என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காக்கா"

    கெவின் டிகோஸ்டா இசை மற்றும் பின்னணி இசை காமெடி படத்துக்கு ஏற்ப அமைத்திருக்கிறார்.

    மதுரையில் குடும்பத்துடன் வசிக்கும் நாயகி ரோஸ்மினின் திருமணம் மண மேடை வரை வந்து மாப்பிள்ளையான தேனி கே பரமன் மோசமானவன் என தெரிந்து நின்று விடுகிறது. அதன் பின் அவன் தொல்லை தாங்காமல் குடும்பமே சென்னைக்கு வருகிறது.

    வந்த இடத்தில் நாயகியின் தங்கை சாய் தன்யாவை கூலி வேலை பார்க்கும் சென்றாயன் காதலிக்கிறார். முதலில் அக்காவுக்கு திருமணம் நடந்தால் தான் தங்கையை தான் கரம் பிடிக்க முடியும் என சென்றாயன் அதற்கான வேலைகளிலும் இறங்குகிறார்.

    ஒரு கட்டத்தில் நாயகி ரோஸ்மினுக்கு இனிகோ பிரபாகர் மேல் காதல் வருகிறது. என் அக்காவுக்கு அவன் விரும்பியவனை திருமணம் செய்து வைத்தால் நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்கிறார் சாய் தன்யா.

    அதே நேரம் மதுரையில் இருந்து நாயகியை அடைந்தே தீருவேன் என கிளம்புகிறார் தேனி கே பரமன். இந்த முக்கோண சூழலில் நாயகி விரும்பியபடி திருமணம் நடந்ததா? சென்றாயன் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிகதை..

    நடிகர்கள்

    நாயகனாக இனிகோ பிரபாகர் திரையில் தோன்றும் நேரம் கொஞ்சம் குறைவு தான் என்றாலும் நாயகனுக்குரிய குணங்களுடன் அமைந்த ஒரு கதாபாத்திரம். மரக்கன்று நடுவதின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு இயற்கை ஆர்வலராக நடித்திருக்கிறார். நாயகியாக ரோஸ்மின். முதிர்ச்சியான நல்ல நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

    சென்றாயன், ஹீரோவை விட திரையில் அதிகம் தோன்றுபவர். ஆனாலும் தனக்கே உரிய காமெடி சென்ஸ் மூலம் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். சாய் தன்யா ஏற்கனவே சில காமெடி கலந்த காதல் படங்களில் நடித்தவர், இந்த படத்திலும் அவரின் குழந்தைத்தனம் கலந்த அந்த அழகோடு நம்மை ரசிக்க வைக்கிறார். ரோஸ்மின் முழுக்க சீரியஸ் என்றால் இவர் வரும் காட்சிகள் கலகலப்பு. இவர்களை தாண்டி நானே களத்துல இறங்குறேண்டா என இயக்குனர் தேனி கே பரமன் அவர் பங்குங்கு வந்து ரகளை செய்கிறார்.

    இயக்கம்

    இயக்குனர் தேனி கே பரமன். வன்முறை படங்களாக வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தானும் அதற்குள் சிக்கிக் கொள்ளாமல் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். பழைய கதை தான் என்றாலும் படத்தை காமெடி கலந்து கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார். ஆங்காங்கே காட்சிகளில் உள்ள இழுவையை தவிர்த்திருக்கலாம்.

    இசை

    கெவின் டிகோஸ்டா இசை மற்றும் பின்னணி இசை காமெடி படத்துக்கு ஏற்ப அமைத்திருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    சுரேஷ்குமார் ஒளிப்பதிவில் சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம் என சுற்றி சுற்றி படம் பிடித்திருந்தாலும் பார்ப்பதற்கு ஏதுவாக காட்சிகளை அமைத்திருக்கிறார்.

    ரேட்டிங்-1/5

    • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காக்கை தங்க வளையலை திருடி அதன் கூட்டில் வைத்திருந்தது.
    • மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் என்பவர் காக்கையின் கூட்டில் இந்த தங்க வளையலை கண்டெடுத்தார்.

    கேரளாவில் மஞ்சேரி என்ற கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காக்கை தங்க வளையலை திருடி அதன் கூட்டில் வைத்திருந்தது.

    மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் என்பவர் காக்கையின் கூட்டில் இந்த தங்க வளையலை கண்டெடுத்தார்.

