search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் வடசேரியில் குளிர்பான கடையில் ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
    X

    நாகர்கோவில் வடசேரியில் குளிர்பான கடையில் ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

    • ரூ.20 ஆயிரம் பறிமுதல்
    • லாட்டரி விற்பனை நடை பெறுவது தெரியவந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோக மாக நடைபெற்று வருகிறது.

    இதை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் நட வடிக்கை மேற்கொண்டுள் ளார். தனிப்படை அமைக் கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது. இருப்பினும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் மாநகர பகுதியில் சப்ளை செய்யப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் கிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அந்த பகுதியில் உள்ள குளிர்பான கடை ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடை உரிமையாளர் அன்பு குமார் (48) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரூ.20,030-ஐ பறி முதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பு குமாரி டம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குமரி மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ப வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

    லாட்டரி விற்பனை நடை பெறுவது தெரியவந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×