என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food Safety Officers"

    • பேக்கரியில், குடும்பத் தலைவி ஒருவர், ரெட் வெல்வெட் என்ற பெயரில் விலை உயர்ந்த 2 கேக்குகளை வாங்கி உள்ளார்.
    • கெட்டுப் போன கேக்குகளை எடுத்துக்கொண்டு பேக்கரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நியாயம் கேட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பேக்கரி 10க்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பேக்கரியில், குடும்பத் தலைவி ஒருவர், ரெட் வெல்வெட் என்ற பெயரில் விலை உயர்ந்த 2 கேக்குகளை வாங்கி உள்ளார். பின்னர் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று மகள்களுக்கு கேக் சாப்பிட கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட இருவரும் வாந்தி வருவதாக கூறி கேக்கை துப்பி உள்ளனர்.

    இதையடுத்து அவர் கேக்கை முகர்ந்து பார்த்தபோது அது கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கெட்டுப் போன கேக்குகளை எடுத்துக்கொண்டு பேக்கரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேண்டுமானால் வேறு வாங்கிக்கொள் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் சம்பவ இடம் சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் அந்த கடையில் கேக்குகளை ஆய்வு செய்து காலாவதியாகி கெட்டுப்போன கேக்குகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார். மேலும் கெட்டுப் போன கேக்குகளை இனி விற்பனை செய்யக்கூடாது.உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதுகுறித்து அவர் கூறுகையில், கெட்டுப் போன கேக் உணவு பாதுகாப்பு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை வந்த பின்னர் பேக்கரி நிர்வாகம் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். கெட்டுப்போன கேக்கை விற்ற சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.
    • ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதி காரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலர்கள் குழுவினர் குளிர்பா னகடைகள், பழக்கடைகள், பழச்சாறு, ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில்பெட்டிகள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்து 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.

    அப்போது கோடை காலத்தில் கடைபிடிக்க வே ண்டிய வழிமுறைகள்குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலி தாம்பிகை கூறியதாவது:- குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்பவர்கள், தாங்கள்உபயோக ப்படுத்தும் ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.அதிக வண்ணங்களை குளிர்பானத்தில் சேர்க்க கூடாது. குளிர் பானம் தயாரிக்கும் இடம் சுத்தமா கவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்பவர்கள், தரமான பழங்களை பயன்படு த்துவதோடு, அதற்கு தேவையான தண்ணீர்,பால் போன்றவை தரமானதாக இருக்கவேண்டும்.பொதுமக்கள் குளிர்பானம், ஐஸ்கள்மலிவான விலையில்அதிக வண்ணங்களில் இருந்தால் அவற்றை உண்ணக்கூடாது. குளிர்பான பாட்டில்கள், உரிய லேபிள் விவரங்கள், தயாரிப்பு, காலாவதி தேதி அறிந்து பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கோடைகாலம் முழுவதும் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். விதிமீறும் உணவு வணிகர்கள் மீதுசட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும். உணவு தொடர்பா னபுகார்களை 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என்று அறிவித்துள்ளனர்.

    • பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஆகியோர் உத்திரவின் கீழ் மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்துதலின் படி பவானி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை பவானி நகர அலுவலர் சதீஷ்குமார், வட்டார அலுவலர் லட்சுமி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    15-க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முறை யான லேபிள் விபரம் இல்லாத பிரட் வகைகள் சுமார் 3.5 கிலோ கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

    முட்டை பப்ஸ் வகைகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டி கவர்கள் 1.2 கிலோ கைப்பற்றப்பட்டது.

    இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க செயற்கை நிறம் பயன்படுத்தக்கூடாது எனவும், உரிமம் பெறாத கடைகள் உடனடியாக உரிமம் பெற அறிவுறுத்தப் பட்டு 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு தரம் குறைவு பற்றிய புகாருக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுவினரால் சோதனை நடத்தப்பட்டது.
    • உணவு பொருட்களையும் தனித்தனியே இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெருந்துறை தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் சமையலறை, மூலப்பொருட்கள் இருப்பு அறை மற்றும் உணவு கூடம் ஆகிய இடங்களில் பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவினரால் சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையின்போது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்படி தரமான மூலப் பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து நோயாளிகளுக்கு வழங்குவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

    மேலும் மூலப் பொருட்களை பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கும் முறை மற்றும் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்களை கவனித்து வாங்கி, காலாவதி தேதி முடியும் முன்பே அதனை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