    இதைத் தொடர்ந்து, அவர் இது குறித்து உள்ளூர் நூலகத்தில் அறிவிப்பு பலகை வைத்தார். அதனை கண்ட ஹரிதா என்ற பெண் வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் காட்டி வளையலை பெற்றுச் சென்றார்.

    இந்த சம்பவம் ஒரு அதிசயமாகவும், ஆச்சரியமான நிகழ்வாகவும் பேசப்பட்டு வருகிறது.

    பாரதீய ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை

    மதுரையில் முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மதுரையில் மாநகராட்சி நிர்வாகம் மிகுந்த பின்னடைவை சந்தித்துள்ளது தற்போது புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர் மாநகராட்சியில் துறை ரீதியாக வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேயர் என்பவர் மதிப்பிற்குரியவர். வணக்கத்திற்குரியவர். அவரது பணியில் வேறு யாரும் தலையிட அனுமதிக்க கூடாது. ஆனால் வேறு எந்த மாநகராட்சியிலும் இல்லாத ஒரு நடைமுறை மதுரை மாநகராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேயரை ஆட்டிப்படைக்க ஒரு சூப்பர்மேயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    இதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மேயருக்கு சில விவரங்கள் தெரிய வில்லை என்றால் கவுன்சில் குழு தலைவர் இருக்கிறார் மாநகராட்சி ஆணையாளர் இருக்கிறார். அவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் அதை விட்டுவிட்டு அவரது அதிகாரத்தை இன்னொருவர் பறிக்க கூடாது.

    அ.தி.மு.க. என்றும் தமிழக மக்களுக்காக சேவை செய்கின்ற இயக்கமாகும் தமிழகத்தைப் பொருத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான இயக்கம். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இளைஞராக இருக்கிறார்.அவரும் அவரது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு வகைகளில் அரசியல் செய்கிறார்.

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக அ.தி.மு.க. செய்து வருகிறது. அ.தி.மு.க. தலைவர்கள் தி.மு.க. வினரின் ஊழல்களை அவ்வப்போது வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள். அதனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை நாங்கள் தி.மு.க.வினரின் ஊழலை அமைதியான முறையில் தெரிவித்து வருகிறோம். அண்ணாமலை ஸ்பெஷல் டீ போல கூறி வருகிறார். 

    அ.தி.மு.க. எப்போதும் மக்கள் விரும்பும் இயக்கமாகும் ஆனால் பாரதிய ஜனதா நிகழ்ச்சிகளில் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இரை எங்கே  இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்காய்கள் கூடுவது வழக்கம் தான். இரை தீர்ந்த பின் அவை பறந்து விடும்.காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும். சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும்.அதுபோலதான் சில கட்சிகளுக்கு மக்கள் கூட்டம் கூடுகிறது.

    அ.தி.மு.க.வின் கருத்தாக 21 ஆண்டுகள் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தமுறையில் ஒரு கருத்தை தெரிவிக்கிறேன். அ.தி.மு.க. கடந்த 2014, 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு உள்ளது அது போல வருகின்ற தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நின்று தேர்தலை சந்திக்கட்டும் அதிமுகவும் தனித்து நின்று தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது இதனை சவாலாகவே கூறுகிறேன்.

    பிரதமர் மோடி சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். ஒரு திறமையான பிரதமரை நாடு பெற்றுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து சாதனை படைத்துள்ளார் நரேந்திர மோடி. ஆனால் தமிழக அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. 
    பக்கத்து மாநிலங்களில் கூட வரியை குறைத்து விட்டது ஆனால் திராவிட மாடல் பற்றி பேசும் தி.மு.க. அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுத்து வருகிறது. அதுபோல தேர்தல் வாக்குறுதிகளை எதையுமே என்னும் நிறைவேற்றவில்லை.இதனால் தமிழக மக்கள் தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 

    கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முதலமைச்சர் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளதாக வஞ்சப் புகழ்ச்சியாக கூறியுள்ளார். அவர் இருக்கின்ற கூட்டு றவுத்துறை அவர் விரும்பாத துறையாக இருக்கிறது.

    ஆளும் கட்சியாக அதிமுக இருந்தபோது கூட தொண்டர்களுக்கு இல்லாத உற்சாகம் இப்போது ஏற்பட்டுள்ளது .
    இவ்வாறு அவர் கூறினார்.
    ×