search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுநோய்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
    • எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

    இதனால் அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது. அதன்பின் கேத் மிடில்டன், தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில் கேத் மிடில்டன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் கேத் மிடில்டன் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

    லண்டனில் ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் வயிற்று அறுவை சிகிச்சைக்கு நான் உட்படுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை வெற்றி கரமாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்சுக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான் பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.

    இங்கிலாந்து மன்னரும், மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர்.
    • சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கித்வாய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மல்லிகார்ஜுன் (வயது 10) என்ற சிறுவன் தனது பெற்றோரிடம் போலீஸ் அதிகாரியாக விரும்புவதாக கூறினான்.

    இது பற்றி பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், பெங்களூரு நிவாரண அமைப்பு இணைந்து பெங்களூரு வடக்குப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதாவத்திடம் உதவி கேட்டனர்.

    அதன்படி அவர் சிறுவனுக்கு உதவி செய்தார். நேற்று மல்லிகார்ஜூன் போலீஸ் சீருடை அணிந்து போலீஸ் ஜீப்பில் துணை கமிஷனர் அலுவலகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை காட்டப்பட்டது. போலீஸ் சீருடையில் இடுப்பில் கை துப்பாக்கி, கையில் போலீஸ் லத்தியுடன் அவரை போலீஸ் துணை கமிஷனர் அமரும் நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது சிறுவன் மல்லிகார்ஜுன் நான் வளர்ந்ததும் டிசிபி ஆகுவேன்' என துணை கமிஷனர் சைதுலு அதாவத்திடம் விருப்பம் தெரிவித்தான். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்களை தொட்டு பார்த்து அவற்றின் தகவல்களைப் பெற்றான். மேலும் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பார்த்தான்.

    • புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.
    • தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடோமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

    புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.

    ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டை போல ரசாயனம் சேர்க்கப்படாத வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. அதே போல், கடந்த வாரம் கோவாவில் உள்ள மபுசா நகரின், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு நகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார்.

    இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்த பிரபல நடிகையான டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் டோலி சோஹி சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். 'கலாஷ்', 'ஹிட்லர் திதி', 'டெவோன் கே தேவ் மகாதேவ்', 'ஜனக்' போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார்.


    அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அடுத்த நாளே டோலிசோஹி மரணம் அடைந்திருப்பது இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக சோம்நாத் அறிவிப்பு.
    • சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு சிசிச்சை.

    ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்துக்கு புற்றுநோய் கண்டறியப்படுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதாக தெரிவித்துள்ளார்.

    சந்தியான்- 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்த நாளில் உடலில் சில பிரச்சினைகள் இருந்ததை உணர்ந்ததாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    தற்போது, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என்றும் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன் என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். சிகிச்சை முடிந்து 5ம் நாளிலேயே சோம்நாத் வழக்கமான பணிக்கு திரும்பியுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மகேந்திரகிரியில் நடைபெற்ற இஸ்ரோ மைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், சோம்நாத் பங்கேற்றிருந்தார்.

    • முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றது.
    • என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுன்க் நேரில் சந்தித்து பேசினர். மன்னர் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மன்னர் சார்லஸ், "பல்வேறு அற்புதமான தகவல்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் எனக்கு வந்துள்ளன. இவை என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன," என்று தெரிவித்தார்.

    "நாங்கள் அனைவரும் உங்களுக்கு பின்புலமாக இருக்கிறோம். இந்த தேசம் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது," என்று மன்னர் சார்லஸ்-இடம் ரிஷி சுனக் தெரிவித்தார்.

    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

    பிரபல இந்தி நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் கவிதா சௌத்ரி போராடி வந்த நிலையில், தற்போது தன் 67ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த 'உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. கிரண்பேடிக்கு பிறகு இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவரது கஞ்சன் சௌத்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது.

    இந்த சீரியலில், கல்யாண் சிங் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த கவிதா, அக்கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் 90களின் பிரபலமான 'சர்ஃப் எக்ஸல்' விளம்பரங்களில் 'லலிதா ஜி' எனும் கதாபாத்திரத்திலும் தோன்றி, அன்றைய தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

    இந்நிலையில், கவிதா நேற்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பார்வதி தேவி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • இந்தியாவில் 5 வகையான புற்றுநோய்தான் அதிக அளவில் ஏற்படுகிறது.
    • பெண்களில் 29 பேரில் ஒருவர் மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

    உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த நாடான இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், வயிறு புற்றுநோய் ஆகிய 5 வகையான புற்றுநோய்தான் அதிக அளவில் ஏற்படுகிறது.

