தைத் தடை செய்துள்ளன.

    பாலிவுட் படங்களுக்கு வளைகுடா பகுதி ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த சூழலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் படத்தின் கருப்பொருளை எதிர்த்து அதன் வெளியீட்டிற்கு அனுமதி மறுத்தனர்.

    முன்னதாக 'ஃபைட்டர்', 'டைகர் 3', 'ஆர்டிகிள் 370' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தடைகளைச் சந்தித்துள்ளன. 

    • அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள்
    • பெரும்பாலான பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வருகிறோம்"

    பாலிவுட் திரைத்துறை மற்றும் மலையாள திரைத்துறை இடையே உள்ள வித்தியாசம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கருத்துக்களை பேசியுள்ளார்.

    சமீபத்திய பேட்டியில் பேசிய துல்கர் சல்மான் "நான் பாலிவுட்டில் நடித்தபோது, நான் ஒரு நட்சத்திரம் என்று அனைவரையும் நம்ப வைக்க வேண்டியிருந்தது. என்னைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் இருந்தார்கள். நாங்கள் ஒரு சொகுசு காரில் வந்தால் மட்டுமே அவர்கள் எங்களை நட்சத்திரங்களாக அங்கீகரித்தார்கள்.

    இல்லையெனில், அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள், மானிட்டரைப் பார்க்க ஒரு இடத்தைக் கூட ஒதுக்க மாட்டார்கள்" என்று கூறினார்.

    அதே நேரம் மலையாள திரைத்துறை குறித்து பேசிய துல்கர் சல்மான், எங்கள் துறையில், படங்களுக்கு அதிக செலவு இல்லை. இங்கு யாரும் ஆடம்பரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. நாங்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துகிறோம். பெரும்பாலான பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.

    துல்கர் சல்மான் 2018 இல் இர்பான் கான் உடன் 'கர்வான்' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி இருந்தார்.

    கடைசியாக கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வராலாற்று படமான 'காந்தா' படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

    • 'இக்கிஸ்' திரைப்படம் 1971 இந்தோ-பாக் போரில் பங்கேற்று வீரமரணமடைந்த அருண் கேத்ரபாலின் வாழ்க்கையை மையமாக கொண்டது.
    • தர்மேந்திரா, அருண் கேத்ரபாலின் தந்தை பிரிகேடியர் எம்.எல். கேத்ரபாலின் வேடத்தில் நடிக்கிறார்.

    பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா (89) நேற்று முன் தினம் காலமானார். சிறிது காலமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த தர்மேந்திரா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் தனது மகன் பாபி தியோலின் வீட்டிற்குத் திரும்பிய நிலையில் அங்கேயே காலமானார்.

    இந்த துயர நேரத்தில் அவரது கடைசி பட போஸ்டர் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

    அவர் இறந்த நாளில், அவரது கடைசி படமான 'இக்கிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

    'இக்கிஸ்' திரைப்படம் 1971 இந்தோ-பாக் போரில் பங்கேற்று 21 வயதில் வீரமரணமடைந்தவரும், பரம் வீர் சக்ரா விருது பெற்றவருமான அருண் கேத்ரபாலின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

    இந்தப் படத்தில், தர்மேந்திரா அருண் கேத்ரபாலின் தந்தை பிரிகேடியர் எம்.எல். கேத்ரபாலின் வேடத்தில் நடிக்கிறார். அருணின் வேடத்தில் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா நடிக்கிறார்.

    தர்மேந்திராவின் வெள்ளித்திரையில் கடைசியாகத் தோன்றும் இந்தப் படம், டிசம்பர் 25, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

    இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு மகத்தான அஞ்சலியாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

    • தமாஷா கலைஞர் விதாபாய் பாவ் மங் நாராயண்கோன்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
    • மொத்த எடையையும் ஒரேகாலில் போட்டநிலையில் எலும்புமுறிவு

    Eetha படத்தின் நடனக் காட்சியை ஒத்திகை செய்து பார்க்கும்போது நடிகை ஸ்ரத்தா கபூர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 

