search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்பு அதிகாரிகள்"

    • பேக்கரியில், குடும்பத் தலைவி ஒருவர், ரெட் வெல்வெட் என்ற பெயரில் விலை உயர்ந்த 2 கேக்குகளை வாங்கி உள்ளார்.
    • கெட்டுப் போன கேக்குகளை எடுத்துக்கொண்டு பேக்கரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நியாயம் கேட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பேக்கரி 10க்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பேக்கரியில், குடும்பத் தலைவி ஒருவர், ரெட் வெல்வெட் என்ற பெயரில் விலை உயர்ந்த 2 கேக்குகளை வாங்கி உள்ளார். பின்னர் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று மகள்களுக்கு கேக் சாப்பிட கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட இருவரும் வாந்தி வருவதாக கூறி கேக்கை துப்பி உள்ளனர்.

    இதையடுத்து அவர் கேக்கை முகர்ந்து பார்த்தபோது அது கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கெட்டுப் போன கேக்குகளை எடுத்துக்கொண்டு பேக்கரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேண்டுமானால் வேறு வாங்கிக்கொள் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் சம்பவ இடம் சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் அந்த கடையில் கேக்குகளை ஆய்வு செய்து காலாவதியாகி கெட்டுப்போன கேக்குகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார். மேலும் கெட்டுப் போன கேக்குகளை இனி விற்பனை செய்யக்கூடாது.உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதுகுறித்து அவர் கூறுகையில், கெட்டுப் போன கேக் உணவு பாதுகாப்பு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை வந்த பின்னர் பேக்கரி நிர்வாகம் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். கெட்டுப்போன கேக்கை விற்ற சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பரமத்தி வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்கரவேலு தலை மையிலான குழுவி னர், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது உணவகத்தில் வைத்திருந்த இறைச்சி, சமையல் எண்ணைய் மற்றும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த உணவு மாதிரி களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். உணவுப் பொருட்கள் தயாரிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது கண்டறி யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன், இது தொடர்பாக உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது:-

    இங்கு செயல்படும் தாபாக்கள், டிபன் கடை கள் அனைத்திலும் மது அருந்த அனுமதியும், மது விற்பனையும் நடைபெறு கிறது. வெளி மாநில மதுபானங்கள் அதிக அளவில் விற்கப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் விரும்பி தாபாக்களுக்கு செல்கின்றனர்.

    தீபாவளி அன்று தாபாக்களில் விற்பனை செய்த உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் சிலர் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதேபோன்று தியேட்டர்களில் வழங்கப்ப டும் திண்பண்டங்களும் சுகாதாரமற்று இருக்கிறது. எனவே தியேட்டர்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். 

    ×