    நம் நாட்டில் 9 பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களில் 68 பேரில் ஒருவர் நுரையீரல் புற்றுநோயாலும், பெண்களில் 29 பேரில் ஒருவர் மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    நம் நாட்டில் உத்தரபிரதேசத்தில்தான் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டில் 2 லட்சம் பேருக்கு இந்த நோய் ஏற்பட்டது.

    இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் 1 லட்சத்து 21 ஆயிரம் பேரை புற்றுநோய் தாக்கி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காளத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் பேரும், பீகாரில் ஒரு லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் புதிதாக 83 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கிறது.

    ஆனால் பாதிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்த வரிசை மாறுகிறது.

    அதாவது இந்த பட்டியலில் கேரளாதான் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 1 லட்சம் பேரில் 135 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் உள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் 1 லட்சம் பேரில் 122 பேருக்கு பாதிப்பு இருக்கிறது.

    இந்த பட்டியலில் டெல்லி (103 பேர்) 3-வது இடத்திலும், கர்நாடகம் (102 பேர்) 4-வது இடத்திலும், கோவா (97 பேர்) 6-வது இடத்திலும், இமாசலபிரதேசம் (92 பேர்) 7-வது இடத்திலும், உத்தரகாண்ட் (91 பேர்) 8-வது இடத்திலும், அசாம் (90) பேர்) 9-வது இடத்திலும், பஞ்சாப் (89 பேர்) 10-வது இடத்திலும் உள்ளன.

    • விழிப்புணர்வுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.
    • குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    உலகம்முழுவதும் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் பலியாகி வருகின்றனர். ஆறு மரணங்களில் ஒரு மரணம் புற்றுநோயால் ஏற்படுகிறது. பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை பரப்புவதும் இதில் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், விழிப்புணர்வுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.


     

    ஆரம்பநிலையில் இந்த நோயை கண்டறிதலையும் சிகிச்சைகள்மூலம் புற்றுநோயை குணப்படுத்துதலை அதிகரிக்கவும் 2008-ம் ஆண்டு முதல் பிப்- 4 ந்தேதி 'உலக புற்றுநோய் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

    புற்றுநோய் இறப்பு விகிதத்தை, புற்றுநோய்த் தாக்கத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், பூங்காக்கள், சமூகக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், தெருக்களிலும் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல முயற்சிகள் உலக புற்றுநோய் நாளில் நடத்தப்படுகின்றன. புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு தைரியத்தை ஊட்டுவதற்காக சிகையலங்காரம் செய்பவர்கள் பலர் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்கின்றனர்.

    உடலின் செல்கள், ஜீன்களில் ஏற்படும் மரபுவழி கோளாறு மற்றும் உடலில் ஏற்படும் பல விளைவுகளால் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.


     

    போதை பாக்குகள், புகையிலை, சிகரெட், மதுப்பழக்கத்தை கைவிட்டு புற்றுநோய் வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும். இதனால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். புற்றுநோய் வராமல் காப்பது நம் அனைவரது கடமை ஆகும்.

    புற்றுநோயைத் தடுப்பது மற்றும் கண்டறிதல், சிகிச்சையில் பிரமிக்க தக்க வகையிலான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக புற்றுநோய் தினத்தின் 'கருப்பொருள்' புற்றுநோய்க்கு முன்னுரிமை அளிப்பதாகும். புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

    • பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு.
    • தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

    இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார்.

    கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது.

    பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

    தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
    • இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

    பின்னணி பாடகி பவதாரிணி, தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர். இவரது மென்மையான குரலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

    இவர் திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜவின் மகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி.

    பவதாரிணி அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய 'மயில்போல பொண்ணு ஒண்ணு..' பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

    முதன்முதலாக 'ராசய்யா அப்படீங்கற' படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியுள்ளார்.

    இவர் நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் நுழைந்தார். இவர் ரேவதி இயக்கிய 'பிர் மிலேங்கே' படத்திற்கும் இசையமைத்தார். இதுபோன்று சுமார் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    மேலும், இவர் 'வெள்ளிச்சி' என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார். 

    அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் படு ஹிட்டானது. மேலும், இவர் பாடிய கல பாடல்கள் ஹிட்டானது. அதில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் 'முத்தே முத்தம்மா', தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய ஹிட்டான பாடல் 'ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா..' என்பதாகும்.

    இதைத்தவிர, அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, டைம், பிரண்ட்ஸ், தாமிரபரணி, கோவா, மங்காத்தா உள்பட 23 படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மலையாளத்திலும் பவதாரிணி சில பாடல்களை பாடியுள்ளார்.

    இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

    • ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
    • கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சற்றுமுன் காலமாகி இருக்கிறார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், இலங்கையில் அவர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது சுமார் 47.

    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்தார்.

    இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பவதாரிணியின் கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். தம்பதிக்கு குழந்தை இல்லை.

    ×