    புகழ்பெற்ற தமாஷா கலைஞர் விதாபாய் பாவ் மங் நாராயண்கோன்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் 'ஈதா'. இப்படத்தில் விதாபாய் கதாபாத்திரத்தில் பாலிவுட் டால் நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். ரந்தீப் ஹூடா கதாநாயகனாக நடிக்கிறார். லக்ஷ்மன் உடேகர் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்றுக்கு நடக ஒத்திகை செய்து பார்த்தபோது ஸ்ரத்தா கபூரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    நடனத்தின்போது மொத்த உடல் எடையையும் இடதுகாலில் போட்டதாக தெரிகிறது. இதனால் இடதுகால் விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பை இரண்டு வாரத்திற்கு இயக்குநர் உடேகர் நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் முக்கிய காட்சிகளை எடுத்துவிடலாம் என ஸ்ரத்தா கூறியதாக தெரிகிறது. இச்செய்தி ஸ்ரத்தா கபூர் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம்.
    • ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

    பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்வின் மனைவி, நடிகை பத்ரா லேகாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

    தம்பதியினர் தங்கள் 4 ஆம் திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தம்பதியினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

    அவர்களின் பதிவில்," இது எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம். எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2021 இல் ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரா லேகா திருமணம் செய்து கொண்டனர்.

    ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.    

    • 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க தொடங்கியதில் இருந்து சினிமா மாறி உள்ளது.
    • நான் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறுவேன் என்று நினைத்தேன்.

    தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் தெற்கில் நடிக்க தொடங்கியபோது, மிகவும் இளமையாக இருந்தேன். நான் நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என்றால், அந்த மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் பேசி நான் கற்றுக்கொண்டேன்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க தொடங்கியதில் இருந்து சினிமா மாறி உள்ளது. அது இன்னும் வளர்ச்சியடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நடிகையாக இருக்க விரும்புகிறேன்.

    நான் நானாகவே என் நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். நான் ஒரு மாலுக்குள் நுழைந்தாலோ அல்லது ஒரு திரையரங்குக்குள் நுழைந்தாலோ, மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் இன்னும் அந்த இடங்களுக்குள் நுழைவேன், ஏனென்றால் நான் இன்னும் என் வாழ்க்கையை நான் விரும்பும் வழியில் வாழ்வேன். எனக்கு மக்களைப் பிடிக்கும். எனக்கு மக்களுடன் சுற்றித் திரிவது பிடிக்கும். நான் சிறு வயதிலிருந்தே அப்படித்தான்.

    30 வயது வரை நடிப்பேன். அதன் பிறகு, நான் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறுவேன் என்று நினைத்தேன். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், நான் வேலை செய்து கொண்டிருந்தபோதும், இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தபோதும், நான் உண்மையில் என் சொந்த நிலைக்கு வந்தேன், அப்போது அதிர்ஷ்டவசமாக இந்தத் துறை உண்மையில் சுவையான பகுதிகளை எழுதத் தொடங்கியது. இது உலகம் முழுவதும் நடந்த ஒரு பொதுவான மாற்றம் என்று நான் நினைக்கிறேன்.

    இந்த வயது பயம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பலர் வயதானதைப் பற்றி ஏதோ ஒரு நோய் போலப் பேசுகிறார்கள். வயதானது மிகவும் அற்புதமானது. ஆனால் மக்கள் வயதானதைப் பற்றி ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சதீஷ் ஷா 1970 களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
    • நகைச்சுவைத் தொடரில் 55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சதிஷ் ஷா பாராட்டைப் பெற்றார்.

    பல பாலிவுட் படங்கள் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்ற நகைசுவை நடிகர் சதிஷ் ஷா (74) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    இதனை அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

    1951 ஆம் ஆண்டு குஜராத்தி குடும்பத்தில் பிறந்த சதீஷ் ஷா 1970 களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

    1984 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் தொடரான யே ஜோ ஹை ஜிந்தகி மூலம் சதிஷ் ஷா புகழ் பெற்றார். அதில் அவர் 55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

    தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, ஹம் ஆப்கே ஹைன் கோன்..!, ஹீரோ நம்பர் 1, மைன் ஹூன் நா மற்றும் ஃபனா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் சதிஷ் ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    • அமிதாப் பச்சன் தனது ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுப்பதையே மறுத்துவிடுவார்.
    • ஒவ்வொரு வேனிலும் குறைந்தது 6 உதவியாளர்கள் வேலை செய்வார்கள்.

    சினிமா என்பது சாமானியர்களுக்கு புலப்படாத ஒரு நிழல் உலகம் ஆகும். அதிலும் பாலிவுட் சினிமா எலைட் தன்மை தொக்கி நிற்கும் ஒரு மாயக் களம்.

    திரைபிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளின் லக்ஸுரி வாழக்கை குறித்து அரசல் புரசல்கள் அவ்வப்போது துண்டு செய்திகள் மூலம் தெரியவருவது வழக்கம்.

    அதுவும் ஆங்காங்கு பொதுவெளியில் மனம் திறக்கும் Insider-களின் மூலம் வெகுமக்களை மலைக்கவைக்கும் சில தகவல்கள் கசியும்.

    அந்த வகையில் சில பாலிவுட் ஜெயண்ட் நடிகர்களின் அலம்பல்கள் குறித்து ஷூட்அவுட், மும்பை சாகா, ஜிந்தா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சஞ்சய் குப்தா சில விஷயங்களை போட்டுடைத்துள்ளார்.

    அண்மையில் பங்கேற்ற பாட்கேஸ்ட் ஒன்றில் நடிகர்கள் செலவு குறித்து தயாரிப்பார்கள் புலம்பல் பற்றி பேசிய குப்தா, அமிதாப் பச்சன், ஹிரித்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் ஒரே ஒரு மேக்அப் பாய் உடன் எளிமையாக இருப்பார்கள். அமிதாப் பச்சன் எல்லாம் தனது ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுப்பதையே மறுத்துவிடுவார். அவரே பார்த்துக்கொள்வார்.

    ஆனால் எனக்கு தெரிந்த சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கென கட்டாயம் 6 வேனிட்டி கேரவன்கள் வேண்டும் என கொருவர். ஆமாங்க சீரியஸா உண்மைதான். 6 வேன்கள்!

    ஒரு வேன் அவர்கள் தனியாக இருப்பதற்கு, அதாவது அவர்கள் அதில் நிர்வாணமாக கூட அமர்ந்துகொண்டு Chill செய்வார்கள். மற்றொரு வேன் மேக்அப் போடுவதற்கு, அடுத்தது உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் அடங்கிய ஜிம் வேன், மற்றொன்று வருபவர்களை சந்திக்கும் மீட்டிங் பர்பஸ்க்கு, அடுத்தது அமர்ந்து சாப்பிட தனியாக ஒரு வேன், கடைசியாக ஒரு வேன், அது இந்த மற்ற 5 வேன்களில் பணி செய்யும் தங்கள் உதவியார்கள் இருப்பதற்கு, ஒவ்வொரு வேனிலும் குறைந்தது 6 உதவியாளர்கள் வேலை செய்வார்கள்.

    ஜிம் வேன் என்றால் அதில் டிரெய்னர்கள் இருப்பார்கள், மேக்கப் வேன் என்றால் மேக்அப் ஆர்டிஸ்ட்கள், அந்த ஆர்டிஸ்ட்களின் அசிஸ்டண்டுகள் என இருப்பார்கள். இந்த செலவு மொத்தமும் தயாரிப்பாளர் தலையில் தான் என்று தெரிவித்தார்.  

    • புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து சாம் சிஎஸ் பெரும் புகழைப்பெற்றார்.
    • இவர் பின்னணி இசையில் வெளியான இந்தி திரைப்படமான விக்ரம் வேதா நல்ல வரவேற்பை பெற்றுது

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சாம் சிஎஸ். இவரது இசையில் உருவான விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

    கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து சாம் சிஎஸ் பெரும் புகழைப்பெற்றார்.

    இந்நிலையில், சோனு சூட் நடிக்கும் புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

    ஏற்கனவே இவர் பின்னணி இசையில் வெளியான இந்தி திரைப்படமான விக்ரம் வேதா பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த ஆண்டின் சிறந்த நடிகர் இவர்தான் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்
    • நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன்.

    பாலிவுட் மூத்த நடிகர் நசீருதீன் ஷா திரைப்பட விருதுகள் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.

