search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்கள்"

    • மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
    • யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

    ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்று என்று கூறி வாட்ஸ்அப் செயலி மூலம் 'கியூஆர்' குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்போது பணம் பறித்து உள்ளனர். எனவே யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.
    • நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உட்பட பள்ளிகள் அமைந்துள்ளது.பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

    அப்போது ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களால் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக பள்ளி மாணவ, மாணவிகள் ரோட்டை கடக்கும் இடத்தில் டிவைடர்கள் வைக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி சில ஆண்டுகளுக்கு முன், சோமவாரப்பட்டியில், மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்கப்பட்டது. சில மாதங்களில் அங்கிருந்து அகற்றப்பட்ட டிவைடர் மீண்டும் வைக்கப்படவில்லை.

    இதே போல் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பொட்டையம்பாளையம், லிங்கம்மாவூர், புதூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வருகின்றனர்.நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே குடிமங்கலம் போலீசார், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • பெற்றோர் தங்களது குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்.
    • பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும்.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஆலக்குடி கிராமத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது அவர் மரக்கன்றுகள் நட்டு வைத்து பேசியதாவது:-

    பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு செல்லும் பெண்குழந்தைகளிடம் வெளியில் நடக்கும் விஷயங்களை தாமாக முன்வந்து ஒரு நல்ல நண்பரை போல் அணுகி விசாரிக்க வேண்டும்.

    தற்போதுள்ள சமூக சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

    பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கபடுவார்கள். பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும் .

    பொதுமக்களுக்கு உண்டான பிரச்சனைகள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட மற்றும் தாலுக்கா அளவிலுள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தால் என்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு கிடைக்கும். பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் செயலர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுந்தரராஜன், வக்கீல் பிரகாஷ், சமூக ஆர்வலர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் பேசினர்.

    இம்முகாமில் 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன்அடைந்த னர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் செய்திருந்தார். முடிவில் ஆலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசாமி நன்றி கூறினார்.

    • ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அச்சம் தவிர் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்குரிய வழிவகைகளை எடுத்து கூறி உரையாற்றினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அச்சம் தவிர் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால திட்டம் தொடர்பான அச்சத்தையும் பொதுத்தேர்வு தொடர்பான அச்சத்தையும் போக்குவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பாக அச்சம் தவிர் நிகழ்வு -1 நடத்தப்பட்டதுபள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கி மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்குரிய வழிவகைகளை எடுத்துக் கூறி உரையாற்றினார்.

    பிரபல பட்டிமன்ற பேச்சாளரும்எழுத்தாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான சுமதி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் துணிவும் உண்மையும் மிக்கவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் . ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் .ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதித்து நடக்க வேண்டும். இலக்கணப் பிழையின்றி பேச வேண்டும். ஆங்கிலத்தை தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். எத்தனை முறை விழுகிறாயோ அத்தனை முறையும் எழுந்து நில் .அதுவே உனக்கு வெற்றி. ஒவ்வொரு மாணவனும் ஒழுக்கத்துடனும் நாட்டுப்பற்றுடனும் இருக்க வேண்டும் .பெற்றோர்களே முதல் கதாநாயகர்கள், எனவே அவர்களை போற்றி நடக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் , பொருளாளர் சுருதி , ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் நன்றி கூறினார். 

    • ஒடிசாவிலிருந்து மேலும் புதிய தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி வருவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றார்.
    • காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் இயங்கும் இடம் பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மையம் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கிறது.

    திருப்பூர்:

    மத்திய அரசின் டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் பயிற்சி முடித்த ஒடிசா மாநில தொழிலாளர்கள், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் இயங்கும் இடம் பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மையம் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கிறது.

    தங்கள் மகன், மகளை பணியிடத்தில் நேரில் பார்த்து நலம் விசாரிப்பதற்காக ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்திலிருந்து பெற்றோர் 56 பேர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கீர்த்திவாசன் தலைமையிலான அதிகாரிகள் திருப்பூர் வந்தனர்.இக்குழுவினர் அவிநாசி - தெக்கலூர் மற்றும் பல்லடம் - காமநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தங்கள் மகன், மகளை சந்தித்து நலம் விசாரித்தனர்.

    தங்கும் விடுதி, கேன்டீன், பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளும் பெற்றோரும் பார்வையிட்டனர்.அப்போது பேசிய கஞ்சாம் மாவட்ட அதிகாரி கீர்த்திவாசன், திருப்பூரில் பணிபுரியும் கஞ்சாம் மாவட்டத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களில் வீடு கட்டியுள்ளனர். அவர்களின் குடும்ப பொருளாதாரம் மேம்பட்டுள்ளது என்றார். இடம் பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மைய மேலாளர் ராமசாமி கூறுகையில், ஒடிசாவிலிருந்து வந்த பெற்றோரை பல்வேறு நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று தொழில் சூழல் குறித்து உணரச்செய்கிறோம்.தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பணிபுரிவதை பெற்றோர் உறுதி செய்துகொள்கின்றனர். இதன்மூலம் ஒடிசாவிலிருந்து மேலும் புதிய தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி வருவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றார்.

    • பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்
    • பெற்றோர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஸ்காட் சர்வதேச பள்ளி 10.08.2012 ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை அப்போதைய தமிழக கவர்னர் ரோசய்யா திறந்து வைத்தார். இப்பள்ளியில் தொடக்கத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுடன் இயங்கி வந்தது. அதன் பின்னர் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து தற்போது பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் பள்ளியை தொடர்ந்து நடத்த இயலாது அதனால் இன்று முதல் பள்ளி செயல்படாது என்று நேற்று மாலை பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் ஆசிரியர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் மணிமுத்து உள்ளிட்ட போலீசார் பெற்றோர் - பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பெற்றோர் கூறுகையில், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்து கல்வி கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எங்களது குழந்தைகள் படித்து வந்த ஸ்காட் பள்ளியை உடனடியாக மூடுவதாக அந்த நிர்வாகம் கூறுகிறது. எங்களது குழந்தைகளை வேறு நல்ல பள்ளியில் உடனே சேர்க்க இயலாது. நடப்பு கல்வி ஆண்டு மட்டும் இப்பள்ளியை இயக்கி அதன் பின்னர் பள்ளியை மூடினால் நாங்கள் வேறு நல்ல பள்ளியை தேர்வு செய்து அதில் அடுத்த கல்வியாண்டில் எங்களது குழந்தைகளை சேர்க்க இயலும்.

    பள்ளியை மூடுவது குறித்து முன்கூட்டியே தகவல் கொடுப்பதோடு உரிய கால அவகாசமும் அளிக்க வேண்டும். உடனே பள்ளி மூடுவது எங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பும், எதிர்காலமும் கேள்வி குறியாகும். எங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான் நாங்கள் கல்விக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்கிறோம். குழந்தைகளின் நலனுக்காக நாங்கள் போராடவும் தயங்க மாட்டோம் என்றனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பள்ளியை 2 நாள் நடத்துவதாகவும், 2 நாட்களுக்குள் தலைமை நிர்வாகத்திடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர் .இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • புதிய வகுப்பில் மாணவர்கள் பலரும் சேர்ந்து பாடங்களை படிக்க தொடங்கி உள்ளனர்.
    • அரசு தரப்பில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் அதே வேளையில், புதிய வகுப்பில் மாணவர்கள் பலரும் சேர்ந்து பாடங்களை படிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் பெற்றோர் பலர் தொழில் நகரமான திருப்பூரை நோக்கி படையெடுப்பு, வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு குடிபெயர்ந்து பள்ளிகளில் சேர்வது என அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி பணம் கேட்பதாகவும், சில பள்ளிகளில் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்காமல் திருப்பி அனுப்புவதகாவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுயதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 35-வது வார்டு விஜயாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்புக்கு மகனை சேர்க்க சென்றோம். அப்போது, மாணவர் சேர்க்கைக்கு உங்களால் முடிந்த தொகை என்று ஆரம்பித்து, ரூ. 1000-ம் வரை கேட்டார்கள். எதற்கு, அரசுப் பள்ளியில் பணம் கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பினோம். வகுப்புகளை நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். ஆகவே அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என அங்கிருந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பெற்றோர் பலரும், எதிர்ப்பு தெரிவிக்க பணம் வாங்கவில்லை என்றனர்.

    இடுவம்பாளையம் அரசுப் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியில் சேர வரும் மாணவர்களை திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் வடிவேல் கூறும்போது, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்க்காததால், பலரும் கல்வி பெறுவது தடைபடுகிறது. காரணத்தை ஆசிரியர்கள் சொல்ல மறுப்பதால், பெற்றோர்கள் பலரும் செய்வதறியாது எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி. அலுவலகங்களுக்கு பரிந்துரை கடிதம் பெறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி என்பது கட்டாயம். ஆனால் பள்ளி மாணவ, மாணவிகளை பல்வேறு காரணங்களை சொல்லி புறக்கணிப்பதால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. சில அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தவர்கள், தமிழ்வழிக்கு மாறுவதென்றாலும் அவை உடனடியாக கிடைப்பதில்லை.

    குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அலைபேசிக்கு ஓடிபி எண் வரும். அதன் பின்னர் தான் வகுப்பில் சேர்க்க முடியும் என்கின்றனர். சுமார் 3 மாதங்கள் ஆகிறது என்றால், அந்த மாணவர் தமிழ்வழியில் படிப்பதா? அல்லது ஆங்கில வழியில் படிப்பதா? என்ற குழப்பம் மேலோங்கிறது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்ஆசிரியை இல்லையெனக் கூறி, எல்.கே.ஜி வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதில்லை என்றார்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறும்போது, அரசுப் பள்ளிகளில் பணம் பெறக்கூடாது. சில பள்ளிகள் மீது புகார்கள் வந்தன. அவற்றை எச்சரித்துள்ளோம். அதேபோல் மாணவர் சேர்க்கை புறக்கணிப்பு தொடர்பாக, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படித்து வரும் நிலையில், அங்கு 47 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அரசு தரப்பில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் எல்.கே.ஜி உட்பட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர்கள் தயங்கலாம். இருக்கும் ஆசிரியர்களை வைத்து தான், வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆங்கிலவழியில் இருந்து தமிழ்வழியில் படிக்க நினைப்பவர்களை எளிதில் மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

    ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் செல்போனே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
    முனீச்:

    ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கிகொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

    இந்த போரட்டத்தை ஏழு வயது எமில் என்ற சிறுவனின் தலைமையில் தான் நடைபெற்றது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. “இந்த போரட்டத்துக்கு பிறகாவது பெற்றோர்கள் செல்போன்களை பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைகளை பார்ப்பார்கள்” என்று நம்புகிறோம் என எமில் கூறியுள்ளார்.

    ஹம்பர்க்கில் எமில் தலைமையில் நடந்துள்ள இந்த போராட்டம் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி. 
    டெல்லியின் கொடுமைப்படுத்திய மகன் மருமகளுக்கு எதிராக பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் மகன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்த 78 வயது முதியவர் தனது 74 வயது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். அவரது மகன், மருமகள் இருவரும் பெற்றொரை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களை துன்புறுத்தி கொல்ல முயற்சி செய்தனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகன் மருமகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். மகன் மற்றும் மருமகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், அவர்களை அமைதியாக வாழ விட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  #tamilnews

    ×