என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்பான கடை"

    • 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.
    • ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதி காரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலர்கள் குழுவினர் குளிர்பா னகடைகள், பழக்கடைகள், பழச்சாறு, ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில்பெட்டிகள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்து 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.

    அப்போது கோடை காலத்தில் கடைபிடிக்க வே ண்டிய வழிமுறைகள்குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலி தாம்பிகை கூறியதாவது:- குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்பவர்கள், தாங்கள்உபயோக ப்படுத்தும் ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.அதிக வண்ணங்களை குளிர்பானத்தில் சேர்க்க கூடாது. குளிர் பானம் தயாரிக்கும் இடம் சுத்தமா கவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்பவர்கள், தரமான பழங்களை பயன்படு த்துவதோடு, அதற்கு தேவையான தண்ணீர்,பால் போன்றவை தரமானதாக இருக்கவேண்டும்.பொதுமக்கள் குளிர்பானம், ஐஸ்கள்மலிவான விலையில்அதிக வண்ணங்களில் இருந்தால் அவற்றை உண்ணக்கூடாது. குளிர்பான பாட்டில்கள், உரிய லேபிள் விவரங்கள், தயாரிப்பு, காலாவதி தேதி அறிந்து பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கோடைகாலம் முழுவதும் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். விதிமீறும் உணவு வணிகர்கள் மீதுசட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும். உணவு தொடர்பா னபுகார்களை 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என்று அறிவித்துள்ளனர்.

    • ரூ.20 ஆயிரம் பறிமுதல்
    • லாட்டரி விற்பனை நடை பெறுவது தெரியவந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோக மாக நடைபெற்று வருகிறது.

    இதை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் நட வடிக்கை மேற்கொண்டுள் ளார். தனிப்படை அமைக் கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது. இருப்பினும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் மாநகர பகுதியில் சப்ளை செய்யப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் கிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அந்த பகுதியில் உள்ள குளிர்பான கடை ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடை உரிமையாளர் அன்பு குமார் (48) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரூ.20,030-ஐ பறி முதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பு குமாரி டம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குமரி மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ப வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

    லாட்டரி விற்பனை நடை பெறுவது தெரியவந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×