    மூலப் பொருட்களை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். உணவு பொருட்களையும், உணவு பொருள் அல்லாத பொருட்களையும் தனித்தனியே இருப்பு வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளிலும் பூச்சி தொற்று நடவடி க்கைகள் சீரான இடை வெளிகளில் மேற்கொ ள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் தலைக் கவசம், முகவுரை, கையுறை, ஏப்ரன் போன்ற உணவு பாதுகாப்பு கவசங்களை அணிந்து தன் சுத்தம் பேணுவதுடன், தொற்று நோய் தடுப்பு நடவடி க்கைகள் மேற்கொ ண்டதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ் வைத்தி ருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை மூடி வைத்து உடனுக்குடன் நோயாளிகளுக்கு வழங்குவதுடன், ஒவ்வொரு முறையும் அதில் உணவு மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி உதவி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர்.கண்ணன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
    • 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் படியும், சத்தியமங்கலம் நகர பகுதியில் உள்ள பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வில் அசைவ ஓட்டல்களில் செயற்கை வண்ணம் கலந்து சில்லி சிக்கன் தயாரித்து விற்பனை செய்த 2 கடைகள் கண்டறியப்பட்டு ஆயிரம் ரூபாய் வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் சில்லி புரோட்டா தயாரிப்புக்கு பழைய புரோட்டாவை பயன்படுத்திய ஒரு ஓட்டல் உரிமையாளருக்கு ரூபாய் ஆயிரம் அபராதமும், அஜினோமோட்டோ பயன்படுத்திய ஒரு கடைக்காரருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.

    கோபிசெட்டபாளையம் நகர பகுதியில் உள்ள அசைவ உணவகங்கள், பேக்கரி கடைகள் மற்றும் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது

    ஆய்வில் சுகாதாரம் இல்லாத 2 கடைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு கிடைக்கும் தலா ரூ.1000 வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை நியூஸ் பேப்பரில் வைத்து உண்பதற்கு கொடுத்த 2 கடைகளுக்கு ரூ.1000 வீதம் 2 கடைகளுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், பானி பூரி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் தரமான பானி பூரியை பயன்படுத்த வேண்டும் எனவும் பானி பூரி ரசத்தில் செயற்கை வண்ணம் ஏதும் சேர்க்கக் கூடாது எனவும், உணவு பாதுகாப்பு உரிமம் பானி பூரி கடைக்காரர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும், முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    ஆய்வில் சத்தியமங்கலம் நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம், கோபி நகரம் உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தைவேல் மற்றும் புஞ்சை புளியம்பட்டி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

    • மூட்டை மூட்டையாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல்.
    • நோய் பாதிப்புக்குள்ளாக்கும் பாக்டீரியாக்களால் ஆபத்து.

    ஆட்டுக்கால் பாயா... அசைவ பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் இந்த உணவு ஓட்டல்களில் அதிகம் விற்பனையாகும் உணவு வகைகளிலும் முதலிடத்திலேயே உள்ளது.

    இடியாப்பத்தை பாயாவில் பிசைந்து சாப்பிடுவது தனி ருசியை தரும். பரோட்டா மற்றும் சாதத்துடனும் பலர் ஆட்டுக்கால் பாயாவை சேர்த்து சாப்பிடுபவர்களும் உண்டு.

    சென்னையில் சமீப காலமாக கெட்டுப்போன இறைச்சி தொடர்ச்சியாக பிடிபட்டு வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடத்தி வரப்பட்ட 1,700 கிலோ கெட்டுப்போன இறைச்சி பிடிபட்டதை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை மூட்டை மூட்டையாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

    இது "ஆட்டுக்கால் பாயா" பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கெட்டுப்போன ஆட்டுக்கால்களை ஆய்வு செய்து பார்த்த போது அதில் நோய் பாதிப்புக்குள்ளாக்கும் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    மாதக் கணக்கில் எந்த வித பாதுகாப்பு அம்சங்களும் இன்றி குடோனில் மூட்டையாக போடப்பட்டிருந்த ஆட்டுக்கால்கள் ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஒரு வேளை இந்த கெட்டுப்போன ஆட்டுக் கால்கள் ஓட்டல்களில் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டிருந்தால் அதனை சாப்பிட்டவர்கள் கடுமையான உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.

    கெட்டுப் போன இறைச்சிகளை சமைக்கும் போது உணவும் கெட்டுப் போய்விடும். சில நேரங்களில் நாம் ஓட்டல்களில் சாப்பிட்டதும் வயிறு உப்பிக் கொண்டு வலி ஏற்படும். பின்னர் வாந்தி வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

    அந்த வகையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை வைத்து சமைக்கப்படும் ஆட்டுக்கால் பாயா விஷமாகும் ஆபத்தும் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது போன்ற பாயாக்களை சாப்பிட்டால் அதிக அளவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீர்சத்து குறைந்து உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஓட்டல் உணவுகளில் எப்போதுமே கவனம் தேவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×