    பல நடிகர்கள் விருதுகளைத் துரத்திக் கொண்டிருக்கும் வேளையில் அவரின் வெளிப்படையான மற்றும் வேடிக்கையான கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நசீருதீன் ஷா, தனக்குக் கிடைத்த சில Filmfare விருதுகள் தனது பண்ணை வீட்டின் கழிவறையில் கைப்பிடிகளாகப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "ஒரு கதாபாத்திரத்தைச் சித்தரிப்பதற்காகத் தனது வாழ்க்கையையும் முயற்சியையும் அர்ப்பணித்த எந்தவொரு நடிகரும் ஒரு நல்ல நடிகர். நீங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, இந்த ஆண்டின் சிறந்த நடிகர் இவர்தான் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    தான் தற்போதெல்லாம் விருது விழாக்களில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டதாகவும், கடைசியாக வழங்கப்பட்ட இரண்டு Filmfare விருதுகளை வாங்க கூட செல்லவில்லை என்றும் ஷா தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் "அந்த விருதுகளைப் பற்றி நான் பெருமைப்படவில்லை. அதனால், நான் ஒரு பண்ணை வீடு கட்டியபோது, இந்த விருதுகள் அனைத்தையும் அங்கே வைக்க முடிவு செய்தேன். கழிப்பறைக்குச் செல்லும் எவருக்கும் தலா இரண்டு விருதுகள் கிடைக்கும், ஏனென்றால் கழிப்பறையில் உள்ள அனைத்து கைப்பிடிகளும் Filmfare விருதுகள் தான்.


    இந்த கோப்பைகளில் எனக்கு எந்த மதிப்பும் தெரியவில்லை. நான் முதன்முதலில் கோப்பைகளைப் பெற்றபோது மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் பின்னர் என்னைச் சுற்றி கோப்பைகள் குவிய ஆரம்பித்தன.

    இந்த விருதுகள் எல்லாம் பரப்புரையின் விளைவுதான் என்பதை பின்னர் உணர்ந்தேன். ஒருவர் இந்த விருதுகளைப் பெறுவது அவர்களின் தகுதியின் காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நான் அவற்றைக் கைவிட ஆரம்பித்தேன்" என்று ஷா கூறினார்.

    இருப்பினும், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற சிவில் விருதுகளைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் கூறினார்.

    "நான் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றபோது, என் தொழில் வாழ்க்கையைப் பற்றி எப்போதும் கவலைப்பட்ட என் மறைந்த தந்தையை நினைவு கூர்ந்தேன்.

    அந்த மரியாதைகளைப் பெற நான் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றபோது, நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன். அந்த நேரத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று நசீருதீன் ஷா கூறினார்.  

    • கதைசொல்லலில் சரிவு அங்குதான் தொடங்குகிறது.
    • இந்தித் திரைப்படத் துறையில் பணி கலாச்சாரம் பிடிக்காததால் பாலிவுட்டை விட்டு வெளியேறுவதாக அவர் அறிவித்தார்.

    பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் பான் இந்தியா படங்கள் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.

    இந்தித் திரைப்படத் துறையில் பணி கலாச்சாரம் பிடிக்காததால் பாலிவுட்டை விட்டு வெளியேறுவதாக அவர் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்தார்.

    அப்போது பான் இந்தியா படங்கள் குறித்து பேசிய அனுராக் காஷ்யப், "என் கருத்துப்படி, பான்-இந்தியா ஒரு மிகப்பெரிய மோசடி. ஒரு படத்தை உருவாக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அந்தப் படத்தைச் சார்ந்திருக்கிறார்கள்.

    அவர்களின் வாழ்க்கை முறையும் அதைப் பொறுத்தது. ஒரு படத்திற்காகச் செலவிடப்படும் பணம் முழுவதும் படத்தைத் தயாரிப்பதற்குச் செல்வதில்லை.

    அப்படிச் செய்தாலும், அது பெரும்பாலும் மிகப்பெரிய, யதார்த்தமற்ற செட்களில் செலவிடப்படுகிறது. இதில் எந்த அர்த்தமும் இல்லை. இதுபோன்ற படங்களில் 1 சதவீதம் மட்டுமே வெற்றி பெறுகிறது" என்று கூறினார்.

    மேலும் வெற்றிபெற்ற படங்களைப் பின்பற்றும் போக்கு குறித்து பேசிய அவர், 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' வெற்றிக்குப் பிறகு, எல்லோரும் தேசபக்தி படங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.

    'பாகுபலி'க்குப் பிறகு, எல்லோரும் பிரபாஸையோ அல்லது வேறு யாரையாவது வைத்து பெரிய படங்களைத் தயாரிக்க விரும்பினர். 'கேஜிஎஃப்' வெற்றி பெற்றபோது, எல்லோரும் அதைப் பின்பற்ற விரும்பினர். கதைசொல்லலில் சரிவு அங்குதான் தொடங்குகிறது" என்று தெரிவித்தார்.

    ×