என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்டிகை காலம்"

    • வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலரும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டுபிடிப்பு.
    • இனிப்பு சாப்பிடும் முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டுவிடுங்கள்.

    அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலருக்கும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இனிப்புகள், எண்ணெய் பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகள். நம் வீடுகளில் சாப்பிடுவது மட்டுமின்றி, உறவினர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கொடுப்பதையும் தவிர்க்க இயலாது. தீபாவளி, கண்டிப்பாக இனிப்புகள் இல்லாமல் முழுமையடையாது. ஆனால் தீபாவளி திண்பண்டங்களால் எடைக்கூடாமல் இருக்கவேண்டுமானால், கீழே குறிப்பிட்டுள்ளவற்றை கவனத்தில்கொண்டு சாப்பிடுங்கள்.

    இனிப்புக்கு முன் புரதம் அல்லது நார்ச்சத்து

    இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள பொருட்களை சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கும். இதனால் இனிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டோம்.

    நீரேற்றம்

    விழாக்காலங்களில் நமது கவனம் முழுவதும் கொண்டாட்டத்தில்தான் இருக்கும். வேளைக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதையே மறந்துவிடுவோம். அம்மா சுடும் வடை, வீட்டில் இருக்கும் இனிப்பை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்வோம். தண்ணீரும் போதுமான அளவு எடுத்துக்கொள்ளமாட்டோம். அதனால் எடை அதிகரிப்பை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். இதுவும் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால் மற்ற திண்பண்டங்களை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டோம்.

    சாப்பிட வேண்டுமா?

    தீபாவளி என்பதால் உறவினர்கள் வீட்டிற்கு அதிகம் செல்லவேண்டியிருக்கும். அவர்களும் பாசத்தில் நிறைய உணவுகளை எடுத்துவந்து சாப்பிட கொடுப்பார்கள். அதை சாப்பிடுவதற்கு நம் வயிற்றில் இடமே இருக்காது. இருப்பினும் அவர்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக எடுத்துக்கொள்வோம். அதை செய்யவேண்டாம். உண்மையில் உங்களுக்கு சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடலாம் என தோன்றினால் மட்டும் சாப்பிடுங்கள். அவர்கள் கொடுத்த அன்பிற்காக துளி அளவு மட்டும் எடுத்து சாப்பிட்டால் போதுமானது. வயிறு நிரம்பியிருக்கும்போது அடுத்தடுத்து உணவை உள்ளே செலுத்தாதீர்கள்.


    அதிகளவு இனிப்பு பலகாரங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்

    திரையை தவிர்க்கவும்

    சாப்பிடும்போது டிவி பார்த்துக்கொண்டு அல்லது ஃபோனில் பேசிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் டிவி பார்க்கும்போதோ அல்லது ஃபோனில் பேசும்போதோ நமது கவனம் உணவில் இருக்காது. கவனச்சிதறல், உட்கொள்ளல் அளவை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுங்கள்.

    உடற்பயிற்சியை தொடரவும்

    விடுமுறை என்றாலே நமக்கு ஓய்வுதான். அதுவும் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உணவுகள் அதிகரிக்கும்போது உடற்பயிற்சி தவிர்க்கப்படுகிறது. இது எடை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கூடுதல் முயற்சிகள் இல்லாமல், அதே எடையை நிர்வகிக்க உதவும் ஒரு மிகப்பெரிய வழியாகும்.

    ஆரோக்கியமாக இருப்பதும், குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் நினைவுகளை போற்றுவதற்கான மற்றொரு வழியாகும். எனவே, இந்த தீபாவளியில் ஒரு சில எளிய முயற்சிகளை எடுப்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

    • கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.
    • சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை- தூத்துக்குடி இடையே வழக்கமான கட்டணம் - ரூ.4,796, இன்றைய - கட்டணம் ரூ.14,281 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னை - மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,300, இன்றைய - கட்டணம் ரூ.17,695 என நிர்ணயம்.

    சென்னை- திருச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.2,382, இன்றைய கட்டணம் ரூ.14,387 என நிர்ணயம்.

    சென்னை- கோவை இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,485, இன்றைய கட்டணம் ரூ.9,418 என நிர்ணயம்.

    சென்னை - சேலம் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,537, இன்றைய கட்டணம் - ரூ.8,007 என நிர்ணயம்.

    சென்னை - திருவனந்தபுரம் இடையே ரூ.3,821, இன்றைய கட்டணம் ரூ.13,306 என நிர்ணயம்.

    சென்னை- கொச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,678, இன்றைய கட்டணம் ரூ.18,377 என நிர்ணயம்.

    சென்னை- மைசூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,432, இன்றைய கட்டணம் ரூ.9,872 என நிர்ணயம்.

    சென்னை - தாய்லாந்து இடையே வழக்கமான கட்டணம் - ரூ.8,891, இன்றைய - கட்டணம் ரூ.17,437 என நிர்ணயம்.

    சென்னை- துபாய் இடையே வழக்கமான கட்டணம் - ரூ.12,871, இன்றைய கட்டணம் - ரூ.26,752 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக,பாதுகாக்கப்பட்ட தண்ணீராக இருக்க வேண்டும்.
    • தயாரிப்பாளர்களுக்கு கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணி கர்கள், அந்த பாக்ஸில் ஸ்வீட்ஸ் தயாரிப்பு தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும்.

    உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இனிப்பு களில் சட்டத்தில் அனுமதிக்க ப்பட்ட செயற்கை வண்ண ங்களை சேர்க்கவேண்டும். அதிகப்படியான வண்ண ங்களை சேர்த்தலை தவிர்க்க வேண்டும் .

    சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விபர ங்களை தகவல் பலகை யாக உணவு விற்பனை கூடத்தில் வைக்கவேண்டும். மேலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உபயோகப் படுத்தக்கூடாது.

    சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக, பாதுகாக்கப்பட்ட தண்ணீராக இருக்க வேண்டும். சுத்தமான தண்ணீரில் தான் பொரு ட்களை சுத்தம் செய்ய வேண்டும். உணவு கையாளு தல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்ப வர்கள் கையுறைகள், தலைகவசம் மற்றும் மேலங்கிகள் ஆகியவற்றை அணிய வேண்டும்.

    அனைத்து உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 - ன் கீழ் உரிமம் ( அ ) பதிவுச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பண்டிகை காலமான தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்ட பங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும்.

    தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகை கள் சில்லறை விற்பனை செய்யும்பொழுது காட்சிப்படுத்தப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் முன் தயாரிக்க ப்பட்ட தேதி மற்றும் சிறந்த பயன்பாட்டு தேதி கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும்.

    மேலும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் 'வாட்ஸ்ஆப்' புகார் எண் 9444042322 என்ற எண்ணிலோ உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலக தொலை பேசி எண் 04652-276786 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×